About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, June 12, 2016

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 04

(கடைசி எபிசோட்...
அதால கொஞ்சம் இல்லை நிறையவே லென்ந்த் கூட சகித்துக்கொள்ளவும்)

இதுக்கு டைட்டில் "ஜன்னலோரம்" என்று வைத்து விட்டு,

பஸ்ஸில போவது என்பது விருப்ப பட்டியலின் 7வது இடத்தில் இருக்கிறது.

சின்ன பிள்ளைல அம்மாவோட பஸ்ஸில ஏறி மேல இருக்கிற கம்பி எனக்கு எப்போடா எட்டும் அதை நானும் பெரியாக்கள் மாதிரி பிடிச்சுட்டு போறதுக்கு என்டு கொட்டாவி விட்டு கைக்கெட்டின அம்மாவோட முந்தானைய பிடிச்சுட்டு யன்னலுக்கு வெளியால பார்க்கும் போது ,
பஸ் ஓடுறதுக்கு எதிர் திசைல எல்லாம் ஓடும்.அதை பார்க்க பயங்கர சந்தோசமா இருக்கும்.

"அதுக்கு காரணம் சார்பியக்கமடப்பா" என்டு அதை சயன்ஸ் வாத்தி எனக்கு விளங்கப்படுத்தின வயசில அதைப் பார்க்கறதில இருக்கிற சந்தோசம் கொஞ்சம் தேஞ்சு போயிருந்தாலும்
இப்பவும் யன்னல் கரை சீட் என்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணுதான்.

"மயில் தோகையின் நடுவிலும்
பஸ்ஸில் ஐன்னலோரமும்"
எப்போதும் இரசிக்கத்தக்கவை.

என்று 'சிகரங்களை நோக்கி'யில் வைரமுத்து கிறுக்கியதை பார்க்க சந்தோசமாயிருந்தது.
சாவகச்சேரில இருந்து யாழ்பாணம் எத்தனையோ தரம் பிறந்ததில இருந்து போயிருந்தாலும் ஒவ்வொரு முறை போகும் போதும் புதிதாய் தெரியும் இருபக்க கரையும்,நாவற்குழி பாலமும்,விளம்பர பலகைகளும்,இதர பிற இத்யாதி அம்சங்களும்.

அதற்கு பஸ்ஸும் நல்ல கொண்டிசன்ல இருந்து டிரைவரும் ஒரு நல்ல ரசிகனாய் இருக்கும் பட்சத்தில், ஏ.ஆரோ அல்லது இளையராஜாவோ செவி வழி துணை செய்ய, அந்த பஸ் என்னை பொறுத்தவரை ஒரு நகரும் சொர்க்கம்.

சீட்டுக்காக,
நடக்கும் ஐஞ்சு வயசு குழந்தையை தோளில் தூக்கிகொண்டு ஏறும் அம்மாவிலிருந்து,அடிக்கும் காற்றில் நெற்றியில் விழும் ஓரிரு முடியையும் அழகாய் இழுத்து பின் காதில் செருவி விடுகின்ற பெயர் தெரியாத அந்த அவள் வரை ஒவ்வொன்றுமே அழகாய் தெரிவது இந்த பயணங்களின் போதுதான்.

நெரிச்சல் இருக்கும் வேளைகளில் இதையெல்லாம் ரசிக்க சாத்தியமில்லைதான்.

ஆனால், "அம்மா பின்னால போம்மா, அண்ணை தள்ளி நில்லுங்கோ" என்று ஆட்களை அடையும் கொண்டக்டரை,
கூட இருக்கும் ப்ரெண்ட்ஸ்ஸோடு சேர்ந்து கலாய்த்து புஃட்போட்டில் தொங்கிக்கொண்டு போகும் போது அந்த நெரிச்சல் தெரிவதில்லை.

சாதாரணமாய் இப்படி சின்ன பயணத்தை கூட ரசித்த எனக்கு .
மொத்த வகுப்புமாய்
வழிதுணையா நாலைஞ்சு சேர் மாரும் ரீச்சர்ஸ்ஸும்.
ஐந்து நாட்களையும் செதுக்கி
நாட்டை சுத்தி ஒரு ரவுண்ட்,
அடித்து முடித்த போது பிறந்தபயனை அடைந்ததாய் ஒரு உணர்வு வந்தது.

அடுத்தது
‪#‎ஓட்டையைப்பெரிசாக்கவும்‬...#

கோயில் திருவிழா அப்டி என்ற விஷயத்துக்குள்ள குறிப்பா குறிப்பிடக்கூடிய ஒரு விசயம் இருக்கு.

பத்து வயசா இருக்கேக்க,

வீட்டுக்கு பக்கத்தில கொஞ்சம் தள்ளி ஒரு முருகன் கோயில் இருக்கு.
அப்ப என்ன நாம ஆள் பார்க்கவா போகிறோம்.கஸ்ரப்பட்டு அங்க இங்க என்டு ஆக்கினை கொடுத்ததில ஒரு ஐஞ்சோ பத்தோ தந்திருக்குங்கள்.

அதையும் அங்க போன உடன செலவழிக்க விடாதுகள்.
"இப்ப வாங்கி திண்டா அப்புச்சாமி கண்ணை குத்தும்டா" எனும் போது வருகின்ற பெரிய சந்தேகம்
"கண்ணைக்குத்தினா அது எப்டி அப்புறம் அப்புச்சாமி ஆகும்"

இப்பவும் அம்மா அப்டி கோயிலுக்குள்ள இழுத்து எங்கயும் போக விடாம மடில வைச்சிருந்தா அந்தக்கேள்வியை கேட்டிருப்பன்.இரண்டுமே நடக்கேல்ல.

வீட்ல தண்டினது சில்லறை என்டா கஸ்ரம்.தாளா இருந்தா அப்பர் கட்டி விட்ட இடுப்பில நிக்காத வேட்டின்ர விளிம்பில பெரியாக்கள் மாதிரி அந்த தாளை செருகிட்டு கச்சான் விக்கிற ஆச்சிக்கு முன்னால போய் இடுப்பில கை வைச்சுட்டு நிக்க

"என்னடா தம்பி வோணும்.?"

"அந்த போத்தலுக்க கிடக்கிறது."

"ஒண்டு பத்து ரூவ"

"அப்ப அது?"

"மூண்டு பத்து ரூவ"

அப்ப ....
"நீ எவ்வளவு வைச்சிருக்கா?"

"அவனுக்கு நீ பத்து ரூவாக்கு கச்சான் குடனை காணும்."

வழமையப்போல அந்த உருண்டை ரொபின்ட விலை கேட்கிறதுக்குள்ள குழப்பிப்விட்ட  அப்பா.

எனக்கு கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் பிடிபட்டது.நான் அந்த உருண்டை ரொபிக்கோ அல்லது கச்சான் கம கடலைக்கோ அப்போ ஆசைப்பட்டிருக்கவில்லை.அதை விற்ற ஆச்சி.அந்த இடத்தில் நின்ற நான்.அந்த இரண்டு விசயங்கள்தான் உண்மையில் பிடித்திருந்தது.

இரண்டாவதா குறிப்பிடற விசயம் வளர்ந்தாப்பிறகு வாறது.கோயிலுக்கு
சின்னனா இருக்கேக்க கடலை வாங்க போறது இப்ப போட போறது ஜஸ்ட் ஒரே ஒரு சொல்தான் மாற்றலாகியிருக்க

ஏண்டா தாவணில அதுவும் கோயில்ல மட்டும் எல்லாருமே அழகா தெரியுறாங்க?

"அதான்டா ஆண்டவனோட கிருபைங்கிறது"

அந்த சின்ன வயசில கச்சான் வாங்க ஆசைப்பட்ட அந்த ஆச்சி.
பெரிசானப்புறம் ரசிச்ச தாவணி,கிருபை
இரண்டையும் ஒரே கல்லில அடிக்க முடிந்தது.
இங்கே..
ஸ்கூல்ல இன்ரேவல் ரைம்ல பின் கேற் வழியா  வந்து அப்ப நான் ஆசைப்பட்ட உருண்டை ரொபில இருந்து கடலை, கச்சான், மிக்சர் என்று எல்லாமே வித்த ஆச்சி.ஆச்சி ரேஞ்சுக்கு அவவுக்கு வயசில்லா விட்டாலும் அப்புறம் உங்களை ஏன் ஆச்சி என்டுறாங்கள் என்ற போது  தான் விற்பதற்கு முதல் தன் தாய் இப்படி இதே இடத்தில் விற்றதாக.அதன் பின் ஒன்று மட்டும் புரிந்தது, ஆச்சி நாங்கள் வாங்குவதால் வருகின்ற வருமானத்தில் வாழவில்லை.தன் தாயைப்போல தானும் எங்களோடு வாழ வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே.அந்த எண்ணத்தில் தீப்பிடித்தது.
யாரோ ஒரு கிருதாரி பள்ளிக்கூடம் முடியிறக்கிடல அவசரப்பட்டு அந்த கேற்றை மேலால தாவ அநியாயம் தகரம் வைச்சு, கேற்றை அடைதது சமூகம்.

இருந்தாலும் எங்களால ஆச்சியை விட முடியல்ல .ஆச்சியாலையும் எங்கள விட முடியேல்ல.
கை போறளவுக்கு தகரத்தில் ஓட்டை போட்டோம்.
இம்மியும் பிசகாம மிச்சக்காசையும் கேட்ட சாமானையும் சரியா முகத்தை பார்க்காமலே கையில வைக்கிற அவவோட சாமர்த்தியத்தை கடைசி வரை ரசித்தோம்.

சந்தோசம்.
இனி இருப்பவர்களிடம் ஓர் வேண்டுகோள் ஆச்சியின் முகம் பார்க்குமளவுக்கு அந்த ஓட்டையை பெரிசாக்கவும்.

அடுத்தது ஆச்சிக்கு அடுத்ததாய் பலர் போகுமிடம்
டான்னு 10 டொட் 55 க்கு பள்ளிக்கூடத்தில ஒரு பெல்லு அடிக்கும்.
அதுக்கு முதல் ப்ரீயா இருக்கிற பாடத்துக்கே வீட்டுல இருந்து கொண்டுவந்ததை தின்னுட்டு இன்டேர்வலுக்கு போறது...

இந்த இடத்தை திகில் கதை பாணில வர்ணிச்சா
மண்டபத்தின் ஒரு பக்க சுவரிலுள்ள ஓட்டைகள்,முழுதும் ஒட்டடைகள் கறுப்பாய் புகை படிந்து அந்த அறையினுள் இரண்டு மேசையுடன் ஒரு காலில்லாத வாங்குகள்.
அதைத்தாண்டி மற்றைய அறையினுள் புகை மண்டலம். நிறைய உருவங்கள் அருஉருவமாய்.
அந்தப் பெட்டி.அதை உன்னிப்பாய் கவனித்தேன் ஒன்றுமே தெரியவில்லை.கண் வேறு எரிந்தது.மீண்டும் கண்ணைக்கசக்கி தைரியமாய் பார்த்தேன் இரண்டு மூன்று உருண்டைகள்.

"மச்சி வாய்ப்பன் கிடக்கடா!!"

"வாங்கடா வாங்கு "

"ம்.காசு?"

"பத்து ரூபாய் நாலாய் மடித்து நீட்டியது அந்த கஞ்சப்பிசினாரி"

வேறு வழியில்லாமல் எல்லாம் செலவழிச்சு மிச்சமா இருந்த எக்ஸ்ஸாமுக்கு கட்ட வைச்சிருந்ததை காசு பொக்கட்டுக்குள்ளால தோண்டி எடுத்தன்.ஐம்பது ரூபா. காசை அவனிட்டயே கொடுத்து

"இரண்டு வாய்ப்பன்
இரண்டு ரீ"
இதுதான் கன்ரீன்.

இன்ரேவல் ரைம் இந்த ஏரியா பொடியளின்ர ராஜ்ஜியம்.இந்த ஒரு இடம் கம நேரத்திலதான் பொடியள் தைர்யமாய் நிமிர்ந்து நிண்டு கதைச்சுட்டு இருக்கேக்க வாத்திமாருக்கு மட்டும் தலை சுளுக்கு வந்து குனிஞ்சு கொண்டு போற இடம்.ஏன்? அதில ஒருத்தன் ஒற்றைக்காலால சுவருக்கு உண்டு குடுத்துட்டு நிக்கேக்க வந்த வாத்தியார் யாராவது மாறி நிமிர்ந்து பார்த்து முறைச்சா ஏ!இந்தடா ஓசி ரீ என்பான், பக்கத்தில் நிற்பவனை பார்த்து.தேவையா இந்த அசிங்கம் என்று குனிஞ்சுட்டே போய் விடுவார்கள்.பெரும்பாலானவர்கள் அந்த பாதையை பயன்படுதாதுவதே இல்லை.

அவன் வாங்கி வந்த
ரீ சுட்டுது.அதனால் கப்பும் சுட்டுது. வாங்கி தூண்ல வைச்சுட்டு வாய்பனை கடிக்.

"நட்பு சொல்லாம கொள்ளாம வந்திருக்கா?"

இரண்டு பேர்.

பரவால்ல வாங்கினதுக்கு ஒரு வாயச்சும் தின்னமே.ஆறுதலாய் தூணைப்பார்க்க.

