About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Monday, October 5, 2015

கல்லறையிலும் திருத்த முடியாத சில சில்லறைத்தவறுகள்.

வயித்தினுள் தவளை கத்தியது.ஐதான எச்.சி.எல். ஐதாக சுரந்து இரப்பை ரோட்டின் இடப்பக்க கடையில் லஞ்ச்  என்று மூளைக்கே அறிவுரை சொல்லியது.நாலு மணிக்குப்போய் கடையில் சோறென்றால் ஏன்டா இப்படி என்று நிமிர்ந்து பார்ப்பார்கள் வழியில்லை.

சோறு,!
வெச்சா?
முட்டை.

அண்ணைக்கு ஒரு பிளேட் சோறு முட்டையோட.

எல்லா மேசையும் நிரம்பி இடதுபக்க மூலையில் ஒரு கதிரையில் எதிரே இருந்தவனோடு முகம் பார்த்து சம்பிரதாயமாய் சிரித்து வைத்து சோத்தை எதிர்பார்த்து,கோலாவை உறிஞ்சிக்கொண்டிருந்தான்.
வேர்க் பண்றீங்களா?
யா.

அவனாகவே சிரித்தான்,அவனாகவே கதைத்தான்,பசி பிறாண்டியது.சோத்தைக்காணவில்லை இன்னும் அங்கலாய்த்து,
ஐயா! சோறு வரேல்ல இன்னும்,கேட்டும் இரண்டு, மூன்று நிமிடம் கடந்து மேசையில் சோறு வைத்து "தம்பி பசி பயங்கரம் போல" என்ற நிச்சயமாய் அறுபதை தாண்டிய அந்த ஆளின் முகத்தை பார்த்த போது பத்திக்கொண்டு வந்தது.
"மூடிட்டு உன் வேலையை பாத்துட்டு போய்யா !!!" என்றேன்.எதிரே இருந்தவன் பாதி கோலைவை உறிஞ்சி முடித்திருந்தான்.

 கதையை வளர்க்க விரும்பாமல்,சேறு போல குழைந்த சோற்றை கொஞ்சம் வயித்துக்குள்
அனுப்பிய பின்
"கிழத்துக்கு இந்த வயசில இப்படி ஒரு வேலை.அதில என்னோட கடுப்புக்கதை என்றேன்."எதிரில் இருந்தவனை பார்த்து.

"அவர் ஒரு ரிட்டையர்ட் வாத்தியார்"

"நிசமாவா,அப்புறம் ஏன் இங்க வந்து குப்பை கொட்டணும்.?"

"அவர் பள்ளிக்கூடத்திலையே அப்டித்தான்.கடுமையான உழைப்பாளி.இவரை பத்தி நிறைய கதைகள் இருக்கு."

"நீங்களும் அவர் ஸ்கூல்லயா படிச்சீங்க,உங்களுக்கு தெரியுமா என்ன?"

"ம்.ஏ.எல்ல எங்கட வகுப்புக்கு இவர்தான் ,பேரு ஞானசேகரன் ,தமிழ் பாடம்.அப்போ எங்களோட அபிவர்மன் என்டு ஒருத்தன் படிச்சான்.பார்த்தா சாண்டில்யன் கதைல வர்ற பேர் போல இருந்தாலும் ஆளும் சா. கதைல வர்ற ஹீரோ போலத்தான். நிச்சயமாய் நூறு வீதம் ஒரு காசநோவா கரக்டர்.எந்த பெரிய சிடுமூஞ்சு பெண்ணாய் இருந்தாலும் ஏதாவது ஒரு யட்சிணி வேலை பார்த்து மயக்கி,சிரிக்க வைத்து அதோடு முற்றும் போட்டு விடுவான்.

என் வாய்க்குள் சோறு போக அவன் வாயிலிருந்து அபிவர்மன் கதை விரிந்தது.

"ஹாய்!புதுசா?"
"என்ன?"

"சட்டை,சப்பாத்து,ரிப்பன்,நீங்க!"

"ஆமா,ரிப்பன் மட்டும் தங்கைச்சியோடது."

"ஓ,உங்க தங்கைச்சி பூமிலதான் இருக்றாளா,இல்லை ஒவ்வோரு பௌர்ணமிக்கும் தங்க ரத்தில பூமிக்கு வருவாளா?."

"வட் டூ யூ மீன்?"

"இல்லை,நீங்க மேனகை என்டா அவள் ரம்பையா இருக்கணும்."

"ஆர் யூ கிட்டிங் ஓர் பிளட்டரிங்?"

"நோ.ஐ எவர் சே தி ருத்,
மீ, அபி .... அபிவர்மன்,யூ ?"

"சப்தஸ்வரா, கோல் மீ சப்தா"

"சரிகம்பதநி,தட்டினா சங்கீதம் வருமா, அம்மா பேரு அனுராதா ஶஸ்ரீயா?"

"யூ,எகைன்!'
செல்லமாய் சீறிய போது கன்னத்தில் விழ வேண்டிய குழி கழுத்தில் விழுந்ததை கவனிக்காமலே,அவன்
ஓகே சி,யூ லேட்டர் சொல்லி போன போது சப்தாவுக்கும் மற்றவர்களை போல அதே ஸ்பார்க் யாரிவன் என்று நெற்றியில் அழகாய் ஒரு கோடு கீற வைத்தது.

