சேர், எக்ஸ் கியூ...
என்னம்மா?
"உங்களை அதிபர் வரட்டாம்."
"இப்பவோ?"
"ஓ"
அவர் வெளிக்கிட அடுத்த பெல் இன்டேர்வல்
சோ லெட்ஸ் டேக் ஏ பிரேக்....
வீட்டில் சுத்தி வர மாமரம் நிக்கும்
அதில உள்ள மாங்காய குரங்கு பிடுங்கினாலும் ஏன் குரங்கே? என்டும் பார்க்கத அதே நான் மணியம் சேர் வீட்டு சேலன் மாங்காய்க்கு கிங்கொங்காய் அடிபட்டிருக்கிறேன்.
வீட்டில் கடலை அவித்து கொட்டுவார்கள்.தின்னுடா! புரதம் என்டு.நாய் கூட எனக்கு தாற முழுதையும் தின்ன மாட்டுது
ஆனால் கோயிலில் தரும் அந்த ஒரு பிடி கடலைக்காக அடிபட்டு தின்னும் போது மனம் யோசிக்கும் ஐயரை போல உதுகளுக்கு ஒரு நாளும் சமைக்க தெரியாது.
அதை போல வீட்டில் வெறுத்துப்போன புட்டும்,தோசையும்,இடியப்பத்துக்காகவும் இங்கே நானும் சக போரளிகளும் நடத்த போகும் மினி உலக யுத்தம்தான் இந்த இன்டேர்வல்.
3 மேசைய சுத்தி வர எல்லோரும் கதிரைய போட்டோம்
"எடுத்து வைங்கடா பார்சல்களை எல்லோரும்"
யெஸ்! அந்தக்குரல் சாப்பாட்டுக்கு பொறுப்பான சாட்சத் நம்ம ................
இல்ல நான் இதில பேர் எழுதக்கூடாது எழுதினா ஐங்கி அடிப்பான்.
உப்புடித்தான் முதல் ஒருக்கா ஐங்கி என்டு எழுதறதுக்கு பதிலா ஜங்கி என்டு மாறி எழுதினதில ஆளுக்கு பயங்கர கடுப்பு.
எல்லோரும் சாப்பாட்டு பார்சலை மேசையில் வைத்தோம்.
ஒருத்தரும் இப்ப தொடாத, கொஞ்சம் பொறு .
எல்லோரும் அவன் மூஞ்சிய பார்த்தோம் !!
என்ன இது "அன்னம் பாலிக்கும்...."
பாட போகிறானா ரூல்ஸ் ல அதல்லாம் இல்லையே அப்புறம் ஏன்?
ஆனா ஒருத்தரும் தொடல்ல.
இந்த பங்குச்சந்தைக்கு அவன்தான் லீடர்
அவன் வைச்சதுதான் சட்டம்.
1.இருக்கிற எல்லாரும் சாப்பிடணும்.
2.இயன்றவரை எல்லாரும் சாப்பாட்டு பார்சல் கொண்டரோனும்
★கட்டாயம் கொண்டறத மேசைல வைக்கணும்
3.சாப்பிட முதல் கை கழுவுறதும் கழுவாம விட்றதும் அவன் அவன் இஷ்டம்
4.பட் கழுவிட்டு வாறதுக்குள்ள சாப்பாடு முடிஞ்சா அதுக்கு சந்தை பொறுப்பேற்காது
இப்ப என்ன பிரச்சினை .
10 பேர் 9 பார்சல்.எல்லாரும் குனிய திலகர் கவட்டுக்குள்ள தன்ர புட்டுப்பார்சலை ஒளிச்சு வைச்சிருக்க அதைப்புடுங்கி மேசைல வைச்சுட்டு தலைவர் ஒரு பார்சலை ரன்டமா செலக்ட் பண்ணி ஓப்பன் பண்ண பாய்ஞ்சு .எல்லா கைக்குள்ளயும் என்
கைய விட்டன் .
தோசை.
இழுத்தன்.
பாதி இட்டலியாய் பினைஞ்சு வந்தது கையில்.
வாய்க்குள்ள அடைஞ்சு கொண்டு
" சம்ப...ல் கொண்ட...ரல்ல..யோடா"
திலகர் புட்டு போன விரக்தியில் வெறும் சம்பலை மட்டும் தின்டு கொண்டு இல்லை என்டு தலையாட்டிச்சு.
ஏனைய
9 பார்சல்களின்
கதையும் மேற்கூறிவாறு போக..
உயிர் வாழ்றதுக்காக சாப்பிட்றவங்கள் ஒரு வகை.
சாப்பிட்றதுக்காக உயிர் வாழ்றவங்கள் இன்னொரு வகை.
2 வது வகையை பிரதிநிதித்துவப்படுத்தினது எங்கட வகுப்பு.
20 நிமிட இடைவெளியில் 5 நிமிசம் சாப்பிட்டு பாக்கி பதினைஞ்சு நிமிசம் என்ன பண்ணுறது என்டா காதல்.
