About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, January 24, 2016

கறுப்பு பலகை கதைகள்

ஐஞ்சு இருக்கும் இல்லை நாலரை இருக்கும்.அந்த வயதிலேயே இழுத்துக்கொண்டு போய் அமத்திவிட்டார்கள்.முன்னால் மேசை,அதற்கு முன்னால் டீச்சர்,டீச்சருக்கு பின்னால் கரும்பலகை,வலக்கைப்பக்கமாயும் சுவரில் கருப்புபலகை,இடக்கைப்பக்கமாயும் கருப்புத்தான்.பத்தாததுக்கு மூலையில் குட்டியாய் ஒரு பலகை.வாசலுக்குள்ளால் வந்த வெளிச்சத்தை தவிர எல்லாமே இருட்டாயும் கருப்பாயும் இருந்தது எனக்கு.
"பயமா இருக்கா?"
அனுச்சித்ரா அறிமுகம்.கேள்விகுறி போட்டு ஒரு வியப்புக்குறி அறிமுகமமான மகத்தான கணப்பொழுது அதுதான்.
"ஆரம்பத்தில எனக்கும் அப்டித்தான் இருந்திது!'ப' வரிசை எழுதேக்க எல்லாம் 'ப்பூ' என்டு பறந்திட்டு.எல்லாம் டீச்சரே எழுதி விடுவாங்க,அத பாத்து கொப்பில எழுதினா போதும்.கரும் பலகையை மட்டும் வடிவா கவனி"
"அ,ஆ எழுத தெரியும்தானே"
"ம்,ம்"
"க்ளுக்"

பதினாலு வருச படிப்பு வாழ்க்கைல ஒருதன் அதிக நேரம் பார்த்த அசையாத பொருள் எது என்றால் கரும்பலகைதான்.கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பெயின்ட் அடித்திருந்தாலும் அதற்கு பேர் கரும்பலகைதான்,பிளாக் போட்தான்.பச்சைப்பலகை இல்லை.

பலகை என்டு சொன்னாலும் நேர்சரியில் பார்த்த அந்த குட்டி போட்டை தவிர ஸ்கூலில் நான் பார்த்த அத்தனையும் கரும் சுவர்தான்.எங்கே சும்மா சுவர் இருந்தாலும் கருப்பு பெயின்டை எடுத்து அடித்து விட்டிருப்பார்கள் எழுத,படிக்க பயன்படுமே என்று.கிணத்துக்கு பக்கத்தில் துலாவைத்தூக்கி வைக்க குட்டியாய் ஒரு சுவர் எழுப்பியிருந்தது,அதில் கூட பச்சைக்கலரை இழுத்து நற்சிந்தனை என்று எழுதியிருந்தது.அந்த பகுதி வகுப்பை விட்டு வேறு வகுப்புக்கு போகும் வரைக்கும் அதிலே நான் பார்த்த நற்சிந்தனை,நாலைந்து பேருடைய...டூப்ளிக்கட் நேம்ஸ்,இடது மூலையில் காக்கா,நடுவில் மாமா,அடியில் குண்டுக்குண்டு எழுத்தில் நிர்வாகம்- குண்டுமணி.மொத்ததில் அந்த கரும்பலகை கற்றுதந்த நற்சிந்தனை குண்டுமணியை மட்டுமில்லை அவன் பேரைக்கூட யாரும் தொடமுடியாது.

இந்த கருப்பு பலகைக்கும் எனக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமே இருந்தது.மூன்றாம் ஆண்டில் நெடும்பிரித்தல் கணக்கை போட்டில் போட்டுவிட்டு செய்யச்சொல்லி ஐஞ்சு பேரை பிடித்துவிட்டபோது வரிசையில் மூன்றாவதாய் நெத்தியை பிளாக் போட்டில் போட்டு தேய்த்துக்கொண்டு சோக்கை உருத்தியபடி யோசித்த போது பிரபஞ்சக்கருந்துளையெல்லாம் எனக்கு அந்தபோட்டில் தெரிந்தது.