"என்ன டீயிடா இது ,சீனியும் இல்லை ஒரு மண்ணுமில்லை"
நான் வாங்கின டீயின் அடித்தேயிலைக்கட்டையை எந்த வஞ்சகமும் இல்லாம டேஸ்ட் பண்ணிப்பார்க்க தந்தாங்கள்.
நட்புக்காக பொறுத்துக்கொண்ட ஆயிரங்களுள் இதுவும் போய் புதையட்டும்

இந்த உலகத்தில சாப்பிட்றவங்களை இரண்டாப் பிரிக்கலாம்.
ஒண்ணு-வாங்கிச் சாப்பிட்றவங்கள்
இரண்டு-வாங்கினதை வாங்கி சாப்பிடறவங்கள்.

"நமது கன்ரீனில் உணவுக்கூட்டணி.
அதில் நட்பின் ருசி"

பள்ளிக்கூடத்தில கால் வைச்ச நாள் முதல் புதுசா பெரிசா கன்ரீன் கட்டுறம் என்டு கதை அடிக்கடி அடி பட்டாலும் அங்க இருந்து வெளிக்கிடும் வரை மெயின் கோல்ல இருக்கிற ஒரு பக்க யன்னல் வச்ச சுவருக்குள்ளால புகை வந்து கொண்டுதான் இருந்தது.
நாங்களும் சைக்கிள் பார்க்கில நிக்கிற பெட்டையளின்ர சைக்கிள் கூடையளுக்கையும்,கரியல்கள்ளையும் குடிச்ச தேத்தண்ணி பேணியளை செருவி விட்டுட்டு வாறதையும்தான் வழமையா வைச்சிருந்தம்.
பாவம் அதுகள் வீட்டை பேணி கழுவ வேண்டியிருந்தது, இங்க பேணியை எடுத்துட்டு சைக்கிளைக் கழுவேண்டியிருந்தது.

இன்டேர்வல் முடிய வகுப்புக்கு போனா அங்க வகுப்பு காப்ரேசன் வண்டி மாதிரி கிடக்க.
ஐஞ்சு பேரும் மட்டும்தானிருந்து வம்பளக்கிறளவை.டவுட் வர டைம்டேபிளைப் பார்த்தா இங்கிலிஸ்.புரிஞ்சுட்டுது.உவங்கள் எளியவங்கள் என்னை விட்டுட்டு பறந்திட்டாங்கள்.
வாங்குக்கு கீழ கிடந்த சுத்துற கொப்பியை எடுத்துக்கொண்டு லைப்ரரிக்கு வெளிக்கிட்டன்.

போகேக்க ஐஞ்சோடயும் கொம்பிரிமைஸ் ஆகி நாங்கள் ஒருதரும் இண்டைக்கு வரேல்ல என்டு ஆர் கேட்டாலும் சொல்லச் சொல்ல நகுல,சகாதேவ,தரும,அர்ச்சுனன் எல்லாம் பேசாம இருக்கா உந்த ஐஞ்சாவது ஆள் இருக்கொல்லோ
அது மட்டும்
"முடியாது,
அப்டி சொல்லலே."என்டுச்சு

எனக்கு கடுப்பு.
தருமனே பொய் சொல்லேக்கே உனக்கு என்னத்துக்கு உவ்வளவு அதப்பு? என்டு கேட்க பாத்தனன்.ஆனா
பேந்து துரியோதனனுக்கு என்ன நடந்தது என்டு ஞாபகம் வர பக்கத்தில ஆக்களும் சப்போட்டுக்கு இல்லை என்டறாதல வாயை மூடிட்டு லைப்ரரிக்கு போனன்.

அன்று ஆச்சரியங்கள் அதிகமான நாள்
ஆ....
லைப்ரரி
மௌனங்கள் பேசுமிடம்.

மௌனம் எப்புடி பேசும் என்டு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது கவிதை என்றால் அப்படித்தான்.

ஆனா எங்கட பள்ளிக்கூட லைப்ரரி இருக்கே இங்க மௌனம் பேசாது மத்த எல்லாம் பேசும்

இந்த இடத்து கூத்தை எழுதுறதுக்கு கிட்டமுட்ட இரண்டு மூண்டு எபிசோட் வேணும்.

என்னோட வழில வந்த மற்ற மூண்டும் மரத்தடி நிண்டுட்டுதுகள்.
அவங்களுக்கும் படிப்புக்கும் வெகுதூரமாம் அதான் எனி தாங்கள் வரேல்ல என்டுடாங்கள்.

ஆனா எனக்கு கொஞ்சம் லைப்ரரி என்டா பிடிக்கும்.வீட்ல பாஃன் போட்டுத்தான் நித்திரை கொள்ளுறது.

சரி என்டு அதுக்குள்ள காலை வைச்சா  விசர் வந்துட்டுது.
அங்க வேலைய்யிறது ஒரே ஒரு பாஃன்தான்.
அதையும் தும்புக்கட்டை தடியாலான் சுழட்டி ஸ்டாட் பண்ண  ர்ர்ர் என்ட சத்தத்தோட வேலையஃய தொடங்கும்.
லூசுகள் ஆரோ அதுக்கு பக்கத்தில ப்ளீஸ்
சைலண்ட் என்டு எழுதி ஒட்டியிருக்குதுகள்.
அதைப்பார்க்கற நேரமெல்லாம் சிரிப்பு வரும்.பின்ன என்ன பாஃனுக்கு இங்கிலிஷ் தெரியுமே எங்கையாவது.

அதுக்கு கீழ, எனக்கு அண்டைக்குத்தான் தெரியும் உந்த வாத்தியும் வீட்டல பாஃன் போட்டுத்தான நித்திரை கொள்ளுறது என்டு.

வேற வழியில்லாம அடைஞ்சு வைச்ச புத்தக குவியலுக்குள்ள ஒண்டை ரண்டமா இழுத்துகொண்டு போய் ஒரு இடத்தில இருந்து பார்த்தன்.

சுஜாதாவின்ர "ஆ" என்ட புத்தகம்.ஏற்கனவே வாசித்தாலும்
பரவாயில்லை எத்தனை தடவையும் வாசிக்கலாம் என்டுட்டு திரும்பவும் 'ஆ' என்டு வாசிக்க தொடங்கினான்.

போன ஜென்மத்துக்கதை எல்லாம் அவனுக்கு ஞாபகம் வருது.
கதையின்ர ஒவ்வொரு செப்டரும் 'ஆ' என்டு முடியும்.
உண்மைல கதையில மூழ்கி போனன்.

மீனலோஜினி டீச்சர் தட்டி "சுழலில் சிக்கிய சுடர் " நல்லா இருக்கு தாமோதரனில் போட்டுடலாம்
எனும் போது

தற்செயலாய் பக்கவாட்டில் பார்க்க 'ஆ' அவள்தான்.

முந்தி ஒரு,சில இடங்களில்  காட்டியிருப்பேன். இன்ரேவல் ரைம் மற்றது விளையாட்டுப்போட்டி மூட்டம் 'ஆ' மா
அந்த பெயர் தெரியாத வியப்புக்குறியே.

இவள் எப்ப வந்தாள்?
எப்ப இருந்தாள் கொஞ்சம் தள்ளி முன்னால.
ஒண்டுமே தெரியாது.

பக்கத்தில அவளின்ர அல்லக்கை இருந்து இழிச்சுது வழமை போல.அதுக்கு என்னை அடிக்கடி பாத்து பழக்கம்.

நீங்கள் பார்த்தால்  அந்த அல்லக்கைதான் வடிவு என்டு சொல்லுவியள் எனக்கு தெரியும்.
ஆனா இதையே நான் அந்த அல்லக்கைய பார்க்றன் என்டா மாறி சொல்லுவியள்.
அதான் உலக நியதி, தெரியும்.

திரும்பவும் நான் சுஜாதவின் "ஆ" வை ஆ என்டு பார்க்க டிரை பண்ணிணண் முடியேல்ல.
அவளை ஆ வென்டு பார்க்கிறதும் சரியில்லை.
வழிஞ்சாலும் துடைக்க கூடின மாதிரி இருக்கோனும்.

அப்டியே புத்தகத்தை பார்கற மாதிரி அவள் என்னய்றாள் என்டு பார்த்தன் மண்டுவம் சுடோகு நிரப்புது.

'ஆ' னா எனக்கு வடிவா தெரியும்
வேணுமென்டுதான் உதிலை வந்து இருக்கிறாள் என்டு.

டக் கெண்டு நிமிர்ந்தன் ஆள் 'ஆ' வென்டுது.
கள்ளம் பிடிபட்டது.
என்னைப்பார்த்துக்கொண்டுருந்தது
சிரிப்பு வந்துட்டுது.

எந்த மூஞ்சையில காலமை முழிச்சானன்.யோச்சன்.

அவள் தொடர்ந்து நிரப்பிக்கொண்டு இருந்தாள் நான் விட்டு விட்டு பார்க்கேக்க.

அடடா.
ரகுமான் டக்கென்டு சிட்டிவேசன் போட்டார்.

அக்டோபர் மாதத்தில்
அந்தி மழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்.

ஓ பப்பாரிப
ஆ பப்பாரிப

அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்.....

அப்டியே சங்கர் மகாதேவன் மண்டைக்குள் இறங்கி நிண்டு பாடினார்.
கால் ஆடிச்சுது தன்னிச்சையாய்.

அவளும் சிரிச்சு சிரிச்சு
பக்கத்தில இருக்கிறவளிட்ட ஏதோ கேட்டாள் பேப்பரைக்காட்டி

என்னவாயிருக்கும் நானும் எட்டாம எட்டி பார்த்தன்.

வேணுமெண்டு "அரக்கி" வைச்சாள் சிறுக்கி கொஞ்சம் இஞ்சால நான் பார்க்க கூடின மாரி.

உண்மைல உவள் அரக்கியோ என்டு எனக்கு டவுட் வந்துட்டுத்து.
பின்ன முழுப்பெட்டியும் நிரப்பிட்டள் ஒரு மூண்டு பெட்டி மட்டும் மிஞ்சி கிடந்துது.

கோதாரி விழுந்தது நான் நேசரி படிக்கேக்க ஒண்டு, இரண்டு கூட ஒழுங்க எழுத மாட்டன் என்டு கோகிலா ரீச்சர் கொப்பியை சுழட்டி எறிஞ்சு அவ்வளவு பெட்டையளுக்கு முன்னாலையும் அப்ப என்ன அவமானப்படுத்தினவ.

சத்தியமா இப்ப அவளை பார்க்க எனக்கு கோகிலா ரீச்சர் மாதிரிதான் கிடந்தது.

விடக்கூடாது.
எனக்கு தான் சவால் விட்றாள் கண்டு பிடிக்க சொல்லி.
கண்டு பிடிச்சா இதை சாட்டா வைச்சு கதைக்கலாம்.
கண்டு பிடிக்காட்டி அவ்வளவுதான்
ஆ.

பார்த்தன்
அங்கால அந்தப்பெட்டி இந்தப்பெட்டி
மூண்டு வரேல்ல
இஞ்சால ஒன்பது வந்துட்டு
ரேம் எக்ஸாமுக்கு கூட இவ்வளவு யோசிக்கேல்ல.
கடவுள் இருக்கனுமே.

இரண்டு போட்டிருக்காள்
அந்தப்பெட்டி ஓகே மண்டைய பினைஞ்சு,

ஓ யெஸ்!! யெஸ்!
கண்டு பிடிச்சிட்டன்.

கேட்டன் மெதுவா.
நான் என்ன வரும் என்டு சொல்லலாமா.?
நாக்கு நர்த்தனமாடிச்சுது.பின்ன முதல் முதலா கதைக்கிறன்.இதைவிட சும்மா பார்த்துட்டு இருக்குறது ஈசி மாரி கிடந்துது.

ம். என்றாள்
ஸ்ரேயா கோசலுக்கு தங்கைச்சியும் இருக்கு,
முதலாவது பெட்டிக்குள்ள ஒண்டு வரும்
அப்டியே தொடர்ந்து இரண்டு இல்லை இல்லை நாலும் கடைசிப்பெட்டிக்குள்ள மூண்டும்  வரும்

வாவ்......
சரியா கண்டு பிடிச்சிட்டிங்க.
இந்தாங்க நிரப்பி நீங்களே வைச்சுடுங்க அதில.
"என் கிஃப்ட்" என்று  விட்டு விர்ரென்று போய் விட்டாள் மின்னல்லாய் அருகில் இருந்த இடி(ம்பி)யோட.
எனக்குள் மழை.

ம்
இண்டைக்கு இவ்வளவுதான் நம்ம லக்குன்னு யோச்சுட்டு அவள் கிப்ட்டா தந்த பேப்பரை ஆட்டைய போடுவம் என்டு நினைச்சுக்கொண்டே எஞ்சிய நிரப்பாத
பெட்டிக்குள் நம்பர்களை போட்டேன் .

1........4........3

அவள் கிப்ஃட்

"ஆ"


‪#‎மீண்டும்‬....முடிவில்லாத ஒரு முடிவில்

வாழ்க இந்துக்கல்லூ......ரி ......
ரெடியாகுடா மாப்பிள பிரளயம் நடக்கப்போகுது.
அலாரம் என் மண்டைக்குள்ள அடித்தது.பக்கத்தில் நின்டவன்.அங்கால
அதுக்கங்கால.....எல்லார் மண்டையினுள்ளும் அதே.