சாப்பிட்டு கை கழுவிட்டு
அப்படியே பப்படி ல இருந்து சிலர் கழண்டு போவாங்க.
இதுக்குள்ள தனி தனியாக போறன்களே இவங்களுக்கு ஆங்காங்கே அவங்க பச்சை கொடி காட்டிட்டு இருப்பாங்க எங்கயாவது நிண்டு.இது வலு டீப்பான லவ் ஆ இருக்கும்
இன்னொரு வகை இருக்கு அது .வன் சைட்.
இது கட்டாயம் கூட ஒருத்தனை துணைக்கு கூட்டிட்டு போகும்.
இப்ப போறது நான் என்டு வைங்களேன்.அட ச்சும்மா ஒரு உ+ம் தான்.
கண் தேடும் எங்க எங்க என்டு.கூட வாறது ஈசியா முதல்ல கண்டு பிடிச்சுக்காட்டும்.
காதினுள் கிசு கிசுக்கும்
என்னடா?
உன் ஆள் வாறடா!!!
சகலமும் விழிப்புற்றது உடலில்
இதய துடிப்பு எகிறியது
அதிரலீன் அதிகம் சுரந்தது
நெல்லி மர இலைகள் அதிகமாக உதிர்ந்தன.
இண்டைக்கு பார்பாளா?
நேற்று பார்த்தாளே திரும்பி!!
எங்கடா?
பைப்படில தண்ணி குடிச்சுட்டு போறாள் பார்.பார்த்துக்கொண்டு
நின்றேன்.
திரும்பவில்லை
நின்றேன்.
திரும்பவில்லை.
பார்த்தேன் ........ம்க்கும்.
போவம் என்று திரும்பும் போது பின்னால் திரும்பி
பக்கத்தில் கதைத்து கொண்டே பார்த்தாள்ள்ள்......
காதலும் சரி
கத்தரிக்காயும் சரி
டேஸ்ட்டா இருக்கிறது ஸ்கூல் ரைம்ல மட்டும்தான்...
எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாம காதல் வரக்கூடிய ஒரே ஒரு இடம் இங்கே மட்டும்தான்,
ஆனால் வெளியுலகம் அதை இன்பட்சுவேர்சன் என்டு அடிச்சுவிடும்.ப்ளடி இடியட்ஸ்.
பிரச்சினை எதுவுமே இல்லாம ஒரு சினிமா படம் எடுத்தா எப்டி இருக்கும் என்டொரு நினைப்பு நிறையநாளா ஓடிட்டு இருந்தது.
படம் புல்லா சந்தோசமான சீன் மட்டும்தான்வில்லன் இருக்க கூடாது.
ஹீரோ,ஹீரோயினை லவ் பண்ணணும், அவங்களை யாரும் பிரிக்க படாது. முக்கியமா அவங்களாவே பிரிஞ்சு அப்புறம் கடைசில சேர்ர மாதிரி பந்தா காட்டக்கூடாது அப்புறம் அதுக்கு இன்னுமொரு அன்ரி கிளைமாக்ஸ் வச்சு அவங்களை சாக்காட்ட கூடாது.ஆக ஒன்லி இரண்டு பேரும் ஹப்பியா இருக்கிறதை மட்டும்தான் காட்டணும்.
உதாரணத்துக்கு தலைவரோட ஓகே கண்மணி ரகப்படங்கள்.அது கூட மேலே சொன்ன எல்லா வரையறைகளையும் திருப்தி படுத்தியதா என்றால் கிடையாது.கொஞ்சம்..கொஞ்சம்தான்...
ஆனா பிரச்சினை இல்லாம மணிரத்னம் போல ஒரு சிலரால மட்டும்தான் இன்ரஸ்ட்டா படம் எடுக்க முடியும்.ஏன்னா பிரச்சினை இல்லாட்டி படமும் சரி பள்ளிக்கூட லைவ்வும் சரி பிளாப்பாயிடும்.
பந்தி பந்தியா நிறைய பிரச்சினை எழுதலாம்.இருந்தாலும் அதில்லை இந்த டயரியோட நோக்கம் அதுக்கு மேல இருக்கிற ஓகே கண்மணி டைப்.அதால வந்த பிராப்ளம்ஸ் எல்லாத்தையும் ப்பூ என்டு ஊதி தள்ளினதில முதலாவதா பறந்த தூசி எக்ஸாம்.
எக்சாம் எழுதி பேப்பர் தரேக்க
எவன் மூஞ்சிலயாச்சும் எக்ஸாம் ஊத்திக்கிட்ட மாதிரி கவலையே இருக்காது.இருக்கிறது போல காட்டிக்குவான்.
என்ரா?
மாக்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே மம்மி கேட்டா என்னடா சொல்லறது
"நீ கொஞ்சம் மூடுறியா நானே கவலைல இருக்கன்."