ஒவ்வோரு போட்டும் ஒரு ரகமாய் இருக்கும்.சிலது பெயிண்ட் எல்லாம் அள்ளுப்பட்டு கறுப்பில பிங் பவுடர் அடித்ததுப்போல சைனிங் பண்ணும்.அதில சோக்கை வச்சு எழுதேக்க  "கிறீச்" என்டு வாற அந்த சவுண்டுக்கு மயிரெல்லாம் குத்திட்டு உடம்பு கூசும்.பெட்டையள் எல்லாம் ஒருக்கா ஷ்ஷ்.. என்டுங்கள். வகுப்பு வாத்தியார் அதுக்கு ஒரு கதையை டபுள் மீனிங்கில அடிச்சு விடுவர்,விளங்கினவன் விழுந்து சிரிக்க விளங்காதவன் கணக்கை செய்வான்.சில போட்டுகளில எந்த டஸ்ரருக்குமே அழியாத சில வெள்ளைப்புள்ளிகள் கிடக்கும்.அது சில வேளைகளில டீச்சர் எழுதுற வசனங்களில குற்று போட்டு வேற லெவல்ல பொருள் தரும்.அத பாத்துட்டு எங்களுக்கென்றிருந்த மலர் டீச்சர் சிரித்து அதை அழிக்க டிரை பண்ணிணாலும் அது அழியாது,டீச்சரின் அந்த சிரிப்பும் மாறாது.
அப்டியான புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க நாங்கள் பாவித்த ஒரே ஒரு கிளீனர் செம்பருத்திப்பூ.ஒரு பை நிறைய பூ கொண்டு வந்து போட்டில உரஞ்சி அழிச்சு விட்டா அது சும்மா ஜகஜோதியா பிரகாசிக்கும்கொஞ்ச நாளுக்கு .இத தவிர போட் மெயின்ரெயினிங்கில மொனிட்டர் கிழமைக்கு ஒருக்கா என்டாலும் அத தண்ணி போட்டு அழிச்சுவிடுவான்.அதே நேரம் ஒரு வகுப்பில ஒரு டஸ்ரர் ஒருகிழமைக்கு மேல இருக்காது.நாய் புடுங்கின மாதிரி உள்ள அடைஞ்ச துணியெல்லாம் வெளில சிதறும் மட்டும் அதால எறிபடுவாங்கள்,பட்டிருக்கன்.

வகுப்பில இருக்கிற நாலு சுவர்ல குறைஞ்சது மூன்டு கறுப்பாவோ இல்லை பச்சையாவோ இருக்கும்.அதில ஒன்னில பாட டைம்டேபிள் எழுதியிருக்கும்,மற்றதில கலண்டர்,கணிப்பீடு,எக்செட்ரா. மெயின் பிளாக் போட்டில நடுவில 'உ',அதுக்கு கீழ திருக்குறள் இல்லை பொன்மொழி, ஒரு பக்க மேல் மூலைல தரம், திகதி,மாணவர் தொகை,வரவு எல்லாம் இருக்கும்.இத தாண்டி மற்ற மூலையைப்பாத்தா அதில நாலைஞ்சு இடம் எண்ணெய் பூசின மாதிரி சைன் பண்ணும்,அது உண்மைல மொனிட்டரின்ர தலைல கிடக்கிற எண்ணெய்.கதைத்தவர்கள் பேர் என்டு எழுதிட்டு அதுக்கு பக்கத்தில சிங்கன் தலையை சாய்ச்சுக்கொண்டு ஸ்டைலா நிப்பர்,அந்த நேரத்திலதான் அவற்ற கொழுப்பும்,தலை எண்ணெய்யும் போட்டில படியும்.அது பிறகு எந்த பூ வுக்கும் போகாது.அத போல பின்னால எழுதின டைம்டேபிளில எட்டாம் பாடம் எல்லாத்தையும் எங்கட தலை தின்டிருக்கும்.

இப்டி இருக்கிற இந்தக்கரும்பலகை வாழ்க்கைல படிப்பிச்ச வாத்திமார்,டீச்சர்மாருக்குள்ள ஒவ்வோருத்தருமே தங்களுக்கெண்டு ஒரு ஸ்டைல் வைத்திருந்தார்கள்.
கிஸ்டரி வாத்தியார் வகுப்புக்கு நடுவில நிப்பார்
"பராக்கிரம பாகு கோட்டையை ஆட்சி செய்த காலத்திலே மேற்கொண்ட சமய சேவைகள் ஆறு "
என்டுட்டு ஒவ்வொன்டையும் சொல்லிட்டு போய்  போட்டில  சரி போட்டிருப்பார்.எண்ணிப்பார்த்தால் எட்டு சரி இருக்கும் மொத்தமாய். கடைசிக்காலம் வரைக்கும் அவர் போட்டில் எழுதியது சரி,பிழை,ஸ்டார் இந்த மூன்றும்தான்.
அந்தாளாச்சும் பரவால்ல சமய வாத்தியார்,பாடத்தை வாசிப்பார்."சம்பந்தரின் தல யாத்திரை" போட்டில் சோக்கால் ஒரு குத்து,அவரின் "அற்புதங்கள்"... நாலு குத்து.போட்டை அதிகமாயும் அழகாயும் பயன்படுத்தியது கணித வாத்தியார்.அவருக்கு போட்டிலே இரண்டு கையாலும் எழுதுகின்ற ஒரு டலண்ட் இருந்தது.வலக்கையால் எழுதும் போது சேர் மறைக்குது 'இடக்கை' என்றால் டக்கென்று மாத்தி எழுதுவார்.இதெல்லாத்துக்கும் மேலால எங்கட மலர் டீச்சர்.நான் எதுவுமே சொல்ல தேவையில்லை...

