About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, April 17, 2015

ஆவ்வ்....குட்டி...குட்டி தூக்கங்கள்


சூட்டனின் இன்னுமொரு பகுதி நிலமும் இன்று பறி போய் விட்டது.சூட்டன் ஒரு கறுப்பன்.பல் மட்டும் கொஞ்சம் காவி படிந்த வெள்ளை.வெள்ளை! இந்த சொல்லைக்கேட்டாலே சூட்டனுக்குப் பிடிக்காது.மண்டேலா சுதந்திரம் வாங்கி கொடுத்தும் எந்த பிரயோசனுமுமே இல்லாமல் போய் விட்டது.ஜோஜிம் ஒரு வெள்ளையன். அவனுக்கு அவனிடமே பிடிக்காத ஒரு விடயம்-கண்ணிலே உள்ள கறுப்பு முழி.

சூட்டனிடம் இருந்தது கொஞ்சம் வனப்பான பகுதி. சுற்றி வர பச்சைப்பசேல்.ஏகப்பட்ட உணவு வகைகள் இலகுவாக கிடைத்தது.யாரிடமும் உணவுக்காக போய் வழிய வேண்டிய அவசியமே இல்லை.நேற்றைய தினம்,விடிந்து ஒரு இரண்டு மணித்தியாலங்கள்தான் போயிருக்கும்,ஜோஜிம் தனது பரிவாரங்களோடு சுற்றிப்பார்ப்பது போல வந்து பண்ணிய அட்டூழியங்கள்....,நினைக்கவே சூட்டனுக்கு பத்திக்கொண்டு வருகிறது இப்பவும்.ஆனால் ஒன்றுமே பண்ண முடியாது.

"எலிசபெத்துக்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.வெள்ளையரின் எண்ணம் மட்டும் மாறவே மாறாது."என்பது அவனுக்கு புரிந்தது.

எதிர்த்து போரடுவதற்கு சூட்டனுக்கு பலம் காணாது என்றில்லை. பலம் உள்ளது,போதியளவு அவன் இனமும் உள்ளது அவன் பக்கமாய்.ஆனால் எதிர்க்க முடியாது,எதிர்த்தால் தோற்றுப்போவோமோ என்றொரு பயத்தை உருவாக்கியிருந்தார்கள்.காலம் காலமாகவே
எல்லா இடத்திலும் ஒடுக்கப்பட்டவன் கதையும் ஒடுக்கியவன் கதையும் இதேதான்.

இனியொரு மகாத்மாவோ அல்லது மண்டேலாவோ அல்லது ........ வரப்போவதில்லை என்பது திண்ணம்.

திருப்பி அடிக்க வேண்டும்.எவ்வளவு நாள் அடங்கி போயிருப்பது.குறைந்தது அந்த வெள்ளை நாய் ஜோஜிம் ஆவது பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் சூட்டன் தூங்க தொடங்க...

"சொன்ன டைம்க்கு சரியாய் ஜாமுன்னு வந்துட்டாய்"

"நீ ஏதோ முக்கிய விசயம் பேசணும்ணியே!"

அழகான ஆதர்ஷயா இன்று தன் காதலை சொல்லப்போகிறாள்.அதுதான் அந்த முக்கியமான விடயம்.இவ்வளவு சீக்கிரமா?
அதுக்கென்ன கூடாதா?.நானே சொல்லலாமா என்று யோசிக்கும் போது அவள் முடிவே எடுத்து விட்டாள். இது தான் "மேட் போர் ஈச் அதரா?"

கமோன் சொல்லு.ஆதர்ஷயா.படங்கள் போல இனி கோல்ட் கொஃபி எல்லாம் ஓடர் பண்ணி அத மணிக்கணக்காய் வைச்சு உறிஞ்சி ....கமோன். மனசு கிடந்து கதறியது.

டேய்! இதை நான் எப்பிடி சொல்றதுனு புரியல்ல பட்.....