"விடுறா இந்த முறை பெரிசா படிக்கல்லத்தானே "
"நாங்க சின்னனாயாச்சும் படிக்கலையே!!"
இந்த ஜாலி கொன்பெரன்ஸ் மீட்டிங்கை பின்னால நின்டு கோபமாக்கேட்டுட்டு இருந்த சியாமா டீச்சருக்குக்கே சிரிப்பு வந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் கண்டு கொள்ளவில்லை.
டீச்சருக்கு திருத்த வேற வகுப்பு பேப்பர் இருந்தாலும் முதல் எடுத்து திருத்திறது எங்கட வகுப்பு பேப்பரைத்ததான்.நல்லா எழுதினவன் பேப்பரையும் நல்லாவே எழுதாதவன் பேப்பரையும் ஈசியாத்திருத்திடலாம்.அதால எழுதி அடுத்த நாளே பேப்பர் கையிலையும் பேச்சு காதிலையும் விழும்.
அந்த நேரத்திலதான் தலையை குனிஞ்சு போன வருசம் செத்த பக்கத்து வூட்டு ஆயாவுக்கு ஆத்ம அஞ்சலி கொடுக்குறது
நிமிர்ந்து பார்த்தா பேர் சொல்லி பேச்சு விழும்.
அதுக்குள்ள ஒருத்தர் இரண்டுபேர் மடாக்காய் யோசிப்பினம்.
எஸ் ஆக வழியே இல்லையா?
ரீச்சர் தண்ணி குடிச்சுட்டு ....
மாக்ஸ் எடுத்த திறத்தில பச்சை தண்ணி குடிக்கிறதுக்கே நீங்கள் வெட்கப்படோனுமடா.
அவமானம்.
அவர் இருக்க எனக்கு சிரிப்பு.
நீ
தண்ணி குடிக்க முதல்
போய் முகத்தை கழுவுடா!
ஒரே கரியா கிடக்கு முகமெல்லாம்.
இரண்டு மணித்தியாலம் ஒரே தோசைய போட்டு பிரட்டி பிரட்டி எடுக்கிறது போல எங்களை ஆவ்வ்வ்....
இப்படி யாரச்சும் பேசினா ஒரு இரண்டு மணித்தியாலத்துக்கு பொத்திக்கொண்டு ரோசம் வந்துடும்.அப்டி வரேக்க,பேப்பரை கையில் வைத்த படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்
பேப்பரில் பெரும்பாலான இடங்களில் ஒரு பெரிய முட்டை கருக்கட்டி தனக்குள் சின்ன முட்டை போட்டிருந்தது.
இயற்கைக்கு மாறான செயல்.
எல்லோரின்
மனசுக்குள்ளும்
"அடுத்த தவணை படிப்பு
படிப்பு
படிப்பு தான்
என்ற சபதம் ஓடிக்கொண்டிருந்தது.
இருந்தாலும் எடுத்தது சபதம்தானே
சத்தியம் கிடையாதே.
அத மீறப்போறாதால ஒரு நசுட்டமும் வரப்போறதில்லை.மற்றது மீறுறதுக்கு காரணம் நாங்களில்லை என்டதால கடவுள் கண்ணைக்குத்தமாட்டார் என்டதும் உண்மை.
தவணை முடிந்து
ஒரு மாதம் லீவு விடும் போது ஒரு நெஸ்டால்ஜிக் பீலிங் வரும்
"கருவறை எங்களுக்கு வேறாக இருந்தாலும்
வகுப்பறை என்னவோ ஒன்றுதான்."
லீவு முடிஞ்சாச்சு,
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
சீரியஸ்ஸா படிக்க தொடங்கிலாம். போனதவணை சபதம் பண்ணிணாங்கள் ஆயிற்றே,இருந்தாலும் ஆடின கால் ஆடாம இருக்காது ஆடத்தான் செய்யும்.
அதால வெளி உலகத்துக்கு தெரியாம வகுப்புக்குள்ள மட்டும் சின்ன சின்னதா சம்பவங்கள செஞ்சாலும்
இரண்டு மூண்டு நாளால எங்களை பத்தி கதைக்க
ஸ்டாவ் மீட்டிங் போட்டார் பிரின்சிப்பல்.
..........
வகுப்பினுள் மட்டும் குழப்படி .
எப்படி செய்வது
தேவையான பொருட்கள்
டஸ்ரர்,சோக் துண்டுகள்
சாப்பாட்டு கடதாசி
இதர பிற எறி கருவிகள்
உரத்த குரல் வளம் Etc,
டேய் எறியாத!
பிளாக் போட்டை அழித்து
அப்படியே சுழட்டி வீச..