இரு.இரு என்டு மூளை தகவலை கால்ப்பக்கம் கடத்துவற்கு இடையில் பின்னால்,பக்கத்தில்,மூலைப்பக்கமாய் மும்முனைத்தாக்குதலாய் முட்ட முன்னால் விளையுளை நான் பிரயோகிக்கும் போதுதான் பார்த்தன். காலை வி வடிவத்தில் வைத்து கை முஸ்டிகளை மடக்கி வைத்துக்கொண்டு ஆறாம் வகுப்பு சுகாதாரப்பாடத்தில் சொல்லிக்குடுத்ததை இன்னும் அப்டியே

சனியனே அமர்ந்து இருடா....
இருந்த பிறகு....
வாழ்கவே... பாடி முடிந்தது.

கடுப்பாய் இருந்தது
கூடவே கால் நுனியில் கடித்தது.

"டேய்
என் இடக்கால்ல சொறிஞ்சு விடு"

"என்னட்ட வலக்கால்தான் கிடக்கு "

தட்டிக்காட்டினான்.சரிதான்.

இடக்கால் எங்கே கிடக்கிறது பார்த்து தட்டி அண்ணா இரண்டு பாறங்கல்லு ஒரு கோரைப்புல்லு மேல கிடக்குது.அது பாவம் ஒண்ணையாச்சும் தரைல உருட்டி விடுங்களேன் ப்ளீஸ் பளிச்சுன்னு இழுத்துக்குவன்.

ஐயராத்து பையன்னாய் இருக்கும் போல. பழி பாவத்துக்கு அஞ்சி நகர்ந்தாலும் எனக்கு காலை இழுக்க இடமில்லை.

ஐயோ பேசி அறுத்து இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் போகுமபோது
புல்லை புத்தகத்துக்குள்ள வைச்சு அமர்த்தியது போல கிடந்தது கால்.

படம் தொடங்கும்...
ஒரு பெரிய மைதானத்தில இருக்கிற ஒரு மேடைல கொஞ்சம் நரைச்ச தலைமுடியோட
ஒரு ஆளோட பின்பக்கம் மட்டும்.

"இது வாழ்கையை வென்ற ஒரு சாமனியனோட கதை அப்டி "

அந்த ஆள் சொல்ல தொடங்கும் போது பிளாக் அன்ட் வைட் சீன் கலராகி அபிஷேக் திரும்ப

எத்தனை வாட்டி பார்த்தாலும் அலுக்காத கொஞ்சப்படங்களுள் ஒன்று
அபிஷேக்
ஐஸ்
ஏ.ஆர்
மாதவன்,வித்தியாபாலன் தாண்டி வேற ஏதோ ஒண்டு இருக்குறதான் இந்தப்படமும் இங்கே சொல்லக் காரணம்.

2006ல்
"டேய் இந்த சேட்டைப்போடு"

"போம்மா அது எனக்கு பெரிசா கிடக்கு"

"இண்டைக்கு போடு பேந்து மாத்தி தைப்பம்."

வீட்ட போட்ட சண்டையில் நேரம் டபாய்த்து 101 ஆம் நம்பர் ரோக்கன் கிடைத்து ஸ்கூல் போக

கடவுளே நமக்கு முன்னால இன்னும் நூறு பேர் அட்மிஷனுக்கு இருக்கிறாங்கள்.இது அம்மா.

பார்த்தேன்.சில தெரிஞ்ச சில தெரியாத அம்மாக்களோடோ அல்லது அப்பக்களோட என்னைப்போல் காலாட்டிக்கொண்டு மண்டபத்துக்குள் பலர்.

இனி வரப்போகும் ஏழு வருடங்களில் நிறைய சந்தோசம் கொஞ்சம் அவஸ்தை என்று நிறைய தருணங்களில் இங்கேதான் செப்ரர் வன் என்று அப்போது தெரியாது.

நேரம் போக அலுப்படித்தது.சும்மா இருக்க.
நிமிர்ந்து பார்த்
அம்மாடி எம்மாம் பெரிய உயரம்.கூரை முன்னால மேடை.
அதில ஒரு சரஸ்வதிப்படம் தேர் மாதிரி ஒன்டுக்குள்ள.
மேல ஏதோ பேர் எழுதிக்கிடக்கே.கண்ணில பட்டதையும் வாசிக்கிற பழக்கம் அப்ப தொடங்கி இருந்தது.

"சுப்ரமணியம் அரங்கு"

கட்டியது.செப்பனிட்டது.
செப்பனிட்றது என்னா பத்து வயதில் விளங்க கஸ்ரமான வார்த்தை.

தோள் மூட்டால் வழிந்த சேர்ட் கையை இழுத்து விட்டு வெளியில் நழுவி முன் பக்கமாய் வந்து மண்டபத்தின் கிரவுண்ட் பக்கமாய் இருந்த மேடையில் ஏறி நின்று பார்த்தேன்.பள்ளிக்கூடம் முழுவதும் தெரிந்தது.
(கனவு தெரிந்தது.
இந்த வசனம் வடிவா இருக்கு என்ரறதுக்காக மட்டும் இதில சேர்க்க வேண்டி இருக்குது.)

அண்டைக்கு நான் என்ன யோச்சன் என்று நினைவில்லை.ஆனால் ஏஎல் எக்ஸாம் எழுதி விட்டு அந்த கடோசி நாள் முடிவில் அதே இடத்தில் நின்ற போது

என்னை நானே எல்லா இடத்திலும்
ஒரு விதமான ஹலுஸினேசன்.போல

அதெல்லாத்துக்கும் மேலால அந்த படத்தை ஒவ்வோரு தபா பார்க்கும் போதும் அந்த மேல சொன்ன சீன் போகும் போது எனக்கு ஞாபகம் வருவது.... என் உருவமும் இந்த இடமும் தான்.

புதுசு எப்டி இருக்கும்.
பழசுக்கு என்ன நடக்கும்.

"இரண்டாயிரம் பேர் இருக்கையுடன் கூடிய புதிய கலை மண்டபத்துக்கு அடிக்கல்.அண்மையில் நாட்டப்பட்டது."

இனி என்னவோ இரண்டிலும் நாங்கள் இருக்கப்போவதில்லை என்பதில் கவலை .
புதிய மண்டபம் என்பதில் சந்தோசம்.

என்ன இருந்தாலும் அந்த நிலத்தில் இருந்து மா அரைத்து நிகழ்ச்சி முடிந்து விறைத்த காலுடன் எழும்பி போகும் போது சாம்பல் கலந்த நீலக்காற்சட்டையை பட்டு பட்டு என்னு பின்னால தட்ட தூசி கிளம்பும்.அந்த சந்தோசம் இனி பலருக்கு கிடையாது என்கிற ஆதங்கம்.

ஸ்கூலில் பெரும்பாலான இடங்களைப்பற்றி ஆங்காங்கே சொல்லியாகிவிட்டது. சில ஹைட் அவுட்டுகளை மட்டும் மறைத்து விட்டேன். இனி வரும் காலத்தில் என்னைப்போன்ற எங்களைப்போன்றவர்கள் பயன் பெறட்டும் என்று.
தாய் நாட்டில் இல்லாத பற்றொன்று ( ங்கே! அது எங்க இருக்கு ) சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மீது இருந்தது.

அதன் ஒவ்வோரு மூலையிலும் ஒரு ஹேலோகிராம் விம்பமாய் நான் நின்றேன்.என்னோடு நிறையப்பேர்.ஒரு பாடசாலை வாழ்வை அணு அணுவாய் அனுபவித்த திருப்தி

இப்டி நிறையவே
இன்னும் எழுதாத ,சில எழுத முடியாத கதைகளோடு இந்த டயரியை முடிக்கப்போகின்றேன்.

இத்துடன் இந்த முடிவில்லாத முடிவுரையையும் முடித்துக்கொள்கிறேன்.

இப்படி அனுபவித்த,அனுபவிக்காத அத்தனை பேருக்கும் இந்த டயரியின் பக்கங்கள் சமர்பணங்கள் ஆகட்டும்

Bye...bye.


இவனும் ஓர் ஏகலைவன்தான்

இவனும் ஓர்
ஏகலைவன் தான்

ஒவ்வொருதனும் மற்றவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் செய்ய மாட்டான்
ஆனால் ஒரு குறித்த நபர் சொல்லும் போது மட்டும் என்ன பிடிக்காத விடயமாக இருந்தாலும் அதை செய்வோம்
அந்த நபர்
நண்பனாக,
அம்மாவாக ,
அப்பாவாக,
காதலியாக ,
என்று வேறுபடும்

அந்த வகையில்
அவனுக்கு அவர்.

அவனின் எதிர்காலத்திற்கான பயணத்தை இறந்த காலத்தில் மாற்றி எழுதியவர்.

காரில் போகும் போது பார்த்தான்
ரொம்பவே அவன் ஊர் மாறியிருந்தது
ரயில் பாதைகள் திருத்தி
ஸ்டேசன்கள் கட்டப்பட்டு
இருந்த கடைகள் இல்லாமல் போய் புதிதாய் சில தோன்றி
புதிய சாவகச்சேரியை தாண்டினான்

அவன்
சற்றே பாடசாலையில் அதிகமாக கவனிக்கப்பட்டவன்
அதிபர் அலுவலகங்களிலும் ஆசிரியர் ஓய்வறைகளிலும்

அவன் பாடசாலைக்கு போன நாட்களில் பாதி நாட்கள் அப்பாவுடன்தான் போனான்

அவன் அப்பா கூட ஒரு கட்டத்தில் அவனை அத்தனை ஆசிரியர்கள் முன் முதலாவது தரம் அறைந்து இரண்டாம் தரம் அறைய கை தூக்கிய போது அதனை தடுத்தவர் அவர்தான் அவன் பாடசாலையில் மதித்த ஒரே ஒரு நபர்
அவனை இந்த உலகத்திலே புரிந்து கொண்ட ஒரே நபர்.

எந்த பாடமும் அவரிடம் படிக்கவில்லை அவன் .
ஆனால் அவருக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் அவனுடன் கதைத்தார்
அவர் சொல்வதை மட்டும் அவன் செய்தான்.
அவர் சொல்லாமல் அவன் செய்தவற்றுக்கு அவரும் அதிபர் அலுவலகத்தில் கூட நின்றார் அவனோடு.

கடைசியாக பள்ளி நிர்வாகம் அவனை நிராகரித்தது.
அவன் அவளை பார்த்ததும்,
அவள் அவனை பார்த்ததும்,
அனைவரும் அவர்களிருவரையும் பார்த்ததும் காரணமாகியது .

பாடசாலையின் கதவை தாண்டும் போது கூட வந்த அவர் ,
அவனை தனியே கதைப்பதற்காக அப்பாவை பார்க்க ,
அப்பாவும் விலகி கொண்ட போது அவர் அவள் அவன் மூன்று பேர் பார்வையும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்ட போது ,
அவர் அவனுக்கு வழமையாக சொல்வதை சொன்னார் .
"நேசிப்பது கிடைக்கும் வரை
நீ நேசிப்பதை விட்டு விடாதே"

காரைப் பார்க் பண்ணி
நடந்து
அறையொன்றினுள்
அமர்ந்து
சிறிது நேரத்தில் ஒருவர்
வந்து மேசையில் அமர்ந்தார்.

உங்களோட பேர் ?
சொல்ல எழுதினார்

நீங்கள் கூட்டிட்டு போறதுக்கு அவர் ஓம் எண்டுட்டார்

பட் நீங்க அவருக்கு?

அவன் என்னோட பிள்ளை!

எழுந்து சென்று அவர் கால் தொட அவர் அவனை மூச்சு முட்ட கட்டி பிடித்து கொண்டார்.

காரில் அமர்ந்து
வெளியில் போகும் போது
பார்த்தான்
............ ன் அணுசரனை யுடன் முதியோர் தினம் என்ற பனர் காற்றில் பறந்து கொண்டிருந்தது

சேர் " இண்டைக்கு ஆசிரியர் தினம் உங்களுக்கு வாழ்த்துக்கள்"
அவள் கூற
நன்றிம்மா நீ எப்படி இருக்கா?
"பைன் "சேர்

வீட்டை அடைந்த போது அவர் அவனை மீண்டும் கேட்டார்
உனக்கேன்பா வீண் சிரமம் நான் அங்க சுகமாத்தான் இருக்கிறன். அவர் அவனை மூச்சு முட்ட கட்டி பிடித்து கொண்டார்.

நீங்கள் எங்களோட வந்து இருந்தா எங்களுக்கு இன்னும் சுகமா இருக்கும்

"நேசிப்பது கிடைக்கும் வரை
நீ நேசிப்பதை விட்டு விடாதே"

மூன்று பேரும் வாசலில் எழுதி இருந்த வசனத்தை வாழ்வின் இரண்டாம் தடவையாக ஒன்றாக வாசித்தனர்

இனி தினம் தினம் வாசிப்பார்கள்.

ஒரு பட்டாம் பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 03

வழமையான நேரத்தில் பின் வாசலில் கால் வைக்க ...
வார்ச்சர் கேற்றுக்கு சங்கிலி போட்டு பூட்டை கொழுவ ...