சூட்டன் திட்டம் போடுவதற்குள் மீண்டும் ஜோஜிம்மின் ஆக்கிரமிப்பு.வந்து நிற்கிறான். வேறு வழியே இல்லை இந்த தடவை மோதியே ஆக வேண்டும்.தனியாகவேணும்.

நான்கு,அவனோடு சேர்த்து ஐந்து பேர்.தனியனாக சூட்டன்.என்ன செய்வது.மோதலா?
விட்டுப் பிடிக்கலாமா?
இது நல்ல முடிவு.

சடாரென்று சூட்டன் சமாதான முடிவெடுத்து வாலை எடுத்து கால்களுக்குள் வைத்துக் கொண்டு பின்னால் திரும்பி ஓட ஜோஜிம்மும் கூட வந்த கூட்டாளிகளும் சூட்டனின் பின் புறத்தை குறி வைத்துப் பாய சூட்டன்

"ஐயோ! ஐயோ!" என்று குழற

 "இல்லை சொல்லு என்னவாயிருந்தாலும்."

"அது வந்துடா"

"வவ்., வவ்., வவ்.."

எல்லாமே ஒரு முறை கலங்கி.இது கனவா.ஐயோ!இல்லை.கண்ணை மீண்டும் இறுக்கி மூடி பார்க்க ஒன்றுமே தோன்றவில்லை உள்ளுக்குள்.போச்சு.
பத்து நிமிச குட்டித்தூக்கத்தில் ஒரு சோட் பிலிம் ரேஞ்சுக்கு கனவு காண எளிய நாயே எல்லாத்தையுமே கெடுத்து "ஆதர்ஷயா நீ என்ன சொன்னேங்கிறதை நான் எங்கடி போய் கேட்க இனி!"

வந்த கோபத்தில் செருப்பை தூக்கி சூட்டன் பால் விட்டெறிந்தேன். "வள்" என்றது ஒரு முறை.சுற்றி முற்றிப் பார்த்தது.வாலை சுருட்டி காலுக்கிடையில் வைத்துக்கொண்டது. இதுவும் ஏதாவது கனவு கண்டிச்சோ ஏன் இப்புடி மிரளுது??

புரியவில்லை எனக்கு.நித்திரை போயே விட்டது.
இனி அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்.

"எப்போதுமே
கனவுகள்-நினைவிருக்கும்.ஆனால் முடிவிருக்காது "

ஒவ்வோரு கனவின் சிறப்புமே அதுதான்.எப்போதும் முடிவை எட்டுவதில்லை.

இங்கே நான் எழுத வந்தது பிரதானமாய் கனவை பற்றி  இல்லை.கனவை புரடியூஸ் பண்ணுகின்ற தூக்கத்தை பற்றி.மனுசன் முதல் விலங்கு வரை தூங்கும் போது... மனுசாளுக்கு மட்டும் தான் கனவு வருமா? விலங்குகளுக்கு வராதா? என்ட ஐயத்தை போக்றதுக்காக இரண்டையுமே கோர்த்து எழுதினதுதான் மேல உள்ள சூட்டனோட கனவு.

இனி தூக்கம் பற்றி....



இதில் எல்லாருமே இரவில் அடிப்படையாக கொள்ளுகின்ற அந்த பெரிய தூக்கத்தை பற்றி கதைப்பதற்கு ஒன்றுமே இல்லை.
ஆங்காங்கே ஐந்தோ,பத்தோ,இல்லை ஒரு நிமிடமோ கொள்ளுகின்ற குட்டி,குட்டி தூக்கங்களை பற்றித்தான் நிறையவே சொல்ல வேண்டும்.