டஸ்ரர் பறந்தது
அதிலிருந்து தப்ப
மேசையின் கீழ் அதிரடியாக பாய்ந்தான்
கோபி (நொட் குண்டுக்கோபி இது மத்த கோபி.குண்டுக்கோபி பாயறதுக்கு வகுப்பில தடை வதிச்சிருக்கு. )
கதிரையை இழுத்து பின்னால்
விட்டு எல்லாரும் எழுந்து நின்றனர்
இருங்கோ.
ஜீன்ஸை கொஞ்சம் மேல இழுத்து விட்டு ,
மைக் முன்னால் நின்று
ஊஷ்.. ஷ்... ஷ்
வழமையான வளி மீதான விசை பிரயோகம்.
இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் உப அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு
இந்த தவணை நிறைய நிகழ்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கு
ரீச்சர்ஸ் டே
நவராத்திரி
.....................
......................
வழமையாய் அதிகம் கதைக்கும் அதிபர்
நேரடியாய் பிரதான கருவுக்கு வந்தார்.
பக்கத்தில் பெரிய சோக் துண்டு கிடந்தது அதை இரண்டாக முறித்து திப்புவுக்கு
எய்ம் பண்ணி
எறிய
அது பறந்து., பறந்து மேலலால போய்....
சொத்திக்கையா நான் இங்க நிக்கிறன் பக்கத்து வகுப்புக்குள்ள எறியிறாய்?
என்ன ஞானப்பழம் சேர் உங்கட வகுப்பு வலுத்த மோசமா கிடக்கு
பக்கத்து வகுப்புக்குள்ள சோக், டஸ்ரர்
மட்டுமில்லாம திண்ட சாப்பாட்டு பார்சல்லையும் எறியிறாங்களாம்.
கதிரைக்கு மேலால் ஏறி தொம் என்று தரையில் கால் வைத்து ஐங்கியை அவன் எட்டி பிடிக்க
வாங்கு அப்பதான் தப்பான கோணத்தில் லாண்ட் ஆகியது.நியூட்டன் இஸ் கிரேட்.
அது மட்டுமில்லை சேர் கீழ் வகுப்பில பாடம் எடுக்கேலாமா கிடக்கு
அவங்கள் மேல நிண்டு எந்தநேரமும் கடா ,புடா, கடா, புடா எண்டு உழுந்தரைக்கிறாங்கள்
ஏன்? சேர் நீங்கள் வகுப்பை வடிவா பார்கிறதில்லையா.
என்ன?
இல்லை, சே...ர்
நான் பார்க்கேக்க,
வடிவாத்தான் இருக்கிறாங்கள்.
உனக்கு,
தண்ணி போத்தலை தூக்கி எறிய
அதன் மூடி க....ழ......ண்.......டு
புவி ஈர்ப்பு ஆர்முடுகலுடன்
போத்தல் முதல் விழ
அது மட்டுமில்ல
மேல இருந்து தண்ணியை ஊத்துறாங்கள்
என்ன "தண்ணி "
"பச்சை தண்ணி" சேர்
என்ன.,...
..............................
..............................
அந்த இடத்தில் ஞானப்பழம் சேர் கண்ணில் தூசி விழுந்து கண் கலங்கியது அடுத்த நாள் எங்களுக்கு தெரிய வந்த போது
எவ்ளவோ பேச்சு வாங்கியிருக்கிறோம்
எல்லாரிடமும்
சிலரிடம் ஏதாவது ஒரு காரணத்துக்காக
சிலரிடம் எந்த வித காரணமும் இல்லாமல்.
எதுவும் பாதித்ததில்லை
ஆனால்,
அன்று ஞானப்பழம் சேர் எங்களுக்காக சிரித்துக்கொண்டே ,அழுத போது
அடி வயிற்றை எதுவோ பிசைந்தது.
அது மட்டுமே இல்லாமல் மீட்டிங்கில் ஒட்டு மொத்த உயர் மட்டமும் ஆலோசித்து பண்ணிய வேலை
வேற வழியில்லை ,உதுகளை வெட்டி விட்ரோணும்.
வர வர வளர்ந்து கொண்டே, போகுதுகள்.
அடுத்த நாள்,
காலை ,
அதிர்ச்சி.
வகுப்புக்கு முன்னால் நின்ற பச்சை மரத்தை கொன்றுவிட்டார்கள், இனி காத்தடிச்சா கண்ணில மண் விழாது மண்ணாங்கட்டியே விழும் என்கிற நிலை.முட்டுக்கால்ல வகுப்புக்குள்ள நின்டாலே அதிபருக்கு அங்க ஒபிஸூக்குள்ள எங்கள வடிவா தெரியும் என்ட நிலை.
ஆனா இவங்களை ஒரு மாதிரி அடக்கியாச்சு என்டு அவையள் அங்க இருந்து கொக்கலிக்கேக்க கொஞ்சம் மேலால எட்டிப்பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்,
நாங்கள் ஒருத்தரும் வகுப்புக்குள்ள இல்லை என்ட விசயம்.
அடுத்த நாள்
அடுத்த எபிசோட்டுக்கு தாவவும்......