தள்ளினேன் கேற்றை .
துணைக்கு இரண்டு மூன்று பேர் கூட நின்றார்கள்.

என்ன இருந்தாலும் எவனும் தான் செய்யும் வேலையில் எந்த இடத்தில் தன் அதிகாரத்தை பிரயோகிக்க முடியுமோ அத் தருணத்திற்காக காத்திருப்பான்.

"பெஸ்ட் பெல் அடிச்சு ஐஞ்சு நிமிசமாச்சு சுத்தி முன் கேற்றால வாங்கோ எல்லோரும்"
ஆள் ஒரு நரியன்.இரண்டு மூன்டு தரம் அவனோட கொழுவி வேற இருக்கறதால எவ்ளவு கேட்டாலும் திறக்கமாட்டன் என்டு தெரியும்.தூய பட்டினத்து தமிழ் வார்த்தைகளை அவன் பால் உமிழ்ந்து விட்டு முன்னால போக,இன்னுமொரு பிரகண்டத்துக்குள்ளால தப்ப வேண்டுமே.லேட்டா வர்றவங்களை  மறிச்சு வைச்சு அறுக்க ஒரு அறுவை வாத்தி கேட்டுக்கு பொறுப்பாய் நிக்கும்..
முன் கேற்றை அடைந்து மதில் ஓட்டைக்குள்ளால் நிலமையை ஆராய்ந்த போது,
என்ன இண்டைக்கு புதன் கிழமை தானே. ஏன்? லைன் கட்டி மெயின் கோலுக்கு போறாங்கள் யோசித்தவாறு வகுப்பு நோக்கி நடக்...

"தம்பி இதில பாக்கை வைச்சுட்டு கோலுக்கு போம்."

நல்ல காலம். நல்ல மூட்ல நிக்கிறார் இண்டைக்கு,அவற்ற மனுசிக்கு மனசுக்குள்ள நன்றி தெரிவிச்சுக்கொண்டு

என்னவாயிருக்கும்?
கோலை எட்டிய போது எங்கட வகுப்பு லைனும் சரியாக வர இடைச்செருகலாகினேன்.

ஏன்டா இண்டைக்கு இங்க வாறம்?

தோரணம் சோடித்திருந்தது,கோலை சுற்றி
மேடையில் மாக்கோலம் .
வேட்டி கட்டி சிலர் .
சரஸ்வதிக்கு வழமைக்கதிகமான மாலைகள்.
ஒரு பூசாரி ஐயா
தேவாரம் பாடும் கும்பல்.

இண்டைக்கு சரஸ்வதி பூசை தொடக்கம்
இனி, பத்து நாளும் இங்க தான்டா!!!

Title:God is great

சரஸ்வதி பூஜை நான்காம் நாள்.

தின ஒழுங்கு படி இன்று ஒன்பதாம் ஆண்டின் பூஜை

போட்டீன் என்கிற அந்த ரீன் ஏஜ்.

வேட்டியை கட்டி சேட்டை கழட்ட மனமில்லாமல்,கையை கட்டிக்கொண்டு மேடையில் ஒரு கூட்டம் .
பாதி பேர் அதில் மாலை போட்ட சரஸ்வதியை பார்க்காமல் பாமாலை பாடும் லக்ஷ்மி(கா) ஐ பார்த்தது கும்பிட்ட படி

சாம்பிராணி புகை மணம் மண்டபம் முழுக்க.

தேவாரம்,சகலகலாவல்லி மாலை ஓதுங்கோ!
ஐயர் ஆணையிட
அதிபர் கீழே அமர்த்தி கையை காட்ட
எல்லாரும் அடித்து பிடித்து அமைதியாக இருப்பதற்குள்
தேவாரம் முடிந்திருந்தது.

வெண்டாமரைக்கன்றி நின்பதந்தாங்க......

"டேய் உண்மைலயே கடவுள் இருக்காருடா"
ஏன்டா?
பாருடா நம்ம ஆளை நமக்கு நேர கொண்டு வந்து நிப்பாட்டி இருக்காரு.

கடவுள்!
எக்ஸாம் டைமில் மட்டும் கண்ணுக்கு தெரிபவர்
சிலருக்கு அதுவும் தாண்டி ரிசல்ட் வரும் போது மட்டும் தெரிபவர்

பிச்சைக்காரனுக்கு தட்டில் காசு விழும் போதும்...
டொக்டர்ஸ்க்கு ஆப்ரேசன் முடிவிலயும்..
ஆக்ஸிடண்டல உயிர் தப்பும் போதும்....

இதெல்லாம் தாண்டி எனக்கு பக்கத்தில நிக்கிற இந்த பேமானி மாதிரியானவங்களுக்கு
தன் ஆளை காட்டும் போது மட்டும் கடவுள் கண் முன் தோன்றுவார்.

"எனக்கு உங்களை மாதிரில்ல
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு"

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்டு யார் சொன்னது"

"ஓ திடீருன்னு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்திடுச்சா?
அப்ப சொல்லுங்க யார் கடவுள்"

நீங்கதான்
Look. I don't understand ur joke.

Becz,it's not a joke.

"முன்ன பின்ன தெரியாத அந்த பொடியனுக்காக இரத்தம் கொடுத்தீங்களே
அதான் கடவுள்!"

என்ன திடீர் பணிவு.
ஏன்னா? நானும் கடவுள்.

அதானே பார்த்தேன். யார் சொன்னா நீங்க கடவுள்னு?
"மலை மேல கடை வச்சிருக்கிற ஒரு அம்மா"

"எனக்கு புரியல்ல"

"புரியக்கூடாது அதுதான் கடவுள்."

அன்பே சிவம்.
கமல் காட்டிய கடவுள்.

படம் பார்த்து முடிந்த போது தெளிவாய் இருந்த பாதிப்பேர் குழம்பியும் குழம்பிய பாதிப்பேர் தெளிந்தும் இருப்பார்கள்.
DOG ஐ திருப்பி போட்டாக்கூட GOD ன்னு வருதில்ல..
உலக நாயகனின் மாயாஜாலம்.


எதுவுமே மனசில நினைக்காம, வேண்டாம உன்னால கடவுளை கும்பிட முடியுமா?

அது எப்படிடா?

"ஒண்டுமே வேண்டாட்டி ,ஒண்டுமே நினைக்காட்டி ,அப்புறம் என்னண்டு கும்பிட்றது.,எதைக் கும்பிட்றது
கடவுள் இல்லைண்டு ஆயிடாது."

"சிவனுக்கு ஒரு ராத்திரி அது சிவராத்திரி சக்திக்கு ஒன்பது ........
...............
..............
எனவே இத் திருநாளில் வீரத்தை வேண்டி வழி படுவோமாக."
நன்றி.

அந்த வழமையான வசனம் பேசி முடித்து கரகோசம் பெற்று போகும் போது ஒன்று புரிந்தது.

வேண்டுதல்களும்.
பயங்களும்.
எதிர்பார்ப்புக்களும்தான்

நாம் படைத்த
நம்மை படைத்த
கடவுள்.

தொடர்ந்து வந்த டீச்சர்ஸ் டேக்கு மனசுக்குள் சந்தோசமாய் சிலருக்கும் வெறுப்போடு பலருக்கும் கை கொடுத்து மாலை போட்டு வாழ்த்துச்சொல்லிக் கொண்டாடி முடித்து
அன்றைய தின டயரியின் பக்கத்தில் எழுதியது இது.
"இவனும் ஒரு ஏகலைவன்தான்"
(அது தனிப்பதிவாய் போடப்பட்டுள்ளது)

அந்த கூத்துகளோட அந்த தவணை வழமையான அதே எக்சாம் சபதத்தோட முடிஞ்சு அடுத்த தவணை அவங்களே விளையாட்டோட ஆரம்பிக்க அதுக்கப்புறம் கீழே
வி

வு
ம்

லீவு முடிஞ்சு முதல் நாள் பள்ளிக்கூடம் போகேக்க ஒரு புளுகு வரும்.
கன நாள் போகேல்ல என்டுறது ஒரு காரணம்.
எல்லாரையும் கன நாள் பாத்து என்றது இன்னோரு காரணம்.
என்னதான் வெளியிடங்களில் கண்டு தொலைத்தாலும்
அந்த வைட் அண்ட் வைட் யூனிபோர்மில்
பைப்டியிலோ இல்லை வகுப்புக்கு வெளியில் வரும் போதோ வைத்து பார்க்கும் போது...
டாமிட்
வாட் அன் ஏஞ்சல் சீ இஸ் ?

சின்ன வகுப்பென்டா, புது வருசம் என்டா,
புது வகுப்பு,புதுக்கொப்பி,
எல்லாம் புதுசு.
ஏ எல்லில் சிஸ்டம் கரப்ட் ஆகி விட்டது.
இனித்தான் போய் வகுப்புக் கபேட்டுக்குள்ள போன ரேம் வைச்ச கொப்பியளை தேடி எடுக்க வேண்டும்.

எதுக்கும் வெறுங்கையோட போகக்கூடாது என்டு கையில சுத்திக்கொண்டு போக ஒரு கொப்பியையும் எடுத்துக்கொண்டு போறது வழமை.கொப்பியை சுத்துறதும் ஒரு சீனாய் இருக்கும் ஆரெண்டாலும் கொப்பி விரல்ல சுத்துது என்டா ஒருக்கா ஆளையும் பார்த்து கொப்பியையும் பார்ப்பினம்.

அது உண்மைல "சுத்துற" கொப்பிதான். அதில எல்லாம் கிடக்கும் .
வராததுக்கு என் எழுத்தில் அம்மாவின் கடிதம்.
பென்சீன் வளையம் போட்டு மாற்றீடு.
பிஸிக்ஸில குவிவு வில்லைக்கு பிழையா குழிவு வில்லைன்ர வரிப்படம்.
மற்சில சட்டப்படல்
இது எல்லாத்துக்கும் மேலால பயோப்பொடியளும் அந்தக்கொப்பியை அப்பப்ப யூஸ் பண்றாதால கோதாரி விழுந்தது அதில அண்டைக்குத்தான் பார்த்தன் நாங்கள் அம்பு போட்டு அழகா கீறுற இதயத்தை அவங்கள் நாலு அறையா பிரிச்சு வைச்சு கீறியிருக்காங்கள்.

அதைப்பாத்து பயங்கர கடுப்பாயிட்டுது.
பின்ன என்ன நாங்கள் ஒரு இதயத்துக்குள்ள ஒரு ஆளை வைச்சிருக்கிறதுக்கே எவ்வளவு கஸ்ரப்படுறம் உவங்கள் நாலாப்பிரிச்சு என்ன என்ன விளையாட்டு உது???

அடுத்த நாள் கேட்கோனும் என்டு இருந்தாலும் விளையாட்டுப்போட்டி மீட்டிங்கில அது மறந்தே போச்சு.

சின்ன வகுப்பில வகுப்பு பிரதிநிதியா தெரிவு செய்யப்பட்டாலே பெரிசாக கெத்துக்காட்டும்
மனசு.இந்த முறை விளையாட்டுப்போட்டி தலமை பொறுப்பே எங்களுக்குத்தான் என்கிற நிலையில்
கின்னஸில் பெயர் போடும் போது K க்கு பதில் G போட வேண்டும்.யோசித்துக்கொண்டேன்.
மற்ற கவுஸுகளை கிடக்கட்டும், என் கவுஸை பத்தி முதல்ல சொல்லணும்.

சத்தியமா எப்புடி என்ர கவுஸுக்கு கன்னை பிரிச்சாங்கள் தெரியா.
நான் வந்து பள்ளிக்கூடத்தில சேர்ந்தம் பிறகு நானறிஞ்சு ஒருக்கா கூட எங்கட கவுஸ் முதல் மூண்டுக்குள்ள வரேல்ல.என்னை ஏன் இந்த கவுஸில போட்டவங்கள் என்டு தொடக்கத்தில ஒரு சந்தேகம்.இப்ப யோச்சா சரி என்டுதான் பட்டது.
இந்த தடவையும் கடைசியாய் வந்தால்,நேருவுக்கு சிறையில் இருந்தபோது கூட இப்படி ஒரு அவமானம் நேர்ந்திராது.

ஆறு,ஏழு,எட்டில்,படிக்கும் போதெல்லாம்,ஏய் இந்த முறை நம்ம கவுஸ்தான்டா பெர்ஸ்டா வரும் என்டு கத்தி கதறிய பெரும்பாலனவன்கள் இப்ப அவனவன் கவுசிலேயே இல்லாததுதான் உண்மை.

தெஸ்தெஸ்தரோனின் இது என்ன மாயம்.

கூட்டம் பெரும்பாலும் நிக்கிறது ஸ்ரீ சுமங்கலவுக்குள்ளதான்.கேட்டா அதெல்லோடா கவுஸ் என்டுவாங்கள்.நான் இன்னும் எந்தக்கவுசுக்குள்ள நிக்கறது என்டு கண்டுபிடிக்கேல்ல. ஐ மீன் ம்க்க்கும் எந்தக்கவுஸ் என்டே கணிடுபிடிக்கேல்ல. இனித்தான் தேடோனும்.