கடந்த வாரம் யாழ்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்கு பஸ்ஸில் வரும் போது அம்மாவின் தோளிலே தூங்கி வழிந்த எட்டு வயது குட்டிப் பெண்ணும் என் தோளில் தூங்கி வழிந்த அறுபது வயது பெரியவருமா! இந்த போஸ்ட் எழுத காரணம் என்று கேட்டால்? நிச்சயமாய் இல்லை.அதற்கு மேல் நிறைய காரணங்கள் உண்டு.

பெரும்பாலும் பஸ்ஸிலோ,ரயிலிலோ ஒரு நல்ல தூக்கம் வரும்.நான் தூங்கி கொண்டிருக்கிறேன்.இன்னும் மூன்று ஸ்டாப் கழித்து இறங்க வேண்டும் என்று உள்ளுக்குள் நாமாகவே உணரக்கூடிய தூக்கம்.உணராமல் விட்டால் ஐயப்பருக்கு "அரோகரா" சொல்லி ஆறாவது ஸ்டாப்பில இறங்கி பாத யாத்திரைதான் வீடுவரை.

அடுத்தது இன்னுமொரு வகை.எல்லாருமே அனுபவிச்சு இருக்க கூடின ஒரு வகை.வாத்தியார் கருமமே கண்ணாய் படிப்பிக்கும் போது கண்ணை மின்னி தானகவே முக்கால் வாசி மூடுப்பட்டு மிஞ்சி இருக்கிற கால்பங்கிற்கு இடையால நப்தலீனோட மூலக்கூற்று வடிவத்துக்கிடையில தொலுயீன் வந்து கொழுவி நடுவில இருக்கிற வளையத்துக்குள்ள ஆகாயாவோ இல்ல அனுச்சித்திராவோ இல்ல விசித்திராவோ தெரிய

உயரத்தில நிக்கிற வாத்தியாருக்கு கீழ ஆர் கண் மின்னுறது எண்டு சரியா தெரியும்.

"அட உங்களுக்கு எத்தினை தரம் சொன்னாலும் விளங்காதே! அணுவை வெறுங்கண்ணால எல்லாம் பார்க்கேலாது.
அதெல்லாம் நுணுக்குகாட்டியளாலதான் பார்க்கலாம்.நீங்கள் கண்ணை சுருக்கி பார்த்து எல்லாம் கஸ்டப்படாதேங்கோடா!."

அவருக்கெங்க தெரிய போகுது உவங்கள் 'அணுவுக்குள்ள அனுவை' பார்க்றது.நித்திரை கொள்ளுறாங்கள் என்டது மட்டும்தான் தெரியும்.

ஆனா இந்த "அணுவுக்குள்ள அனு" என்ற அந்தவொரு விசயம் கிளாசில போடுற அந்த குட்டித்தூக்கத்திலதான் தெரியும்.வேற எங்கயுமே தெரியாது.இந்த குட்டித்தூக்கத்திற்கான காலவெல்லை ஒரு மில்லி செக்கன் தொடங்கி இரண்டு மூன்று செக்கன் வரை.

அடுத்தது
போன ரேம் மார்க்ஸ் குறைஞ்சிட்டுது.இந்த 
ரேம் பார் பிரிச்சு மேஞ்சு விட்றன் என்டு சத்திய பிரமாணம் எல்லாம் எடுத்துட்டு புத்தகத்தை எடுத்து கொஞ்ச நேரம் படிக்க முதல் பசிக்கும். சரி சாப்பிட்டு படிப்பம் என்டுட்டு முதல் சாப்பிட்றது.பிறகு வந்து இருக்க ஐஞ்சே ஐஞ்சு நிமிசம் இதிலயே படுத்துட்டு எழும்பி படிப்புத்தான் இரவு முழுக்க என்ட வைராக்கியத்தோட படுக்கிற ஒவ்வோருத்தனுமே எழும்புறது காலைல கட்டில்லதான் - Somnambulism

மற்றது
ஆபிஸீல வேலை செய்யும் போதும் ஒரு குட்டித்தூக்கம் வரும்.அதில் எனக்கு அனுபவமில்லை!.