என்னம்மா?
"உங்களை அதிபர் வரட்டாம்."
"இப்பவோ?"
"ஓ"
அவர் வெளிக்கிட அடுத்த பெல் இன்டேர்வல்
சோ லெட்ஸ் டேக் ஏ பிரேக்....
வீட்டில் சுத்தி வர மாமரம் நிக்கும்
அதில உள்ள மாங்காய குரங்கு பிடுங்கினாலும் ஏன் குரங்கே? என்டும் பார்க்கத அதே நான் மணியம் சேர் வீட்டு சேலன் மாங்காய்க்கு கிங்கொங்காய் அடிபட்டிருக்கிறேன்.
வீட்டில் கடலை அவித்து கொட்டுவார்கள்.தின்னுடா! புரதம் என்டு.நாய் கூட எனக்கு தாற முழுதையும் தின்ன மாட்டுது
ஆனால் கோயிலில் தரும் அந்த ஒரு பிடி கடலைக்காக அடிபட்டு தின்னும் போது மனம் யோசிக்கும் ஐயரை போல உதுகளுக்கு ஒரு நாளும் சமைக்க தெரியாது.
அதை போல வீட்டில் வெறுத்துப்போன புட்டும்,தோசையும்,இடியப்பத்துக்காகவும் இங்கே நானும் சக போரளிகளும் நடத்த போகும் மினி உலக யுத்தம்தான் இந்த இன்டேர்வல்.
3 மேசைய சுத்தி வர எல்லோரும் கதிரைய போட்டோம்
"எடுத்து வைங்கடா பார்சல்களை எல்லோரும்"
யெஸ்! அந்தக்குரல் சாப்பாட்டுக்கு பொறுப்பான சாட்சத் நம்ம ................
இல்ல நான் இதில பேர் எழுதக்கூடாது எழுதினா ஐங்கி அடிப்பான்.
உப்புடித்தான் முதல் ஒருக்கா ஐங்கி என்டு எழுதறதுக்கு பதிலா ஜங்கி என்டு மாறி எழுதினதில ஆளுக்கு பயங்கர கடுப்பு.
எல்லோரும் சாப்பாட்டு பார்சலை மேசையில் வைத்தோம்.
ஒருத்தரும் இப்ப தொடாத, கொஞ்சம் பொறு .
எல்லோரும் அவன் மூஞ்சிய பார்த்தோம் !!
என்ன இது "அன்னம் பாலிக்கும்...."
பாட போகிறானா ரூல்ஸ் ல அதல்லாம் இல்லையே அப்புறம் ஏன்?
ஆனா ஒருத்தரும் தொடல்ல.
இந்த பங்குச்சந்தைக்கு அவன்தான் லீடர்
அவன் வைச்சதுதான் சட்டம்.
1.இருக்கிற எல்லாரும் சாப்பிடணும்.
2.இயன்றவரை எல்லாரும் சாப்பாட்டு பார்சல் கொண்டரோனும்
★கட்டாயம் கொண்டறத மேசைல வைக்கணும்
3.சாப்பிட முதல் கை கழுவுறதும் கழுவாம விட்றதும் அவன் அவன் இஷ்டம்
4.பட் கழுவிட்டு வாறதுக்குள்ள சாப்பாடு முடிஞ்சா அதுக்கு சந்தை பொறுப்பேற்காது
இப்ப என்ன பிரச்சினை .
10 பேர் 9 பார்சல்.எல்லாரும் குனிய திலகர் கவட்டுக்குள்ள தன்ர புட்டுப்பார்சலை ஒளிச்சு வைச்சிருக்க அதைப்புடுங்கி மேசைல வைச்சுட்டு தலைவர் ஒரு பார்சலை ரன்டமா செலக்ட் பண்ணி ஓப்பன் பண்ண பாய்ஞ்சு .எல்லா கைக்குள்ளயும் என்
கைய விட்டன் .
தோசை.
இழுத்தன்.
பாதி இட்டலியாய் பினைஞ்சு வந்தது கையில்.
வாய்க்குள்ள அடைஞ்சு கொண்டு
" சம்ப...ல் கொண்ட...ரல்ல..யோடா"
திலகர் புட்டு போன விரக்தியில் வெறும் சம்பலை மட்டும் தின்டு கொண்டு இல்லை என்டு தலையாட்டிச்சு.
ஏனைய
9 பார்சல்களின்
கதையும் மேற்கூறிவாறு போக..
உயிர் வாழ்றதுக்காக சாப்பிட்றவங்கள் ஒரு வகை.
சாப்பிட்றதுக்காக உயிர் வாழ்றவங்கள் இன்னொரு வகை.
2 வது வகையை பிரதிநிதித்துவப்படுத்தினது எங்கட வகுப்பு.
20 நிமிட இடைவெளியில் 5 நிமிசம் சாப்பிட்டு பாக்கி பதினைஞ்சு நிமிசம் என்ன பண்ணுறது என்டா காதல்.