போட்டிகள் தொடங்கி
அந்த இடத்தில யம்பிங்
நாவலுக்கு கீழ நீளம்
அங்கால கொஞ்சம் தள்ளி குண்டு
ரான் மண்டப பக்கம் தட்டு கிரவுண்டுக்கு குறுக்க ஓட்டம்

எல்லாம் பிரிஞ்சு தங்கட உச்சபட்ச திறமையை காட்டி தெரிவு செய்யப்படோனும் என்டறதில முனைப்பா இருக்க
அப்படியே வானத்தில இருந்து கமராவை ஜூம் பண்ணிட்டு வந்தால்  ஆறாவதா ஒரு கவுஸ் ஒன்டு கிரவுண்ட்டுக்கு நடுவிலயும் இல்லாம ஆகலும் தள்ளியும் இல்லாம இரண்டுக்கும் இடைல நிக்குது அந்த கவுஸுக்குத்தான் இடைக்கிட ஸ்பெஷல் அறிவிப்பு வரும் மைக் மூலமா

"மாணவர்கள் அவர் அவர்களுக்குரிய இல்லங்களில் நிற்குமாறு வேண்டப்படுகிறார்கள்" அதைக்கேட்டுட்டு அங்கால கொஞ்சம் தள்ளி நின்டா சரி.

ஏன்டா எங்கடா கோபி?
ம், அவங்கட கவுஸில இருக்கிற ஆரோ ஒரு மோடையன் குண்டா இருக்கிறவன் எல்லாம் குண்டெறியோனும் என்டு சொன்னதால ஆள்  இப்ப நாவலுக்கு கீழ நிக்குது.

ஏன்டா அப்ப ஒல்லி....பீப்...பீப்

சென்சார் போர்டு கட் பண்ணி விட்டது அந்த வசனத்தை

என்ர கண் கட்குழிக்குள்ள நின்டு சுழன்டுது.
எங்கட கவுஸ் உயரம் பாயுது.

பொடியள் எல்லாம் காப் பனை உயரத்தில கம்பத்தை விட்டுட்டு மெத்தை இல்லாம பாஞ்சு விழுந்து கொண்டிருக்க,அங்கால மெத்தைன்ர உயரத்தில கம்பத்தை விட்டுட்டு அதை கஸ்ரப்பட்டுப்பாய்ற மாதிரி பவ்லா காட்டுறாளவையள்,பார்க்க சிரிப்பு வந்தது.

பக்கத்தில சும்மா பார்த்து கொண்டு நின்ட வாத்தியாரிட்ட கேட்டன்.
ஏன்? பொடியளுக்கு எலும்பு ச்சீ மெத்தை இல்லையோ சேர்.

"அது கவுஸ் கப்டனிட்ட போய் கேள் தம்பி."
ஒரு மெத்தைதான் கிடந்ததாம்.
எடுத்துட்டு வரேக்க அவளவை தங்களுக்கு தரச்சொல்லி கேட்டுதுகளாம்.
குடுத்துட்டு வந்து நிக்கிறன்.

காலம் காலமா பொடியள் இப்டி எல்லாத்தையும் குடுத்து குடுத்தே நிலத்தில விழுந்து மண்டைய உடைக்கிறாங்கள்.
உவளவை மட்டும் மெத்தைல விழுந்து தப்பிட்றாளவை.

என்னடா??

ஓம்.,சேர்.
ஓமோம்.
ஐயா! எங்கையோ மெத்தை இல்லாம பாய்ஞ்சு இருக்கார் என்டு விளங்கிச்சுது.

மெல்ல நழுவும் போது தற்செயலாய் சரஸ்வதி பூசையில் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"கடவுள் இருக்காருடா"

அந்த கூட்டத்துக்குள்ள பாயுறது.
ஓவ் உச் கொண்டிக்கொண்டேன்.

ஓடிப்போய்
பாஞ்சு
மெத்தைல விழுந்து முன்னால வந்த பின்னலை பின்னால எடுத்து விட்டுட்டு,
கட்டை விரலை தூக்கி காட்டி
ஐஞ்சு போட்டு
சின்னப்பிள்ளையள் மாதிரி சிரிச்சு
ஐயோ!

உந்த வாத்திக்கு விசர்
அவளவ கீழ விழுந்து மண்டை உடைச்சா உவரே பொறுப்பு.என்ன இருந்தாலும்
அவன் செஞ்சதுதான் சரி.அதுவும்
உந்த உயரத்தில இருந்து விழுந்தா! நினைச்சுப்பார்கவே நடுங்குது.
என்ர கவுஸே எனக்குத்தான்.

விளையாட்டுப்போட்டிக்கான முகூர்த்த நேரம் எல்லாம் குறிச்சாச்சு.
3 நாளா தெரிவுப்போட்டி என்டு பந்தா காட்டி அதுவும் எல்லாம் முடிஞ்சுது.
மூண்டாம் நாள் முடிவில அனேக பேரோட எதிர்பார்ப்புக்களுக்கேற்ப எங்கட கவுஸ் 5வது இடத்தில இருந்துச்சு

ஆனா அண்டைக்கு முடிவிலயும் எங்கட கவுஸ் பொறுப்பாளர் வீரமா பேசினார்.

"பிள்ளையள்
இப்பவும் ஒண்டும் குறைஞ்சு போகல்ல நாளைக்கு விளையாட்டுப்போட்டில கொஞ்சம் கஸ்டப்பட்டம் என்டாலே நாலாவது இடத்துக்கு வந்துடலாம்".

"நாங்கள் சாம்பால்ல இருந்து எழும்புற பீனிக்ஸ்ஸா இருக்கோனும்."
மைண்ட் வாய்ஸ் அலறியது.
"நாளைக்குப்பார் அடி வாங்கி கொண்டு குப்புற கிடக்கேக்க கிடக்கிற சாம்பல் எல்லாம் காத்தில பறக்குதோ இல்லையோ என்டு."

நாளை.

கிறவுண்டுக்கு நடுவில ஒரு கம்பம் குத்தி சுத்திவர கயிறு கட்டி அதில கலர்கலரா கொடி கட்டி
வண்ணமயம்.
ஜகஜோதியாய் இருந்தது.

ஐஞ்சு கவஸும் தங்கட பேர் போட்டுக்கு கீழ அடைஞ்சு போய் இருந்தது.

அந்த அண்டையான் ஹை யம்ப் நிகழ்ச்சிக்கு பிறகு நான் வேற கவுஸுகளுக்கை போய் நிக்கிறேல்ல
என்ன இருந்தாலும் எங்கட "சொந்தக்கவுஸுக்கு" சப்போர்ட் பண்ணுற மாதிரி வராது.
இப்ப வரேக்கயும் கூப்பிட்டவங்கள் தாமோதரத்துக்குள்ள சர்பத் கொடுக்கிறாங்களாம் என்டு,நாக்கு போகச்சொல்லிச்சு ஆனா நான் போகேல்ல.
"கவுஸ்தான்" முக்கியம் என்றதில ஒரு வைராக்கியமிருந்தது.

எங்களின லெப்ட் ரைட் ரீம் ரெடியாய் வெளிக்கிட்டு நிண்டுது.
கோழிக்கு கொண்டை வைச்சது மாதிரி தலையிலயும் ஏதோ வைச்சு மேக்கப்போடு வெளிக்கிடுத்தி கிடந்துது.

சின்னப்பிள்ளைல உது அடிக்கிறதுக்கு பயந்தோடி ஒளிஞ்ச காலம் ஒன்டு இருந்தது.
இப்ப அதைப்பற்றி கவலை இல்லை.
என்ன விட சின்னப்பொடியள் கன பேர் இருக்கிறதால.நான் கேர்ள்ஸ் ரீம்ல ஏதாவது உதவி தேவையா என்டு பார்கறதில முனைப்பா இருந்தன்.

நேரம் தடதடத்து கொஞ்சம் கடந்து எல்லாம் தொடங்க நாசமா போனவங்கள் இரண்டு பேர் பொத்து, பொத்து என்டு மயங்கி விழுந்து போனாங்கள்.
உடனடியான ஆள் பற்றாக்குறை.அந்த நேரம் பார்த்து மற்றவங்களும் எல்லாம் ஒளிய பொறுப்பு எனக்கு முன்னால வந்து நின்டார்.

நீர் உம்மட கவுஸுக்கு ஒரு பொயிண்ட் எடுத்து தாரதுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு

பெக்கோ விட்டு கிண்டினது போல ஒரு பள்ளம்.

கண்டு கொள்ளாம நானும் தலையில கொண்டையை குத்திக்கொண்டு இறங்கி நிண்டன்.

இரண்டாவது ஆளுக்குகாக ஒருதனை கொண்டு வந்து விட்டாங்கள்.அவன் வலது பக்க மூலைல கடைசி ஆள். ஜஸ் ரைட் சொல்லோணும்,நாசமா போனது அடிக்கடி என்னை நோண்டி என்ன அண்ணா சொல்லோணும் நீங்க இதில வாங்களன், என்டு கொண்டிருந்தான்.அவனுக்கு வாயில் ஐஸ் வரவே இல்லை.
நான் எங்கட இங்கிலிஸ் சேரை மானசீகமா நினைச்சுக்கொண்டு
அவன் ஞாபகம் வைச்சுக்கொள்ளுக்கூடின மாரி சொல்லிக்கொடுக்க அது சிக்கலாப்போச்சு.

சரியா விசிட்டர்ஸ்க்கு முன்னால போகேக்க நான் மெல்லமா சைகை காட்ட கத்தினான் பெரிய குரல்ல

ஐ...ஸ்...வ...ர்யா
கேட்ட எல்லாம் திகைச்சுப்போச்சுதுகள்.

நான் ஐஸ்வர்யா ராயில வர்யாவை எடுத்துட்டு ஐஸ் ராய் என்டு மெல்லமா சொல்லுடா அது எல்லாம் சரியா கேட்குமென்ட சொல்ல எல்லாத்தையும் மாத்திப்போட்டு கத்திப்போட்டான்.
அதுக்குள்ள சொல்லிட்டு என்னை திரும்பி பார்த்து எப்படி?? என்டு ஒரு வெற்றிச் சிரிப்பு வேற.
அந்த கடுப்போட கை வீசிக்கொண்டு போகேக்கதான் பார்த்தன் என்ர "கவுஸ்" என்ர "கவுஸ்" என்டு நான் உருகின கவுஸே வேற கவுஸுக்குள்ள நிண்டு கை தட்டிச்சுது.
எல்லாக்கடுப்பையும் கொண்டுபோய் அவன்ல காட்டி கும்மினது மட்டும்தான் அந்த முறை புதுசா நடந்தது,
மற்றதெல்லாம் வழமை போல கிழக்கில உதிச்சு மேற்கில மறைஞ்சது.

லாஸ்ட் எபியில் சந்திக்கலாம்.....

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 02

சேர், எக்ஸ் கியூ...

என்னம்மா?

"உங்களை அதிபர் வரட்டாம்."
"இப்பவோ?"
"ஓ"

அவர் வெளிக்கிட அடுத்த பெல் இன்டேர்வல்
சோ லெட்ஸ் டேக் ஏ பிரேக்....

வீட்டில் சுத்தி வர மாமரம் நிக்கும்
அதில உள்ள மாங்காய குரங்கு பிடுங்கினாலும் ஏன் குரங்கே? என்டும் பார்க்கத அதே நான் மணியம் சேர் வீட்டு சேலன் மாங்காய்க்கு கிங்கொங்காய் அடிபட்டிருக்கிறேன்.

வீட்டில் கடலை அவித்து கொட்டுவார்கள்.தின்னுடா! புரதம் என்டு.நாய் கூட எனக்கு தாற முழுதையும் தின்ன மாட்டுது
ஆனால் கோயிலில் தரும் அந்த ஒரு பிடி கடலைக்காக அடிபட்டு தின்னும் போது மனம் யோசிக்கும் ஐயரை போல உதுகளுக்கு ஒரு நாளும் சமைக்க தெரியாது.

அதை போல வீட்டில் வெறுத்துப்போன புட்டும்,தோசையும்,இடியப்பத்துக்காகவும் இங்கே நானும் சக போரளிகளும் நடத்த போகும் மினி உலக யுத்தம்தான் இந்த இன்டேர்வல்.

3 மேசைய சுத்தி வர எல்லோரும் கதிரைய போட்டோம்
"எடுத்து வைங்கடா பார்சல்களை எல்லோரும்"
யெஸ்! அந்தக்குரல் சாப்பாட்டுக்கு பொறுப்பான சாட்சத் நம்ம ................

இல்ல நான் இதில பேர் எழுதக்கூடாது எழுதினா ஐங்கி அடிப்பான்.
உப்புடித்தான் முதல் ஒருக்கா ஐங்கி என்டு எழுதறதுக்கு பதிலா ஜங்கி என்டு மாறி எழுதினதில ஆளுக்கு பயங்கர கடுப்பு.

எல்லோரும் சாப்பாட்டு பார்சலை மேசையில் வைத்தோம்.
ஒருத்தரும் இப்ப தொடாத, கொஞ்சம் பொறு .
எல்லோரும் அவன்  மூஞ்சிய பார்த்தோம் !!
என்ன இது "அன்னம் பாலிக்கும்...."
பாட போகிறானா ரூல்ஸ் ல அதல்லாம் இல்லையே அப்புறம் ஏன்?

ஆனா ஒருத்தரும் தொடல்ல.