இரண்டு,மூன்று,நாலு,ஐந்தாவது சந்திப்பில் பைத்தியமாகி,ஆறாவதில் நகத்தால் மேசையில் கீறியபடி போட்டில் இருந்த மரபுக்கவிதையை எழுதாமல் நோட்டில் புதுக்கவிதை எழுதினாள்,சப்தா,அவனை பக்கமாய் சாய்ந்து பார்த்துக்கொண்டே.வழமையான அழகான காதல்,

அவன் முன்னாலிருந்த,யாரிவள்,அவளோடு என்ன கதை.அடி வயிறு குறுகுறுக்க இன்டேர்வலுக்கு கேட்க வேண்டும்.

"ஹா....ய்"

"ம்"

"என்ன வரலக்ஷ்மி விரதமா?சோர்ந்து போய்"

"நீ எல்லோரடையும் இப்டிதானா?"

"புரியல்லையே"

"அவள் யாரு ஆ ரக்சியோட இழிச்சு இழிச்சு கதைச்சிட்டு இருந்தா அப்போ,"

"ஆமா,அதுக்கென்ன,ஹே,ஆர் யூ இன் ஜலஸ்,நீ என்ன என்னைய லவ் பண்றியா என்ன?"

தீர்க்கமான பார்வை பார்த்தாள்.
"யெஸ்,ஐ லவ் யூ"

"காமெடி பண்ணாத,சிரித்து விட்டு போனதை பார்த்துக்கொண்டிருந்தாள்"

அதோட சப்தஸ்வரா அந்த ஸ்கூல்ல இருந்தே போய்விட்டாள்,ஆனாலும்...

அவன் சோடா முற்றாய் காலியாகி என் பிளேட்டில் இரண்டு மிளகாய் எஞ்சி இருக்க அப்புறம் என்னாச்சு,இந்தக்கதைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்,என்றேன் அவன் வாயைப்பார்த்து,

"இருக்கு"

"அபிவர்மன்,யாரு இந்த பேரு வைச்சாங்க உனக்கு,நைஸ் நேம்."

அபி, வர்மத்துடன் ஞானசேகரனை பார்த்துக்கொண்டிருக்க,

"உனக்கு சப்தஸ்வராவை தெரியுமா?"
"தெரியும்"
"அவள் உன்னை லவ் பண்ணிணது"
"இல்லை சேர்,அது ஜஸ்ட் இன்பட்சுவேசன்"
"அட அது வழமையாய் நாங்கள் சொல்லும் வசனம்
இல்லை,அபி அவள் உண்மைலயே உன்னை லவ் பண்ணினா,
நீ மத்தவங்களைப்போல அவளோட பழகியிருக்கலாம்,இருந்தாலும் அவள் அப்டியில்லை."

"என் யதார்த்த வாழ்க்கையின் கனவுகளை குலைத்தவன் நீ"

"யார் வசனம் தெரியுமா,இது?"

"சுத்தமாய் தலையை இடம் வலமாய் திருப்பி உதட்டை சுழித்து"

"அவளின் தமிழ் கொப்பியில் நிறைய,நிறைய இருப்பது மையும் நீயும்தான்,பார்"

வாழ்க்கையில் நீ தெரியாமல் நிறைய சில்லறைகளை தவற விடலாம்.அதில் இருக்கின்ற ஒரு சிறிய சில்லறை நிறைய மாற்றத்தை நிச்சயமாய்,ஏற்படுத்தும்,ஒரு வகையான பட்டர்பிளை எபக்ட்.
படிப்பு என்ற ஒரு சின்ன விசயம்....

போதும் சேர்,நான் என்ன...,நீங்கள் வேணும்........ கொஞ்சம் கடுமையான வார்த்தை பிரயோகங்களோடு அபிவர்மன் புறப்பட்டது இல்லாமல் வெளியில் வந்து அவருக்கு விரோதமான ஒரு கதையை பரப்ப ஐம்பது வயதிலேயே அவமானத்தோடு அவர் ரிட்டயர்ட் ஆகி கொஞ்ச பென்சனில் நிறைய வாழ வேண்டி இருக்க, குடும்பசெலவுக்கு இங்கே வேலை செய்வதாய் கேள்விப்பட்டேன்.

"அப்போ, அபிவர்மன் நிலை என்னாச்சு"

அவனா.ஹ்ம்,அவன் விழுத்திய சில்லறைகளில் ஏதோ ஒன்று அவனை நிறையவே பாதித்து நிறையவே மாறி,இவரோடு கதைப்பதற்காக இங்கே அடிக்கடி வந்து நிறைய நேரம் செலவிட்டும் ஒரு தடவை கூட முகத்தைப்பார்த்து, நான்தான் அபிவர்மன் என்று சொல்லி, நேருக்கு நேர் கதைக்க திராணியில்லாமல் போய்விடுவான்.

"அவன் விழுத்திய சில்லறை எது தெரியுமா என்றான்?"

"ம்ஹ்ம்"

"ஞானசேகரன்"என்றான்

சரியென்று பட்டது அவன் புறப்படும் போது

மேசையில் என் பில் 120 என்று ஏப்பம் விட கூடவே எதிரில் ஏதோ சிவப்பாய் ஓ! இதை விட்டுட்டு போய்டாரே என்று திரும்பி தேடி பார்த்து காணமல், அதைப்பார்க்க....
திருமண அழைப்பிதழ்.

யாரோடது?

Abi weds shaptha

                       To: Gnanasekaran sir...

   
#######








#அற்ப பிறவி#