சாப்பிட்டு கை கழுவிட்டு
அப்படியே பப்படி ல இருந்து சிலர் கழண்டு போவாங்க.
இதுக்குள்ள தனி தனியாக போறன்களே இவங்களுக்கு ஆங்காங்கே அவங்க பச்சை கொடி காட்டிட்டு இருப்பாங்க எங்கயாவது நிண்டு.இது வலு டீப்பான லவ் ஆ இருக்கும்
இன்னொரு வகை இருக்கு அது .வன் சைட்.
இது கட்டாயம் கூட ஒருத்தனை துணைக்கு கூட்டிட்டு போகும்.
இப்ப போறது நான் என்டு வைங்களேன்.அட ச்சும்மா ஒரு உ+ம் தான்.
கண் தேடும் எங்க எங்க என்டு.கூட வாறது ஈசியா முதல்ல கண்டு பிடிச்சுக்காட்டும்.
காதினுள் கிசு கிசுக்கும்
என்னடா?
உன் ஆள் வாறடா!!!
சகலமும் விழிப்புற்றது உடலில்
இதய துடிப்பு எகிறியது
அதிரலீன் அதிகம் சுரந்தது
நெல்லி மர இலைகள் அதிகமாக உதிர்ந்தன.
இண்டைக்கு பார்பாளா?
நேற்று பார்த்தாளே திரும்பி!!
எங்கடா?
பைப்படில தண்ணி குடிச்சுட்டு போறாள் பார்.பார்த்துக்கொண்டு
நின்றேன்.
திரும்பவில்லை
நின்றேன்.
திரும்பவில்லை.
பார்த்தேன் ........ம்க்கும்.
போவம் என்று திரும்பும் போது பின்னால் திரும்பி
பக்கத்தில் கதைத்து கொண்டே பார்த்தாள்ள்ள்......
காதலும் சரி
கத்தரிக்காயும் சரி
டேஸ்ட்டா இருக்கிறது ஸ்கூல் ரைம்ல மட்டும்தான்...
எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாம காதல் வரக்கூடிய ஒரே ஒரு இடம் இங்கே மட்டும்தான்,
ஆனால் வெளியுலகம் அதை இன்பட்சுவேர்சன் என்டு அடிச்சுவிடும்.ப்ளடி இடியட்ஸ்.
பிரச்சினை எதுவுமே இல்லாம ஒரு சினிமா படம் எடுத்தா எப்டி இருக்கும் என்டொரு நினைப்பு நிறையநாளா ஓடிட்டு இருந்தது.
படம் புல்லா சந்தோசமான சீன் மட்டும்தான்வில்லன் இருக்க கூடாது.
ஹீரோ,ஹீரோயினை லவ் பண்ணணும், அவங்களை யாரும் பிரிக்க படாது. முக்கியமா அவங்களாவே பிரிஞ்சு அப்புறம் கடைசில சேர்ர மாதிரி பந்தா காட்டக்கூடாது அப்புறம் அதுக்கு இன்னுமொரு அன்ரி கிளைமாக்ஸ் வச்சு அவங்களை சாக்காட்ட கூடாது.ஆக ஒன்லி இரண்டு பேரும் ஹப்பியா இருக்கிறதை மட்டும்தான் காட்டணும்.
உதாரணத்துக்கு தலைவரோட ஓகே கண்மணி ரகப்படங்கள்.அது கூட மேலே சொன்ன எல்லா வரையறைகளையும் திருப்தி படுத்தியதா என்றால் கிடையாது.கொஞ்சம்..கொஞ்சம்தான்...
ஆனா பிரச்சினை இல்லாம மணிரத்னம் போல ஒரு சிலரால மட்டும்தான் இன்ரஸ்ட்டா படம் எடுக்க முடியும்.ஏன்னா பிரச்சினை இல்லாட்டி படமும் சரி பள்ளிக்கூட லைவ்வும் சரி பிளாப்பாயிடும்.
பந்தி பந்தியா நிறைய பிரச்சினை எழுதலாம்.இருந்தாலும் அதில்லை இந்த டயரியோட நோக்கம் அதுக்கு மேல இருக்கிற ஓகே கண்மணி டைப்.அதால வந்த பிராப்ளம்ஸ் எல்லாத்தையும் ப்பூ என்டு ஊதி தள்ளினதில முதலாவதா பறந்த தூசி எக்ஸாம்.
எக்சாம் எழுதி பேப்பர் தரேக்க
எவன் மூஞ்சிலயாச்சும் எக்ஸாம் ஊத்திக்கிட்ட மாதிரி கவலையே இருக்காது.இருக்கிறது போல காட்டிக்குவான்.
என்ரா?
மாக்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே மம்மி கேட்டா என்னடா சொல்லறது
"நீ கொஞ்சம் மூடுறியா நானே கவலைல இருக்கன்."