அதே நேரம் பொடியள் நாங்கள் இந்தக் கரும்பலகையை சில கறுப்பு விசயங்களுக்கு பயன்படுத்தினம்.
வகுப்புக்குள் கிரிக்கெட் அடிக்கும் போது ஸ்கோர் போடவும்,எங்களுக்குள் இருந்த பிக்காசோ டாவின்சியை வெளியில் கொண்டுவரவும்,வைரமுத்துவுக்கு சவாலாய் கவிதை எழுதவும் தேவையான பேரை எழுதி ப்ளேம்ஸ் போட்டு பார்க்கவும் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.எல்லாம் எழுத முடியாது.

இதெல்லாத்துக்கும் மேலால டியூசன் சென்டர்களில இருக்கிற பிளாக் போட்டுக்கள் தனி ரகம்.
பயோ வகுப்பு ப்ளாக் போட்டின் கீழ் மூலையில் இரண்டு கையும் போககூடியளவு பெரிய ஓட்டை இருந்தது.அதற்குள்ளால் பார்த்தால் எதிர் வகுப்பில் இருக்கும் ஆகாயாவின் தலையும் இரட்டைப்பின்னலும் தெரியும்.அடிக்கடி ஒரு பக்க பின்னலை தூக்கி முன்னால் விட்டு கொள்வது தெரியும்.பின்னலில் செருவி இருக்கின்ற நித்திய கல்யாணி தெரியும்.அருகில் இருப்பவளோடு கதைக்க திரும்பும் போது ஒரு பாதிநிலா தெரியும்.இதெல்லாத்துக்கும் மேலால படிப்பது தெரிய கொஞ்சம் இல்லை நிறையவே கஸ்டமாய் தெரிந்தது.

இங்கே எங்கட தேவைகளை சொல்லுற கருவியாய் பயன்பட்டதும் இந்த கரும்பலகைகள்தான்.சேர்
"வகுப்பை இன்று வேளைக்கு விடவும்,ஐஞ்சு மணிக்குமேல் இருக்க முடியவில்லை நுளம்பு இரத்தமே இல்லாத எங்கள் உடம்பில் தோலை கடிச்சு உறிஞ்சுகிறது."
"சாப்பிடுவதற்கு ஒரு குட்டி பலாப்பழம் தரவும்+குட்டிப்பலாப்பழத்தின் படம்."
என்று ஏகப்பட்ட விசயங்களை மொட்டையாய் எழுதி வைக்க பயன்பட்டது இந்த போட்டுகள்தான்.

ஏஎல்லுக்கு படித்த இடத்தில்
மணியம் சேர்,குகன் சேர்,செந்தில் சேர்.மூன்று பேரும் பிளாக்போட்டை பயன்படுத்தும் விதம் ஒரு தனிப்பாணியாக இருந்தது.

மணியம் சேர்: - போட்டை தேவைக்கு ஏற்ப இரண்டாய்,மூன்றாய்,நாலாய் கோடுபோட்டு பிரித்து எழுதுவார்.எப்ப வகுப்புகுள் வந்து இருந்தாலும் கதை விளங்கும்.எழுதிவிட்டு ஒரு கையை போட்டுக்கு மேல போட்டுக்கொண்டு தூண்ல சாஞ்சு நிப்பார்.இத்தனை வருசத்தில் கிட்டத்தட்ட ஒரு டன் கணக்கில் சோக்கால் போட்டில் எழுதியிருப்பார் எப்படியும்.