இதை தவிர மத்தியானம் மொங்கிப் போட்டு சும்மா இருந்தாலே போதும்.
அந்த நேரத்தில
கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.அப்படியே கதிரைல இருந்த படியே ஒரு தூக்கம். அது ஒரு.......

ம்ம் ஆவ்வ்...

அடச்சே!!!

இவ்வளவு நேரமும் நான் கண்டது கனவா?



இந்த பதிவு
என் கடோசி குட்டித்தூக்க கனவு.கனவுகளுக்கு முடிவில்லையே,

ங்ஙே.....









#அற்பபிறவி#

Wednesday, April 8, 2015

இரட்டைப்பின்னல்காரி

யாரிந்த இரட்டைப்பின்னல்காரி? என்று கேட்பதற்கு முன்னர்
இது ஒரு திட்டமிடப்படாத திடீர் பதிவு.அதற்கு காரணமாய் அமைந்தது.

ஒரு வித
*துக்கமான
*துக்கடாவான
*விசேட
*செய்தி.

ஜெஸ்ஸின்ர ஹேர் ஸ்டைல் தொடங்கி மெஸ்ஸின்ர ஹேர் 
ஸ்டைல் வரை ஏன்
சமந்தா என்டா கேர்ளிங் கேர் அமைரா என்டா ஸ்ரெய்டான கேர் என்டு டெவலப் ஆக ஆக அதையெல்லாம் பார்த்து ரசிச்ச எனக்கு சொறி எங்களுக்கு எப்பவுமே எனி டைம் பேஃவரிட்டாய் ஒரு ஹேர் ஸ்டைல் இருந்தது என்டா அது இரட்டைப்பின்னல்தான்.

கேர்ளிங்கோ,ஸ்ரெய்டோ,குட்டையோ,நெட்டையோ,கறுப்போ,செம்பட்டையோ,
இரட்டைப்பின்னலை இன,மத,ஜாதி பேதமின்றி எல்லாருமே போட்ட இடம் ப்பள்ளிக்கூடம்.

நேர்சரி படிக்கேக்க ஒரு கேர் ஸ்டைல் இருந்தது.சின்ன வயசுதானே.அதால கொஞ்சமாய்தான் முடி இருக்கும் அனு என்கிற அனுச்சித்திராவுக்கு.அதை சுத்திவர வழிச்சு இழுத்து விட்டு உச்சியின் இரண்டு பக்கமும் ஒரு கைபிடியளவுக்கு முடியை திரட்டி அதுக்கு வூல்பாண்டை சிவப்போ,நீலமோ ஏதாச்சும் ஒரு கலர்ல அவள் அம்மா அடிச்சு விட்டு இருப்பாள்.முன் பக்கம் இரண்டு வண்டுக்கிளிப் குத்தியிருக்கும்.அதுக்கு பேர் கீரைப்பிடி கேர் ஸ்டைல்.



அப்டி விதம் விதமான கலர்ல போட்டுட்டு வந்து பக்கத்தில இருக்கிற அனுவோட வூல்பாண்டையும் கிளிப்பையும் பிடுங்கி கழட்டுறதுதான் நேர்சரில என்னோட முதலாவது முக்கிய தொழில் ஆயிருந்தது.அதைப்பார்த்து விட்டு அம்மாக்காரி அலிஸ்பாண்ட் போட்டு அனுப்ப தொடங்கினாள் பின்னர் வந்த நாட்களில்.அதோடு கீரைப்புடி மிஸ்ஸானது.நான் அலிஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை.

கடோசியாய் அனுவை அண்மையில் கண்ட போது நிறைய தலைமயிர் இருந்தது. ஆனால் கழட்டுவதற்கு ஒரு சின்ன கேர் கிளிப்பை கூட காணவில்லை.சுதந்திரமாய் பறக்கவிட்டிருந்தாள் காற்றில்.முப்பது செக்கண்டுக்கு ஒரு தடவையாவது நெற்றியில் விழுந்த இரண்டு முடியை இழுத்து விட்டுக்கொண்டு...