"விடுறா இந்த முறை பெரிசா படிக்கல்லத்தானே "
"நாங்க சின்னனாயாச்சும் படிக்கலையே!!"
இந்த ஜாலி கொன்பெரன்ஸ் மீட்டிங்கை பின்னால நின்டு கோபமாக்கேட்டுட்டு இருந்த சியாமா டீச்சருக்குக்கே சிரிப்பு வந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் கண்டு கொள்ளவில்லை.
டீச்சருக்கு திருத்த வேற வகுப்பு பேப்பர் இருந்தாலும் முதல் எடுத்து திருத்திறது எங்கட வகுப்பு பேப்பரைத்ததான்.நல்லா எழுதினவன் பேப்பரையும் நல்லாவே எழுதாதவன் பேப்பரையும் ஈசியாத்திருத்திடலாம்.அதால எழுதி அடுத்த நாளே பேப்பர் கையிலையும் பேச்சு காதிலையும் விழும்.
அந்த நேரத்திலதான் தலையை குனிஞ்சு போன வருசம் செத்த பக்கத்து வூட்டு ஆயாவுக்கு ஆத்ம அஞ்சலி கொடுக்குறது
நிமிர்ந்து பார்த்தா பேர் சொல்லி பேச்சு விழும்.
அதுக்குள்ள ஒருத்தர் இரண்டுபேர் மடாக்காய் யோசிப்பினம்.
எஸ் ஆக வழியே இல்லையா?
ரீச்சர் தண்ணி குடிச்சுட்டு ....
மாக்ஸ் எடுத்த திறத்தில பச்சை தண்ணி குடிக்கிறதுக்கே நீங்கள் வெட்கப்படோனுமடா.
அவமானம்.
அவர் இருக்க எனக்கு சிரிப்பு.
நீ
தண்ணி குடிக்க முதல்
போய் முகத்தை கழுவுடா!
ஒரே கரியா கிடக்கு முகமெல்லாம்.
இரண்டு மணித்தியாலம் ஒரே தோசைய போட்டு பிரட்டி பிரட்டி எடுக்கிறது போல எங்களை ஆவ்வ்வ்....
இப்படி யாரச்சும் பேசினா ஒரு இரண்டு மணித்தியாலத்துக்கு பொத்திக்கொண்டு ரோசம் வந்துடும்.அப்டி வரேக்க,பேப்பரை கையில் வைத்த படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்
பேப்பரில் பெரும்பாலான இடங்களில் ஒரு பெரிய முட்டை கருக்கட்டி தனக்குள் சின்ன முட்டை போட்டிருந்தது.
இயற்கைக்கு மாறான செயல்.
எல்லோரின்
மனசுக்குள்ளும்
"அடுத்த தவணை படிப்பு
படிப்பு
படிப்பு தான்
என்ற சபதம் ஓடிக்கொண்டிருந்தது.
இருந்தாலும் எடுத்தது சபதம்தானே
சத்தியம் கிடையாதே.
அத மீறப்போறாதால ஒரு நசுட்டமும் வரப்போறதில்லை.மற்றது மீறுறதுக்கு காரணம் நாங்களில்லை என்டதால கடவுள் கண்ணைக்குத்தமாட்டார் என்டதும் உண்மை.
தவணை முடிந்து
ஒரு மாதம் லீவு விடும் போது ஒரு நெஸ்டால்ஜிக் பீலிங் வரும்
"கருவறை எங்களுக்கு வேறாக இருந்தாலும்
வகுப்பறை என்னவோ ஒன்றுதான்."
லீவு முடிஞ்சாச்சு,
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
சீரியஸ்ஸா படிக்க தொடங்கிலாம். போனதவணை சபதம் பண்ணிணாங்கள் ஆயிற்றே,இருந்தாலும் ஆடின கால் ஆடாம இருக்காது ஆடத்தான் செய்யும்.
அதால வெளி உலகத்துக்கு தெரியாம வகுப்புக்குள்ள மட்டும் சின்ன சின்னதா சம்பவங்கள செஞ்சாலும்
இரண்டு மூண்டு நாளால எங்களை பத்தி கதைக்க
ஸ்டாவ் மீட்டிங் போட்டார் பிரின்சிப்பல்.
..........
வகுப்பினுள் மட்டும் குழப்படி .
எப்படி செய்வது
தேவையான பொருட்கள்
டஸ்ரர்,சோக் துண்டுகள்
சாப்பாட்டு கடதாசி
இதர பிற எறி கருவிகள்
உரத்த குரல் வளம் Etc,
டேய் எறியாத!
பிளாக் போட்டை அழித்து
அப்படியே சுழட்டி வீச..
டஸ்ரர் பறந்தது
அதிலிருந்து தப்ப
மேசையின் கீழ் அதிரடியாக பாய்ந்தான்
கோபி (நொட் குண்டுக்கோபி இது மத்த கோபி.குண்டுக்கோபி பாயறதுக்கு வகுப்பில தடை வதிச்சிருக்கு. )
கதிரையை இழுத்து பின்னால்
விட்டு எல்லாரும் எழுந்து நின்றனர்
இருங்கோ.