இந்த பங்குச்சந்தைக்கு அவன்தான் லீடர்
அவன் வைச்சதுதான் சட்டம்.
1.இருக்கிற எல்லாரும் சாப்பிடணும்.
2.இயன்றவரை எல்லாரும் சாப்பாட்டு பார்சல் கொண்டரோனும்
★கட்டாயம் கொண்டறத மேசைல வைக்கணும்
3.சாப்பிட முதல் கை கழுவுறதும் கழுவாம விட்றதும் அவன் அவன் இஷ்டம்
4.பட் கழுவிட்டு வாறதுக்குள்ள சாப்பாடு முடிஞ்சா அதுக்கு சந்தை பொறுப்பேற்காது

இப்ப என்ன பிரச்சினை .
10 பேர் 9 பார்சல்.எல்லாரும் குனிய திலகர் கவட்டுக்குள்ள தன்ர புட்டுப்பார்சலை ஒளிச்சு வைச்சிருக்க அதைப்புடுங்கி மேசைல வைச்சுட்டு தலைவர் ஒரு பார்சலை ரன்டமா செலக்ட் பண்ணி ஓப்பன் பண்ண பாய்ஞ்சு .எல்லா கைக்குள்ளயும் என்
கைய விட்டன் .
தோசை.
இழுத்தன்.
பாதி இட்டலியாய் பினைஞ்சு வந்தது கையில்.
வாய்க்குள்ள அடைஞ்சு கொண்டு
" சம்ப...ல் கொண்ட...ரல்ல..யோடா"

திலகர் புட்டு போன விரக்தியில் வெறும் சம்பலை மட்டும் தின்டு கொண்டு இல்லை என்டு தலையாட்டிச்சு.
ஏனைய
9 பார்சல்களின்
கதையும் மேற்கூறிவாறு போக..
உயிர் வாழ்றதுக்காக சாப்பிட்றவங்கள் ஒரு வகை.
சாப்பிட்றதுக்காக உயிர் வாழ்றவங்கள் இன்னொரு வகை.
2 வது வகையை பிரதிநிதித்துவப்படுத்தினது எங்கட வகுப்பு.

20 நிமிட இடைவெளியில் 5 நிமிசம் சாப்பிட்டு பாக்கி பதினைஞ்சு நிமிசம் என்ன பண்ணுறது  என்டா காதல்.
சாப்பிட்டு கை கழுவிட்டு
அப்படியே பப்படி ல இருந்து சிலர் கழண்டு போவாங்க.

இதுக்குள்ள தனி தனியாக போறன்களே இவங்களுக்கு ஆங்காங்கே அவங்க பச்சை கொடி காட்டிட்டு இருப்பாங்க எங்கயாவது நிண்டு.இது வலு டீப்பான லவ் ஆ இருக்கும்

இன்னொரு வகை இருக்கு அது .வன் சைட்.
இது கட்டாயம் கூட ஒருத்தனை துணைக்கு கூட்டிட்டு போகும்.

இப்ப போறது நான் என்டு வைங்களேன்.அட ச்சும்மா ஒரு உ+ம் தான்.
கண் தேடும் எங்க எங்க என்டு.கூட வாறது ஈசியா முதல்ல கண்டு பிடிச்சுக்காட்டும்.

காதினுள் கிசு கிசுக்கும்
என்னடா?
உன் ஆள் வாறடா!!!

சகலமும் விழிப்புற்றது உடலில்
இதய துடிப்பு எகிறியது
அதிரலீன் அதிகம் சுரந்தது
நெல்லி மர இலைகள் அதிகமாக உதிர்ந்தன.

இண்டைக்கு பார்பாளா?
நேற்று பார்த்தாளே திரும்பி!!


எங்கடா?

பைப்படில தண்ணி குடிச்சுட்டு போறாள் பார்.பார்த்துக்கொண்டு

நின்றேன்.
திரும்பவில்லை
நின்றேன்.
திரும்பவில்லை.
பார்த்தேன் ........ம்க்கும்.
போவம் என்று திரும்பும் போது பின்னால் திரும்பி

பக்கத்தில் கதைத்து கொண்டே பார்த்தாள்ள்ள்......

காதலும் சரி
கத்தரிக்காயும் சரி
டேஸ்ட்டா இருக்கிறது ஸ்கூல் ரைம்ல மட்டும்தான்...

எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாம காதல் வரக்கூடிய ஒரே ஒரு இடம் இங்கே மட்டும்தான்,

ஆனால் வெளியுலகம் அதை இன்பட்சுவேர்சன் என்டு அடிச்சுவிடும்.ப்ளடி இடியட்ஸ்.

பிரச்சினை எதுவுமே இல்லாம ஒரு சினிமா படம் எடுத்தா எப்டி இருக்கும் என்டொரு நினைப்பு நிறையநாளா ஓடிட்டு இருந்தது.
படம் புல்லா சந்தோசமான சீன் மட்டும்தான்வில்லன் இருக்க கூடாது.
ஹீரோ,ஹீரோயினை லவ் பண்ணணும், அவங்களை யாரும் பிரிக்க படாது. முக்கியமா அவங்களாவே பிரிஞ்சு அப்புறம் கடைசில சேர்ர மாதிரி பந்தா காட்டக்கூடாது அப்புறம் அதுக்கு இன்னுமொரு அன்ரி கிளைமாக்ஸ் வச்சு அவங்களை சாக்காட்ட கூடாது.ஆக ஒன்லி இரண்டு பேரும் ஹப்பியா இருக்கிறதை மட்டும்தான் காட்டணும்.

உதாரணத்துக்கு தலைவரோட ஓகே கண்மணி ரகப்படங்கள்.அது கூட மேலே சொன்ன எல்லா வரையறைகளையும் திருப்தி படுத்தியதா என்றால் கிடையாது.கொஞ்சம்..கொஞ்சம்தான்...

ஆனா பிரச்சினை இல்லாம மணிரத்னம் போல ஒரு சிலரால மட்டும்தான் இன்ரஸ்ட்டா படம் எடுக்க முடியும்.ஏன்னா பிரச்சினை இல்லாட்டி படமும் சரி பள்ளிக்கூட லைவ்வும் சரி பிளாப்பாயிடும்.

பந்தி பந்தியா நிறைய பிரச்சினை எழுதலாம்.இருந்தாலும் அதில்லை இந்த டயரியோட நோக்கம் அதுக்கு மேல இருக்கிற ஓகே கண்மணி டைப்.அதால வந்த பிராப்ளம்ஸ் எல்லாத்தையும் ப்பூ என்டு ஊதி தள்ளினதில முதலாவதா பறந்த தூசி எக்ஸாம்.
எக்சாம் எழுதி பேப்பர் தரேக்க
எவன் மூஞ்சிலயாச்சும் எக்ஸாம் ஊத்திக்கிட்ட மாதிரி கவலையே இருக்காது.இருக்கிறது போல காட்டிக்குவான்.

என்ரா?
மாக்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே மம்மி கேட்டா என்னடா சொல்லறது

"நீ கொஞ்சம் மூடுறியா நானே கவலைல இருக்கன்."

"விடுறா  இந்த முறை  பெரிசா படிக்கல்லத்தானே "

"நாங்க சின்னனாயாச்சும் படிக்கலையே!!"

இந்த ஜாலி கொன்பெரன்ஸ் மீட்டிங்கை பின்னால நின்டு கோபமாக்கேட்டுட்டு இருந்த சியாமா டீச்சருக்குக்கே சிரிப்பு  வந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் கண்டு கொள்ளவில்லை.

டீச்சருக்கு திருத்த வேற  வகுப்பு பேப்பர் இருந்தாலும் முதல் எடுத்து திருத்திறது எங்கட வகுப்பு பேப்பரைத்ததான்.நல்லா எழுதினவன் பேப்பரையும் நல்லாவே எழுதாதவன் பேப்பரையும் ஈசியாத்திருத்திடலாம்.அதால எழுதி அடுத்த நாளே பேப்பர் கையிலையும் பேச்சு காதிலையும் விழும்.
அந்த நேரத்திலதான் தலையை குனிஞ்சு போன வருசம் செத்த பக்கத்து வூட்டு ஆயாவுக்கு ஆத்ம அஞ்சலி கொடுக்குறது
நிமிர்ந்து பார்த்தா பேர் சொல்லி பேச்சு விழும்.

அதுக்குள்ள ஒருத்தர் இரண்டுபேர் மடாக்காய் யோசிப்பினம்.
எஸ் ஆக வழியே இல்லையா?

ரீச்சர் தண்ணி குடிச்சுட்டு ....
மாக்ஸ் எடுத்த திறத்தில பச்சை தண்ணி குடிக்கிறதுக்கே நீங்கள் வெட்கப்படோனுமடா.

அவமானம்.

அவர் இருக்க எனக்கு சிரிப்பு.

நீ
தண்ணி குடிக்க முதல்
போய் முகத்தை கழுவுடா!
ஒரே கரியா கிடக்கு முகமெல்லாம்.

இரண்டு மணித்தியாலம் ஒரே தோசைய போட்டு பிரட்டி பிரட்டி எடுக்கிறது போல எங்களை ஆவ்வ்வ்....
இப்படி யாரச்சும் பேசினா ஒரு இரண்டு மணித்தியாலத்துக்கு பொத்திக்கொண்டு ரோசம் வந்துடும்.அப்டி வரேக்க,பேப்பரை கையில் வைத்த படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்

பேப்பரில் பெரும்பாலான இடங்களில் ஒரு பெரிய முட்டை கருக்கட்டி  தனக்குள் சின்ன முட்டை போட்டிருந்தது.
இயற்கைக்கு மாறான செயல்.
எல்லோரின்
மனசுக்குள்ளும்
"அடுத்த தவணை படிப்பு
படிப்பு
படிப்பு தான்
என்ற சபதம் ஓடிக்கொண்டிருந்தது.

இருந்தாலும் எடுத்தது சபதம்தானே
சத்தியம் கிடையாதே.

அத மீறப்போறாதால ஒரு நசுட்டமும் வரப்போறதில்லை.மற்றது மீறுறதுக்கு காரணம் நாங்களில்லை என்டதால கடவுள் கண்ணைக்குத்தமாட்டார் என்டதும் உண்மை.

தவணை முடிந்து
ஒரு மாதம் லீவு விடும் போது ஒரு நெஸ்டால்ஜிக் பீலிங் வரும்

"கருவறை எங்களுக்கு வேறாக இருந்தாலும்
வகுப்பறை என்னவோ ஒன்றுதான்."

லீவு முடிஞ்சாச்சு,
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
சீரியஸ்ஸா படிக்க தொடங்கிலாம். போனதவணை சபதம் பண்ணிணாங்கள் ஆயிற்றே,இருந்தாலும் ஆடின கால் ஆடாம இருக்காது ஆடத்தான் செய்யும்.
அதால வெளி உலகத்துக்கு தெரியாம வகுப்புக்குள்ள மட்டும் சின்ன சின்னதா சம்பவங்கள செஞ்சாலும்
இரண்டு மூண்டு நாளால எங்களை பத்தி கதைக்க
ஸ்டாவ் மீட்டிங் போட்டார் பிரின்சிப்பல்.
..........

வகுப்பினுள் மட்டும் குழப்படி .
எப்படி செய்வது

தேவையான பொருட்கள்
டஸ்ரர்,சோக் துண்டுகள்
சாப்பாட்டு கடதாசி
இதர பிற எறி கருவிகள்
உரத்த குரல் வளம் Etc,

டேய் எறியாத!
பிளாக் போட்டை  அழித்து
அப்படியே சுழட்டி வீச..
டஸ்ரர் பறந்தது

அதிலிருந்து தப்ப
மேசையின் கீழ் அதிரடியாக பாய்ந்தான்
கோபி (நொட் குண்டுக்கோபி இது மத்த கோபி.குண்டுக்கோபி பாயறதுக்கு வகுப்பில தடை வதிச்சிருக்கு. )

கதிரையை இழுத்து பின்னால்
விட்டு எல்லாரும் எழுந்து நின்றனர்
இருங்கோ.
ஜீன்ஸை கொஞ்சம் மேல இழுத்து விட்டு ,
மைக் முன்னால் நின்று
ஊஷ்.. ஷ்... ஷ்
வழமையான வளி மீதான விசை பிரயோகம்.

இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் உப அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு
இந்த தவணை நிறைய நிகழ்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கு
ரீச்சர்ஸ் டே
நவராத்திரி
.....................
......................
வழமையாய் அதிகம் கதைக்கும் அதிபர்
நேரடியாய் பிரதான கருவுக்கு வந்தார்.

பக்கத்தில் பெரிய சோக் துண்டு கிடந்தது அதை இரண்டாக முறித்து திப்புவுக்கு
எய்ம் பண்ணி
எறிய
அது பறந்து., பறந்து மேலலால போய்....

சொத்திக்கையா நான் இங்க நிக்கிறன் பக்கத்து வகுப்புக்குள்ள எறியிறாய்?

என்ன ஞானப்பழம் சேர் உங்கட வகுப்பு வலுத்த மோசமா கிடக்கு
பக்கத்து வகுப்புக்குள்ள சோக், டஸ்ரர்
மட்டுமில்லாம திண்ட சாப்பாட்டு பார்சல்லையும் எறியிறாங்களாம்.