வூல்பாண்ட் போடுவதில்லையா? என்று கேட்டேன் பிடுங்குவதற்கு நீயில்லையே!!! என்றாள் சிரித்துக்கொண்டே.குறும்புக்காரி.

பிறைமறியில் ஓரிரு பேரை கீரைப்புடியில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது.ஆனால் அதையெல்லாம் அப்போது பார்த்து ரசிப்பதற்கு பக்குவம் கிடையாது.

பார்த்து ரசிக்கும் பக்குவமான வயசு(க்கு) வந்த போது எல்லாருமே இரட்டைஐடை போட்டுக்கொண்டிருக்க அதிலே இருந்த ஒருவிதமான அழகு தெரிந்தது.ஒரு சிறு பிள்ளைத்தனம் இருந்தது.நாற்பது வயது பெண் இந்த இரட்டை ஜடை போட்டால் நிச்சயமாய் பத்து வயதாவது குறைத்து காட்டும்,காட்டியது.

இரட்டைப்பின்னலை போட்டு விட்டு சிலர் ஒன்றை தூக்கி முன்பக்கம் விட்டும் சிலர் இரண்டையும் முன்னாலே தூக்கிப்போட்டும் கொண்டு வருவதிலிருந்து நிறைய விடயங்களை மறை முகமாய் ஊகிக்க முடிந்தது.அந்த வேளைகளில்.

பின்னல் தொடங்கி இரண்டாவது சுருக்கில் ஒரு நித்தியகல்யாணி இருந்தால் அது அவள்தான்.

கனகாம்பரம் இருந்தால்?
அது உவள் !!

அப்போ ரோசா இருந்தால்?
இரட்டைப்பின்னலுக்கு ரோசா வைப்பதில்லையாம்.யாரோ சொன்னார்கள் என் தேடலின் போது.

இப்படி அதிலேயும் ஒரு தனித்துவம்.

ரீசன்டாய் கோயில் திருவிழா மூட்டம் ராகீ  அடி வாங்க காரணமும் இந்த இரட்டைப்பின்னல்தான்.சிங்கன் இடப்பக்க பின்னல்ல பூ செருவியிருந்தது பார்த்துட்டு விஷீ! என்டு பின்னால போய் கூப்பிட அவள் திரும்பேல்ல .
காதுக்கு பக்கத்தில போய் எடியே? விசித்திரா என்டு பெரிசா கத்தியிருக்கிறார்.
மூக்கால ரத்தம் வரேக்கான் சிங்கனுக்கு தெரிஞ்சிருக்கு அது குண்டுமணின்ர தங்கச்சியார் என்டு.உவருக்கு நல்லா வேணும்.பின்ன என்ன இரட்டைப்பின்னல்ல இடப்பக்கம் பூவைச்சிருந்தா அது உவற்ற ஆளே.மிச்சத்துக்கு விசயத்தை கேள்விப்பட்டு விசித்திராவும் பேந்து மொங்கியிருப்பள் எப்பிடியும்.

இப்படி ஒவ்வோரு இரட்டைப்பின்னலுக்கு பின்னாடியும் ஒருத்தனின் இரத்தக்கதை இருக்கும்.

ஆனால் பெரும்பாலான பொண்ணுங்களுக்கு நாங்கள் இந்த இரட்டைப்பின்னலை ரசிக்கின்ற அல்லது ரசித்த விடயம் தெரியாது என்று நினைக்கின்றேன்.ஸ்கூல் முடிந்து ரியூசன் வரும் போது பத்தில் எட்டாச்சும் பின்னலை ஒற்றையாக்கியோ அல்லது விரித்து விட்டோ நேர் வகிடை கன்னப்பக்கம் சாய்த்தோ அல்லது கோணலாக்கியோ கொண்டுவர முகத்தில் இருந்த மொத்த தேஜஸ்ஸும் மாயமாகி இரவு பார்த்த இங்கிலிஸ் கொரர் மூவி ஞாபகம் வருவது அதுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.