ஜீன்ஸை கொஞ்சம் மேல இழுத்து விட்டு ,
மைக் முன்னால் நின்று
ஊஷ்.. ஷ்... ஷ்
வழமையான வளி மீதான விசை பிரயோகம்.
இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் உப அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு
இந்த தவணை நிறைய நிகழ்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கு
ரீச்சர்ஸ் டே
நவராத்திரி
.....................
......................
வழமையாய் அதிகம் கதைக்கும் அதிபர்
நேரடியாய் பிரதான கருவுக்கு வந்தார்.
பக்கத்தில் பெரிய சோக் துண்டு கிடந்தது அதை இரண்டாக முறித்து திப்புவுக்கு
எய்ம் பண்ணி
எறிய
அது பறந்து., பறந்து மேலலால போய்....
சொத்திக்கையா நான் இங்க நிக்கிறன் பக்கத்து வகுப்புக்குள்ள எறியிறாய்?
என்ன ஞானப்பழம் சேர் உங்கட வகுப்பு வலுத்த மோசமா கிடக்கு
பக்கத்து வகுப்புக்குள்ள சோக், டஸ்ரர்
மட்டுமில்லாம திண்ட சாப்பாட்டு பார்சல்லையும் எறியிறாங்களாம்.
கதிரைக்கு மேலால் ஏறி தொம் என்று தரையில் கால் வைத்து ஐங்கியை அவன் எட்டி பிடிக்க
வாங்கு அப்பதான் தப்பான கோணத்தில் லாண்ட் ஆகியது.நியூட்டன் இஸ் கிரேட்.
அது மட்டுமில்லை சேர் கீழ் வகுப்பில பாடம் எடுக்கேலாமா கிடக்கு
அவங்கள் மேல நிண்டு எந்தநேரமும் கடா ,புடா, கடா, புடா எண்டு உழுந்தரைக்கிறாங்கள்
ஏன்? சேர் நீங்கள் வகுப்பை வடிவா பார்கிறதில்லையா.
என்ன?
இல்லை, சே...ர்
நான் பார்க்கேக்க,
வடிவாத்தான் இருக்கிறாங்கள்.
உனக்கு,
தண்ணி போத்தலை தூக்கி எறிய
அதன் மூடி க....ழ......ண்.......டு
புவி ஈர்ப்பு ஆர்முடுகலுடன்
போத்தல் முதல் விழ
அது மட்டுமில்ல
மேல இருந்து தண்ணியை ஊத்துறாங்கள்
என்ன "தண்ணி "
"பச்சை தண்ணி" சேர்
என்ன.,...
..............................
..............................
அந்த இடத்தில் ஞானப்பழம் சேர் கண்ணில் தூசி விழுந்து கண் கலங்கியது அடுத்த நாள் எங்களுக்கு தெரிய வந்த போது
எவ்ளவோ பேச்சு வாங்கியிருக்கிறோம்
எல்லாரிடமும்
சிலரிடம் ஏதாவது ஒரு காரணத்துக்காக
சிலரிடம் எந்த வித காரணமும் இல்லாமல்.
எதுவும் பாதித்ததில்லை
ஆனால்,
அன்று ஞானப்பழம் சேர் எங்களுக்காக சிரித்துக்கொண்டே ,அழுத போது
அடி வயிற்றை எதுவோ பிசைந்தது.
அது மட்டுமே இல்லாமல் மீட்டிங்கில் ஒட்டு மொத்த உயர் மட்டமும் ஆலோசித்து பண்ணிய வேலை
வேற வழியில்லை ,உதுகளை வெட்டி விட்ரோணும்.
வர வர வளர்ந்து கொண்டே, போகுதுகள்.
அடுத்த நாள்,
காலை ,
அதிர்ச்சி.
வகுப்புக்கு முன்னால் நின்ற பச்சை மரத்தை கொன்றுவிட்டார்கள், இனி காத்தடிச்சா கண்ணில மண் விழாது மண்ணாங்கட்டியே விழும் என்கிற நிலை.முட்டுக்கால்ல வகுப்புக்குள்ள நின்டாலே அதிபருக்கு அங்க ஒபிஸூக்குள்ள எங்கள வடிவா தெரியும் என்ட நிலை.
ஆனா இவங்களை ஒரு மாதிரி அடக்கியாச்சு என்டு அவையள் அங்க இருந்து கொக்கலிக்கேக்க கொஞ்சம் மேலால எட்டிப்பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்,
நாங்கள் ஒருத்தரும் வகுப்புக்குள்ள இல்லை என்ட விசயம்.
அடுத்த நாள்
அடுத்த எபிசோட்டுக்கு தாவவும்......
No comments:
Post a Comment