கதிரைக்கு மேலால் ஏறி தொம் என்று தரையில் கால் வைத்து ஐங்கியை அவன் எட்டி பிடிக்க
வாங்கு அப்பதான் தப்பான கோணத்தில் லாண்ட் ஆகியது.நியூட்டன் இஸ் கிரேட்.

அது மட்டுமில்லை சேர் கீழ் வகுப்பில பாடம் எடுக்கேலாமா கிடக்கு
அவங்கள் மேல நிண்டு எந்தநேரமும் கடா ,புடா, கடா, புடா எண்டு உழுந்தரைக்கிறாங்கள்

ஏன்? சேர் நீங்கள் வகுப்பை வடிவா பார்கிறதில்லையா.
என்ன?
இல்லை, சே...ர்

நான் பார்க்கேக்க,
வடிவாத்தான் இருக்கிறாங்கள்.

உனக்கு,
தண்ணி போத்தலை தூக்கி எறிய
அதன் மூடி க....ழ......ண்.......டு
புவி ஈர்ப்பு ஆர்முடுகலுடன்
போத்தல் முதல் விழ

அது மட்டுமில்ல
மேல இருந்து தண்ணியை ஊத்துறாங்கள்

என்ன "தண்ணி "

"பச்சை தண்ணி" சேர்

என்ன.,...

..............................
..............................
அந்த இடத்தில் ஞானப்பழம் சேர் கண்ணில் தூசி விழுந்து கண் கலங்கியது அடுத்த நாள் எங்களுக்கு தெரிய வந்த போது

எவ்ளவோ பேச்சு வாங்கியிருக்கிறோம்
எல்லாரிடமும்
சிலரிடம் ஏதாவது ஒரு காரணத்துக்காக
சிலரிடம் எந்த வித காரணமும் இல்லாமல்.

எதுவும் பாதித்ததில்லை

ஆனால்,
அன்று ஞானப்பழம் சேர் எங்களுக்காக சிரித்துக்கொண்டே ,அழுத போது
அடி வயிற்றை எதுவோ பிசைந்தது.

அது மட்டுமே இல்லாமல் மீட்டிங்கில் ஒட்டு மொத்த உயர் மட்டமும் ஆலோசித்து பண்ணிய வேலை

வேற வழியில்லை ,உதுகளை வெட்டி விட்ரோணும்.
வர வர வளர்ந்து கொண்டே, போகுதுகள்.

அடுத்த நாள்,
காலை ,
அதிர்ச்சி.

வகுப்புக்கு முன்னால் நின்ற பச்சை மரத்தை கொன்றுவிட்டார்கள், இனி காத்தடிச்சா கண்ணில மண் விழாது மண்ணாங்கட்டியே விழும் என்கிற நிலை.முட்டுக்கால்ல வகுப்புக்குள்ள நின்டாலே அதிபருக்கு அங்க ஒபிஸூக்குள்ள எங்கள வடிவா தெரியும் என்ட நிலை.
ஆனா இவங்களை ஒரு மாதிரி அடக்கியாச்சு என்டு அவையள் அங்க இருந்து கொக்கலிக்கேக்க கொஞ்சம் மேலால எட்டிப்பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்,
நாங்கள் ஒருத்தரும் வகுப்புக்குள்ள இல்லை என்ட விசயம்.

அடுத்த நாள்


அடுத்த எபிசோட்டுக்கு தாவவும்......

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் -01

இப்படி எல்லாம் நடந்தே இருக்காது.உவன் நல்லா சரடு விட்டு வெடிக்கறான் என்று வாசிக்கும் போது நினைக்கபோகின்ற பக்கங்கள்.
ஆனால் 95 பேர்சன்டேஜ் கதையும் நிஜமான உண்மை எரியாத கற்பூரம் மேல் சத்தியம்.மீதி 5   க்கும் ஆங்காங்கே சாண்டில்யன் கதை யவனராணிக்களும் மஞ்சுக்களும் உலாவுவார்கள்.கண்டு கொள்ளாதீர்கள்.
இது  பகிரங்கமான திகதி இல்லாத டயரி.
என்ன இந்த டயரியில் சிறப்பென்றால் முடிந்து போன காலத்தில் இது இருக்காது,முழுக்க முழுக்க நிகழ்காலத்தில்  ஓடும்,எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.
மற்றவர்கள் டயரியை வாசிப்பதில்லை என்ற கொள்கையில் நீங்கள் இருந்தால் மூடி விடவும்.நல்ல பழக்கம் அது.இல்லை என்ன எழுதியிருக்கு என்று தட்டிப்பார்க்கலாம் என்றால் அதுவும் பிரச்சினை இல்லை.தொடர்ந்து வாசிக்கலாம்..
                           #######
முதல் நாள் அப்படியே படிகளை ஒண்டு ஒண்டா தாண்டி மேல் மாடிக்கு வந்து
1 வது இல்ல
2 வது இல்ல
3 வது இதுதான்
இதுதான் நம்ம வகுப்பு என்று பார்க்கும் போது முட்டையோடு உடைந்து புது உலகத்துக்குள் பிரேசித்த உணர்வு.இன்னும் 2 வருடங்களுக்கு சொர்க்கம் இங்கே தற்காலிக இடமாற்றம்.
பார்த்த உடனயே பரவசப்படக்காரணமிருந்தது.கலவன் பாடசாலை என்று பெயர் தான் ஒழிய உவங்கள் எங்களை கலந்து விடுறது என்னவோ ஏ.எல்லுக்கு வந்தாப்பிறகுதான்.
அறுத்து விட வேண்டிய வயசில அவுட்டு விட்டறதால ஜாலி நமக்குத்தானே!

ஏ.எல்லுக்கு கீழ கூட்டும்முறை என்ட சிஸ்டத்தில பாதிக்கப்பட்ட  கோடிகளுக்குள்ள நானும் ஒருவன்.
இப்ப பார்த்து பரவசப்பட்டது.

வகுப்புக்குள்ள 5 பேர் like  பஞ்ச பாண்டவர் போல.
அட வகுப்பு கூட்ராங்கப்பா மனசுக்குள்ள ஒரு புளுகு .இவளுங்க இனி டெய்லி கூட்டுவாளவ நமக்கு இனி ஜாலி தான் போ
என்றப்போ

ஒவ்வொருத்தனா வந்தாங்க
டேய் .,
மச்சி,
அவன் இவன் தெரிஞ்சவன் தெரியாதவனு
மொத்தம் 21 பேரைக்கொண்ட,அந்த வகுப்பு
THE M2
ஜனனமாகியது இந்த முற்றுபுள்ளியில் தான்.
அது தொடரபோகிறது.....

ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கனவுகளோடு தான் இங்கே நுழைகிறான்
சிலர் கனவுகள் இங்கேயே புதைக்கபடும் சிலர் கனவுகள் நிஐங்களாகி நினைக்கப்பட்டும் .....

இப்டி கவித்துவமா சொல்லா விட்டாலும் கண்றாவியாக  இந்த இரண்டு வரியைதான் இண்டைக்கு பாடமா வச்சு எடுப்பாங்கள் என்ற அந்த எதிர்பார்ப்பில் ஒன்றரைப்பிடி மண் எடுத்து வந்து கொட்டிய முதல் பெருமை

Good morning sir!!!
16 கோரஸ்
மூணு வயலின்
இரண்டு ட்ரம் சேர்ந்து வாசித்து வரவேற்றோம்.

ஞானப்பழம் Sir - class teacher எங்கட வகுப்புக்காக எதிர்வரும் காலங்களில் நடக்கும் Staff meeting குகளில் நிறைய அடி வாங்க போகின்றவர். (எனக்கு பட்சி இப்பவே சொன்னது )
பொண்டிங் கட் விட்டால் நன்றாக இருந்திருக்கும்.விடவில்லை.கிளீன் சேவில் இருந்தார்.
அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
எந்தமாதிரியான கரெக்டர் என்று கணிப்பது கஸ்டமாக இருந்தது.
இணைந்த கணிதத்துக்கு உ போட்டு தொடங்கி முடித்தது போய்விட்டார்.
வகுப்பில மொத்தம் 5 ஏவாள் பரம்பரையும் , 16ம் ஆதாம் பரம்பரையும் இருந்தது.

இங்கே இத்தனை மணி இத்தனை செக்கனில் Big bang உருவாகியது வெளியுலகிற்கு தெரியாது.
வகுப்பில முதலில் இருக்கறப்போ சாதுவாய் டிசைன் பிளைச்சுட்டுது .நாங்கள் எல்லாம் முன்னால அவளவயள் எல்லாம் பின்னால என்டு இருந்தாச்சு.சரித்திரமே எங்களை பார்த்து தரித்திரங்கள் என்டு சிரிச்சுக்கொண்டிருந்தது, அங்கே அப்படி இருக்கறத பார்த்து.
அதால "ஏய் பின்னால நாமதான் இருப்போம்" என்று சொல்லுவதற்கு குண்டுக்கோபியை தூதனுப்ப காரணம் இருக்கிறது.அந்த சைட்டில் குண்டுக்கோபியை எதிர்கொள்ளக்கூடிய ஒரு மல்லி(மல்லனுக்கு எதிர்ப்பால் மல்லிதானே?) கஜனி என்ட பேர்ல இருந்ததுதான்.

தன்மையா நாங்க கேட்டத முடியாது என்டு வன்மையாய் கோபியையே திருப்பி அனுப்பிட்டாளுங்க.
கோபியின் முகம் கோபத்தில் சிவந்து போய் கிடக்க.

அடுத்ததா பிளான் B யைப்போட்டு அடுத்தநாள் காலமை அத அமுல்படுத்தினம்.
ஆணாதிக்கம் அதிகரிச்ச இடத்தில் பாரதி வந்தென்ன பார்த்த சாரதி நொந்தென்ன.
அதிகாலைக்கு அண்மையாய் வந்து அவயின்ர இடத்தை ஆட்டயப்போட்டதுக்கு எதிர்த்தாக்கம் கொடுத்து வகுப்பு கூட்டாம அம்மிட்டு இருந்து கொள்ள

போங்கடினுட்டு! நாங்களும் அத மைன்ட் பண்ணல.

இந்த இடத்தில தான்  Sectional head ஜ கொண்டுவந்து அறிமுகம் பண்ண வேண்டும்
எங்களுக்கு ப்சிக்ஸ்க்கும்  பாடம்மும் அவதான் என்ற வசயம் லேட்டாகி ரிவீலான போது...

சியாமா ரீச்சர்.
இனி வரப்போகிற நாட்களில் இவவிடம் பேச்சு வாங்காட்டி எங்களுக்கு ஒரு மாதிரியாய் இருக்கும் என்ற நிலை வரும் போல தெரிந்தது.பேச்சு,அறுவை அத்தனையும் சராமாரியாய் விழும்.ஆனால் கோபமே வராது.கோபம் வர்றப்போல பேசுறதுக்கு அவவுக்கும் முடியாமலிருந்தது என்பதும் ஒரு வகை நிஜம்.வகுப்பாசிரியர் பதவி என்னவோ ஞானப்பழம் சேர் பேருக்குத்தான்.ஆனால் கேர் டேக்கராக டீச்சரை  இருத்திக்கொண்டோம்.ஒரு வகையில் எங்களின் வகுப்பில இருந்த அத்தனை பேரும்  மதிப்பு,மரியாதை,போன்ற இரண்டு விசயங்களை மானசீகமாய் கொடுத்தது இவவுக்கு மட்டுமாய்த்தானிருக்கும்.

"வகுப்பு கூட்டலயா இன்னும்?"

என்ன நடக்கும் டிக்,டிக்...டிக்..டிக்

"ம்ம் எழும்பி கூட்டுங்கோ.படிப்பை பிறகு பார்க்கலாம்.உப்புடியே வீட்டையும் இருக்கிறியள்."
தலய குனிஞ்சா அவ சொல்லுறது எல்லாம் மேலால காத்தோட போடும் என்டு ஒரு நமுட்டு நம்பிக்கையை பாலோ பண்ணிணேன் நான் + மீதி எல்லாரும்.
கொஞ்சத்தால மண்டைக்கண்ணால் பார்க்க தும்புத்தடி ஆடுவது தெரிந்தது.
பெண் பாண்டவர்ஸ்ஸே எழும்பி கூட்றாங்க. அட அவ நமக்கு சொல்லடா!
ஒரு வெற்றிச்சிரிப்பு கம
ஒரு நையாண்டிச்சிரிப்புக் கலந்து அவளுகளின் பக்கமாய் அனுப்ப" ரீச்சர் கூட்டுறதுக்கு ரைம் ரேபிள் போடனும்" தர்மாவான் தர்மன் கூட்டிக்கொண்டே குரலெழுப்ப
5 பேரையும் 5 நாளும் ஒவ்வோருத்தராய் போடலாம் என்டு கீச்சிட்டான் குரல்லில் திப்ஸ் என்கிற திவாகரன் காமெடியாய் சொன்னதை டீச்சர் நிஜமாக்கிவிட இன்டேர்வலின்போது ஆளுக்கொரு அல்வா வாங்கி கொடுத்தோம் ஆச்சி கடையில் அவனுக்கு.