பெண்கள் இரட்டைப்பின்னல் போட்டால் குடும்பம் இரண்டு படும் என்று ஒரு சுப்பரிஸஸ் தியரியை அந்த டைம்ல யாரோ ஒரு ரிஷி அடிச்சு விட்டுட்டு வேற போயிருக்கிறார்.இந்த இரட்டை ஜடை மறைய அதுவும் ஒரு மகத்தான காரணமாய் அமைந்தது

இந்த இடத்திலே எனக்கொரு டவுட் கனம் கோர்ட்டார் அவர்களே?!!
இரண்டா பிரிச்சா இரண்டுபடும் என்கிறீர்களே!?
அப்போ  Full ஆ விரிச்சு விட்டால் OMG,.mind blowing.

மண்டுவமே!!! இரட்டை பின்னலை பற்றி இவ்ளோ கதைக்கிறியே உனக்கெங்க தெரியப்போகுது அத பின்றதில இருக்கிற கஸ்டம் என்று ஒரு சைட் கேட்கும்.உனக்கு பின்ன தெரியுமான்னு இன்னொரு சைட் கேட்கும்.எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்
ஆமாதான்.இதெல்லாம் அம்மா முடியை பிடிச்சு - போட்ட பின்னலை அவிழ்கிறது தொடங்கி திரும்பி பின்றது வரைக்கும் எப்பவோ பழகிட்டனாக்கும்.

இப்போது இந்த பதிவுக்கு காரணம் "இருந்த ஒரு வடையும் போச்சே" என்கிறது மாதிரியான ஒரு நியூஸ்.

அண்மையில் எங்கள் பள்ளிக்கூடத்தில் கொண்டு  வரப்பட்ட பல புதிய சட்ட கம திட்டங்களுள் இந்த இரட்டைப்பின்னலை பிரித்து ஒற்றையாக்க வேண்டும் என்பதும் ஒன்றென்று தெரியவந்தது.அப்படி செய்யக்கூடாது என்று இனி என்ன எதிர்பைக்கிளப்பி போராட்டமா நடத்த முடியும்.?.அதுக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது நாட்டில்.

We'll miss it. என்று அடித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்.

இனி பொண்ணுங்களுக்கு ஒற்றைப்பின்னலை தூக்கி முன்னால விடுறதும் கஸ்டம்
பசங்களுக்கு பின்னா(ல்)ல இருந்தே யாருன்னு கண்டு பிடிக்றதும் கஸ்டம்.

"We all will miss that இரட்டைப்பின்னல்காரி"










By:அற்பபிறவி.


Wednesday, April 1, 2015

காமிஸோடு ஒரு காதல்


தொடர்ச்சி....

கௌபாய் ஸ்பெசலுக்கு பின்னர் வாங்க வேண்டும் என்று பேராசைப்பட்ட மிக பெரியயய்ய காமிக்ஸ் இரத்தப்படலத்தின் கொம்பிளீட் கலக்சன்.800 பக்க இராட்சதம்-ஐம்போ ஸ்பெசல் என்று லயன் வெளியிட்டது. வில்லியம் வான்சின் துல்லியக்கைவண்ணம்.Bourne மூவி சீரிஸின் கதை இதுதான்.இன்று வரை வாசிக்கவில்லை.சாவதற்கு இடையில் வாசித்து விடுவேன்-வைராக்கியம்.



காமிக்ஸ் என்ற அந்த இரண்டாம் உலகம் என் வாழ்க்கையில் அதிகமாய் உருண்ட இடம் வீட்டை தொடர்ந்து பள்ளிக்கூடம்தான்.