இந்த திப்ஸ் என்கிற திவாகரனை
நன்றாய் கவனிக்கவும். அவன் இப்ப இந்த நிமிடத்தில இருந்து ரீச்சர்டயும் நம்ம வகுப்பு கேர்ள்ஸ் கிட்டயும் வாங்க தொடங்கற பேச்சு கடைசி வரை வாங்கிட்டேதான் இருக்க போகிறான்.ஆக்கபூர்வமான அலப்பறைகள் அவனுடையவை.
அதால வகுப்பில அவனை பிடிக்காதவங்கனு யாருமில்லதுதான் அபூர்வம்

இவன் பாடம் நடக்கேக்க ஆரம்பிச்சு விட்டா தொடங்கும் கதை
ஒரு 4,5 நிமிசத்துக்கு ரவுண்ட பண்ணும்
அப்புறம் ரொம்ப நல்ல பிள்ளையாட்டம
.......... ...........
.......... ............
........... கிடையுடன் பந்து அமைத்த கோணம் காண்க?
னு ஒரு கேள்வி எழுதி முடிச்சுட்டு

(மீண்டும் மேலிருந்து வாசிக்க)

அடுத்த பாடம் லாபுக்குடா!!!
வாத்தி வந்துச்சா என்ன? ஒரு பெல் சத்ததுக்கு இப்டி நிறைய கேள்விகள் வரும்.அதுக்கும் மேலால இப்டி கீழால போற லைனைப்பார்த்து ஒருத்தன் கூப்பிடுவான்.

"டேய் கப்பலு, பாய்மரம் எல்லாம் போகுதுடா"

இப்ப ....
டேய் ஸ்ஸ்ஸ் பப்பி தலைய தலைய ஆட்டினான் கீழே பார்த்து
அன்னதானத்துக்கு  அடிபட்டு பார்ப்பது கீழால சங்கீதபாடத்த்துக்கு லைனாய் ஒரு லைன் போகும் அதில்  ஒண்ணு,இரண்டு.... ம்ம் .?..நாலு சூப்பர் மூணு பரவால்ல இரண்டு மட்டம்.

இப்டி
மேல் மாடில நிண்டு ....ரேட்டிங் போட்றதுக்கும்
கீழால சங்கீதம் படிக்க போற பொண்ணுங்கள பார்த்தே எங்களோட சங்கீத திறமைய வளர்த்து கிட்டதுக்கும் ஒரு பாரிய உதவி செய்தது எதிர்தாப்புறத்தில இருந்த மரம்.அந்த மரம்தான் இப்டி அதில நிண்டு பார்க்றத அதிபர் பார்க்காம மறைச்சது .பசுமை காக்க வேணும் என்பது நிஜம்தான் பல விடயங்களில்

அந்த லைன்ல போற ஒரு பொண்ணு இருந்திச்சு. மேல நாம நிக்கிறத  எப்படியும் பார்த்துவிடுவாள். மண்டகண்ண உருட்டி கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு சிரிப்பாள் இத பார்த்துட்டு
சூ மந்திரகாளி!!! சொல்லி மறையறது போல உடனடியா நம்மாக்கள் கீழ் படில நிப்பாங்க இங்கதான்  கதையோட டேர்னிங் பாயிண்டே  இருக்கு.
அந்த கிராதகி என்ன பண்ணுவாள் ஒவ்வொருத்தரையும் தனிதனியா பார்த்து சிரிக்கிற மோனாலிசாவாய்  போவாள்.
இறுதி மட்டும் யாரைப்பார்த்து சிரிச்சாள் என்கிறது மர்மமாயே மடிஞ்சுட்டுது
இருந்தாலும் கடோசி வரை பப்பி, டினா, ஞானி னு எவனும் சோர்ந்து போகல.
கதையில் ஹீரோ மட்டும்தானா வில்லன் கிடையாதா என்று கேட்டால் அட...

அடுத்தது பக்கத்து வகுப்பு.

வைர சுரங்கத்தை பார்த்திருக்றீர்களா யாராவது?
நினைக்கிற மாதிரி இலகுவாய் எல்லாம் வைரம் கிடைக்காது அங்கே.
சுத்தி சுத்தி தோண்டணும் ஆங்காங்கே
அப்பப்தான் ஒரு நாலஞ்சு வைரம் கிடைக்கும்.
மீதி பூரா கரி எனப்படும் காபன் கிறபைற்றுதான் இருக்கும்.

சின்ன வயசில தமிழ் படிப்பிச்ச ஞானசம்பந்தன் சேருக்கு கோடி நன்றிகள்.
உவமானம் வைரச்சுரங்கம்
உவமேயம் பக்கத்து வகுப்பு.

அதுவும் அந்த வகுப்பில
ஆலாபலஅங்காலபரமேஸ்வர ரங்கநாயகிணி னு ஒரு பொண்ணு இருக்கு
பொண்ணுணா பொண்ணு அப்படி ஒரு பொண்ணு பேரு மாதிரியே.
ஒட்டு மொத்தமாய் எங்கட வகுப்பு அதிகமா பயப்படுற ஒரு விசயம்னா அது அவள பார்த்துதான்.உருவம் எல்லாம் சுமார்தான்.பட்

64 கலையில இவளுக்கு தெரிஞ்ச கலை ஒண்ணுதான்
போட்டுக்கொடுத்தல்.அவளுக்கு கெல்ப் பண்றதுதான் மிச்ச பாதியோட வேலை அங்க.
பக்கத்து வகுப்பில யாரவாது இத வாசிக்கறப்போ யாராயிருக்கும் என்டு சந்தேகம் வந்தால்,தொடர்பு கொள்ளவும்.ஆளுயுர கண்ணாடி அனுப்பி வைக்கப்படும்.

ஆனா இது எல்லாத்துக்கும் மேலால இன்னுமொன்னுக்கும் மொன்னு விழுங்கிற விசயம் இருந்தது

E...n..g...l...i...sss...hh,

லிட்ரேச்சர் புத்தகம் நாலைந்தும்,வேறேதாவது இங்கிலீஸ் புத்தகம்,ஒரு டயரி,இல்லை ஒரு பைல் கையோடு நெஞ்சில் அணைத்துக்கொண்டு நடக்கும் போது ஒரு மிடுக்கிருக்கும்.

ஜெயவீரசிங்கம் சேர்.

கடைசி வரை அவரோட லைவ்ஃல ஜெயம் காண முடியாம ஏதாவது ஒரு விசயம் குறையா இருக்க போகுதுன்னா அது எங்கள் 16 பேரையும் ஒண்டா சேர்த்து வைச்சு ஒரு நாளவது ஆங்கிலம் படிப்பிக்கேலயே என்றதுதான்.

இப்ப  இங்கிலிஷ்.பாதி பேர் இன்விசிபிளாகிட்டாங்கள்  கண்ணை மூடின ஹப்புக்குள்ள.

அட !பாவிங்களா சொல்லாம கொள்ளாம போட்டாங்களே !
கர்த்தர் அந்த படுபாவிகளை மன்னிக்கட்டும்.
மெதுவா எழும்பினன் கூட இருந்தது
அங்கால,
அதுக்கு, அங்காலனு 2,3 எழும்பிச்சு.
லைப்ரரி ஓ! இல்லை வேறெங்கேயோ!
போகும் வழி தூரமில்லை, இனித்தான் மறைவிடத்தை மூக்கில் விரல் வைத்து பார்க்க வேண்டும்,ஓடும் வழியில்,எழும்பி வாசலுக்கு போக...

"சேர் வெளிகிட்டார் அப்பவே, வந்து கொண்டிருப்பார் " கீர்த்தி என்கிற அந்த கீர்த்திகாவின் தகவல் மண்டைக்குள்ள உறைக்குறதுக்குள்ள

ஆ! உங்கட மரியாத புல்லரிக்குது எனக்கு!
நான் வகுப்புக்கள்ள வந்தாப்பிறகு எழும்பினா காணுமே.இருங்கோ,இருங்கோ.

அப்பம் நக்கின மூஞ்சி எப்படி இருக்கும் என்று நிறைய நாளாய் இருந்த டவுட் கிளியரானது இண்டைக்குத்தான்.ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு.

அடுத்த ஆப்பு இறுக்கப்பட்டது!
கடைசியா எந்த செக்சன் பார்த்தனாங்கள்.
இந்த இடத்தில 2 பிரச்சினை வரும்
1.கடைசி செக்சன் தெரியரதுக்கு கடைசி வகுப்பில இருந்திருக்கணும்.
2.இருந்தாலும் அத சொல்ல புத்தகம் வைச்சிருக்கணும்.

அரசாங்கம் இஷ்டத்துக்கு ஒரு புத்தகத்தை சீ.ஆர் கொப்பி சைசில் அடிச்சு விட்டிருக்க,அது யார் வீட்டு மேசையிலும் பட்டிருக்காது.வகுப்பு மேசைக்கு கீழயே முடங்கிவிடும்.முதல் நாள் வைத்து விட்டு போவது அடுத்தநாள் பாடத்துக்கு இருந்தால் சரி இல்லாட்டி பக்கத்து மேசைக்கு கீழ இருக்றதை உருவுறதுதான் வழமையான வழமை.

என் கஸ்டத்துக்கு என் மேசைக்கு கீழே....  கீழ பலகையே இல்ல புத்தகம் எப்படி இருக்கும்.
டேய் புத்தகம் ஒண்டு தாடா!
இழுத்தன் பின்னாலிருந்தவன்ர புத்தகத்த
டர்ர்ர்........
ஸ்ஸ்,பாவனை அதிகமான புத்தகம்
பத்தாக்குறைக்கு நான் ஒற்றைய பிடிச்சு
இழுக்க அவன் புத்தகத்த பிடிக்க
"கிழிஞ்சுது "
புத்தகம்.

உங்களிட்ட புத்தகம் இல்லையோ?
நெற்றிக்கண் திறக்க போகிறது.

புத்தகம் இல்லாட்டி வகு.......

பக்கத்து வகுப்பை பார்த்தன், எதுக்கும் உதவாது.

அடுத்தது சீனியர்ஸோட வகுப்பு,
அங்க தங்கராணி ரீச்சர்
"உங்களுக்கு அசிங்கமாயில்லய புத்தகம் இல்லையெண்ட"
இதில என்ன அசிங்கம் இருக்கெண்டு எனக்கு புரியல .

அங்கயும்,
புத்தகம் இல்லாத ஆட்கள் வகுப்........

அந்த வசனத்தை கேக்கிறதே அசிங்கம் என்று நினைக்கும் போது முழுசா எழுதவா முடியும்.

இப்ப புத்தக வேட்டையில் நிறையப்பேர் இணைய. உண்மைல என்ன பிரச்சினை எண்டா எந்த வகுப்புக்கு முதல் நாள் கடோசியா இங்கிலிஷ் நடந்துச்சோ அங்க எல்லா புத்தகமும் கிடக்கும் அத தேடி பிடிச்சா சரி.ஒரு மாதிரி பயோ வகுப்பில தண்டிட்டு வந்நு இருந்தன்.
பாதி இன்னும் வரல.

இப்போது வகுப்பை வடிவாய் பாத்தால்
இருக்கற எல்லாரும் தலைய குத்தி போன நூற்றான்டில் இறந்த மார்டின் லூதர் கிங்குக்காக கவலைப்பட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஏதாவது எழுதிகொண்டிருப்பார்கள்.
நிமிரவே மாட்டாங்கள்.

பீனோலட பென்சீன் டை அசோனியம் குளோரைட்டை கலக்க,வட்டத்த நிமிர்கோணத்தில் வெட்டி, சாரீரப்பதனை காண்க
அப்டினு சுத்தி வர கேட்கிற எல்லா சத்ததுக்குள்ளாலயும் advantages of tra......என்டு கொஞ்சம்  இங்கிலிசூம் கேட்கும் .

நானும் மத்தவங்களை போல தலய குத்தினன்
எழுத கூடிய மாதிரி ஒரு இடமா புத்தகத்தில எடுத்தன்.

அவளும் நானும்
அந்தி சாயும் நேரம்
கடற்கரையில் கால் நீட்டியிருந்தோம்,.
நான்தான் அஸ்தமன சூரியன் என்றேன்
அவள் ஏன்? என்றாள்
புரியவில்லையா
உன்னைத்தான் சந்திக்க போகிறேன் இரவுக்கு.

டேய் இத, பார்! ஐங்கி நோண்டினான்.
அவன் புத்தகத்தில் குண்டுக்கோபின்ற சைட் போஸ்.
The hulk.
இப்படி ஒவ்வொருதன் புக்கும் ஒரு கலைக்கூடமாயும் இருக்கும்.ஒவ்வொருத்தனும் பிக்காசோவாயும்,வேட்ஸ்வேர்தாயும் இருப்பான்.அந்த ஆங்கிலேயரின் மொழி நேரத்தில்.

சேர், எக்ஸ் கியூஸ் மீ!
நிமிர்ந்தோம்...........

அன் இன்ரூடர்.

எல்லா தலையும் நிமிர்ந்தது.
அட! ஆலாபலணா
(அவள் பேரை இப்படி வச்சுக்கங்க ரைப் பண்ண கை நோகுது)
எவன் தலையில் எள்ளரைக்க போறாளோ இண்டைக்கு .


டாடா அடுத்த எபிசோட்டுக்கு பறக்கவும்.....