இந்த இடத்திலே விபுலன் அண்ணாவுக்கு ஒரு பெரிய ஷொட்டு வைக்க வேண்டும் அடுத்த பாகத்தின் ஹைலைட்டை வேளைக்கே Fb கொமண்ட் பாரில் ரிவீல் பண்ணியதற்காக.-வெல் பிரிடிக்சன்.

லயன்,முத்து காமிக்ஸுகளில் ரசிக்க கூடிய மிக முக்கியமான விடயம் ஒரு மசாலா பட ரேஞ்சுக்கு ஹீரோக்களை கைவசம் வைத்திருந்தது.அக்சன்,த்திரில்லர்,சயன்ஸ்பிக்சன்,காமெடி என்று ஒரு மஜாவான கலவை.

அக்சன் டிரக்கிற்கு அடுத்து அதிகம் இரசித்தது காமெடி.அதில் அடித்து தூள் கிளப்பியது லக்கி லூக் வித் ஜாலிஐம்பர்-லக்கியின் செல்லக்குதிரை,பேசக்கூடியது.ஆனால் லக்கியோடு மட்டும்தான் .தடாலடியான கார்ட்டூன் கௌபாய்.லூக்கின் பிரதான எதிரிகளாய் நாலு மொள்ளமாரிகள் கதையில் ஊடுருவுவார்கள் எப்போதுமே-டால்டன் பிரதர்ஸ்.



லக்கியிற்கு அடுத்த கோமாளிக் குறூப் ஆக வருவது வுட்சிட்டியின் சிக்பில் அன்ட் கோ குறூப்.இவர்களின் பின்புலம் கொஞ்சம் பெரிசு.இதைவிட மதியில்லா மந்திரி,ஜாலி என்று ஏகப்பட்ட காமெடி ஹீரோக்கள்.

இதையெல்லாம் ரசித்து சிரித்த தலையாய இடத்தில்,இனம் இனத்தோடதான் சேரும் என்ற வாசகத்தை பொய்யாக்ககூடாது என்ற கொள்கையில் ஆறாம் ஆண்டிலே
எனக்கென்றொரு சோத்தாங்கையும் பீச்சாங்கையும் எக்ஸ்ராவாய் வந்து சேர
இந்த இரண்டு கைகளினூடக என் கைகளுக்கும் என் கைகளினூடாக அந்த கைகளுக்கும் காமிக்ஸ் பரிமாற்றம் பக்காவாய் நடைபெற்றது.

அதே அரதப்பழசான டெக்னிக்தான்.
தொண்ணூறு டிகிரியில் நடப்பு பாடத்துக்கான புத்தகத்தை மேசையில் நிறுத்தி அதனுள் காமிக்ஸை வைத்து கண்ணியமாய் படிப்பது.

இதில் ஒரு சில பாரிய பிரச்சினைகள்.அதற்கு முதல் முக்கியமான இரண்டு ஹீரோ,ஹீரோயின் பற்றி எழுத வேண்டும்.

காங்கோ ஸ்பெசலிஸ்ட் மாடஸ்தி,அன்ட கத்தி ஸ்பெசலிஸ்ட் வில்லி கார்வின்.



இரண்டு பேரும் லவ்ர்ஸ் என்ற பாணியில் ராணியின் பக்கங்களும் நண்பர்கள் என்ற ரீதியில் லயனும் கதைகளை வெளியிட்டதில் எனக்கு எது உண்மை என்பதில் இன்னும் சந்தேகம்.படிப்பில கூட இப்பூடி வந்ததில்லை.

"வாசிக்காதே வயலென்ஸ் என்று வாத்தியார் சொன்னாலும் வைரம் கடத்துறத விட காமிக்ஸ் கடத்துறத மிக துல்லியமாக செய்தம் வகுப்பில"

அருமையாக சொன்னீர் அண்ணரே.!!
வாத்தியாருக்கு அதில வயலன்ஸ் இருந்தது மட்டும்தான் தெரியும் சயன்டிபிஃக் ஹீரோ மார்டினையெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமே இல்லை.(ம்க்கும்)

அதால நாங்களும் வாங்குகளுக்கு கீழாலும் பாடப்புத்தகங்களுக்குள்ளாயும் சிமக்ளிங்கில் பெரிய ஜீனியஸ் ஆனாலும் அவ்வப்போது கஸ்டொம் ஆபிசில் சில புத்தகங்கள் மாட்டிக்கொண்டது என்னவோ துரதிஷ்டம்தான்.

வந்த ஒரு சில பிரச்சினைகளுள்
*முதலாவது புத்தகத்துக்குள் வைத்து வாசிக்கும் போது வெளியில் இருக்கும் புத்தகம் சமநிலை குழம்பி விழுந்துபோகும்.அதுவும் தெரியாமல் வாத்தியார் வந்ததும் தெரியாமல் ஒரு ஆழ்மயக்க நிலையில் வாசித்துக்கொண்டிருக்க

"பளார்" என்று அறையும் போது நிஜவுலகம் தெரியும்.குறைந்தது இரண்டு தடவையாவது இப்படி மாட்டுப்பட்டு அறைவாங்கியிருப்பேன்.

ஓ.எல்லுக்கு கீழ இங்கிலிஸ் படிப்பிக்றதுக்கு ஒரு சேர் இருந்தார் (ஏன் இப்படி எழுத்திலே ஒரு பய+பக்தி என்பது போக போக தெரியும்.)
அந்தாள் பார்த்தாலே பின்பக்கம் இரண்டும் நோகும்.அப்புடி ஒரு நோக்குவர்மம் தெரிஞ்ச ஆள். வகுப்பு கொரிடோரால் நடந்து போகும் போது மயான அமைதி குடி கொள்ளும்.மொனிட்டரின்ர காச்சட்டைதான் கூட நடுங்கும்.ஏதாவது குழப்படி என்டா முதல்ல சிங்கன்ர கன்னம்தான் வீங்கும்.

விதி வலியது.எட்டாம் ஆண்டில பாடம் எடுக்க வந்தா பரவாயில்ல.வகுப்பு  வாத்தியாரயும் அந்தாளுக்கு புரமோசன் கொடுத்து விட.

கொஞ்சநாள் அமுங்கி இருந்து விட்டு ஒரு கிழமை போக புத்தகத்துக்குள்ள புத்தகம் வைக்க தொடங்க
அடுத்த நாளே டெக்ஸின் "பயங்கர பயணிகள்" மாட்டிக்கொண்டது.அடிவாங்க முதலே அழலாமா? என்று திட்டம் போட.
பாடம் முடிந்து பெல் அடிக்க
அடி விழவில்லை.புத்தகம் போய்விட்டது.இதற்கு அடித்துவிட்டு புத்தகத்தை தந்திருக்கலாம்.

அடுத்த நாள்.கூப்பிட்டார்.
எதையும் தாங்கும் இதயத்தோடு போனேன்.

முதலாவது ஆச்சர்யம்.
புத்தகத்தை தந்தார்!

"டோன்ட் ரீட் இற் வென் ரீச்சர் இஸ் இன் த கிளாஸ்.டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?"

இதுக்கு புத்தகத்தை தராமலே விட்டிருக்கலாமே.ஐயோ இப்ப என்ன சொல்றது.யெஸ் ஆ நோவா? நோகுதே.அப்ப நோவா?

தலையை இடதும் வலதுமாய் அசைத்து மேலும் கீழுமாய் ஆட்டி ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க .

கிட்ட கூப்பிட்டு மெல்லமாய் தமிழ்லயே கேட்டார்.

""இது முதலாம் பாகமடா!
இதின்ர இரண்டாம் பாகம் வைச்சிருக்கிறியோ?"

     !!!!!!!!!