அதேநேரம் அங்கால
குகன் சேர்:- போடுங்கடா தலையங்கம் "சடத்தின் இயல்புகள்" என்டுட்டு ஒரு பெரிய 'ச' இடைல நெளிநெளியா இழுத்து ஒரு பெரிய 'இ' நெளி... நெளி.லேட்டா வர்றவன் அத பாத்து கொப்பில எழுதேக்கே ஒரு "சவத்தின் இயல்புகள்" என்டுதான் எழுதுவான்.அவர் கணக்கு செய்றதில இருந்து படம் கீர்ற வரைக்கும் அத்தனையும் ஸ்டைல்தான்.

எதிர்த்தாப்புறத்தில
செந்தில்சேர்:- வந்து எழுததொடங்குறதுக்கு முதல் போட்டை ஒரு கையால் தடவுவார்.பிறகுதான் எழுததொடங்குவார்.போட் இடைக்கிட கட்டவிழ்ந்து ஆடும்.அத முதலே பார்த்து இழுத்துக்கட்டி விடணும்.இல்லாட்டி முன் வாங்கில இருக்கிற ஆளுக்கு பல்லு ஆடுறது போல இருக்கும்.போட்டுக்கு பின்னாலயும் அப்பப்ப ஏதாவது எழுதி வைப்பார்.போகும் போது பார்த்தால் வெறும் நம்பர்தான் கிடக்கும்.சிலர் அது எத்தனை பேர் வரவு என்டு எழுதி கிடக்கு என்டும்,சிலர் அடுத்த எக்சாம் டேட் என்டும்,சிலர் அதொன்டுமில்ல அவர் சும்மா கணக்கு செய்து பாத்திருக்கார் என்டும் கதைச்சுக்கொண்டாலும் கடைசி வரைக்கும் அந்த நம்பர் எல்லாம் ஏலியன்ஸ் அனுப்பின சீக்ரெட் கோட் ஆவே இருந்திச்சு.டீக்கோட் பண்ணவே முடியவில்லை.

டஸ்ட் பறக்குது,சுவாசப்பிரச்சினைன்னு ப்ளாக்போட்டை வைட் போட்டாவும் சோக்கை மார்க்கராவும்
அப்டேட் பண்ணியது உலகம் இருக்கட்டும்...

இப்படி "கரும் பலகையை வடிவாய் கவனி" என்று ஆரம்பத்தில் அனு சொன்னதை அவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்துவிட்டு கடைசிநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளிக்கிடும் போது வகுப்பு பிளாக் போட்டில்
"GOOD BYE FRIENDS " என்று எழுதியிருந்தது.அருகில் நின்றவனிடம்
"யாருடா இதை எழுதினது என்றேன்?"
"நான்தான் என்றது போல இருந்தது"
"அட! உனக்கு உயிர் இருக்கா என்ன?"

                      #######











#அற்பபிறவி#

Tuesday, January 5, 2016

அண்ணரும் அப்பளமும்

அண்ணரின் அலப்பறைகள் 03:சோக்காட்டுதல் பார்ட்

இந்தப்பதிவில் வரும் விலங்குகள் சில...
நாய்,எருமை,பூனை,நான்,அண்ணர்

சோக்....கா....ட்......டு............த..............ல்

டைட்டிலை  இப்படி இழுத்துப் போட்டதற்கான காரணமே இது டைமிங்கில் தங்குகின்ற ஒரு விடயம்.

நிறைய நாள் அண்ணரின் அலப்பறைகள் தொடரை தொட்டு...நேற்று அவரே கேட்டாரு என் அலப்பறைக்கு என்னாச்சு ஒரேஞ் கலரு ரிவென்ஞ் எங்கடா ன்னு அது வரும் அது வரும்...
அதுக்கிடைல நிறைய வரும் பாரு நீ என்டன் .
கட் பண்ணிட்டான் கட்டை கொடுத்து அடி வாங்கிட்டமோன்னு...

அண்ணரும் நானும் சொத்துக்கு பிரச்சினை பண்ணிணதிலும் பார்க்க கொத்துக்கு நிறைய பிரச்சினை பண்ணியிருக்கம்.
அண்ணருக்கும் எனக்கும் ஏதோ காணிப்பிரச்சினை வந்திருக்கும் என்டு ரீங்க நினைச்சா அது உங்க தப்பு.உண்மைல வீணிப்பிரச்சினைதான் நிறைய வந்திருக்கு.

எள்ளென்டா எட்டாப்பிரிச்சு கொடுப்பான் என்டு ஒரு ப. மொ இருக்கு.ஆனா நான் எள்ளென்ன எள்ளுத் தோலைக் கூட அண்ணருக்கு அப்படி கொடுக்க மாட்டன்.இவ்வளத்துக்கும் அவர் பெரிய திறமோ என்டு கேட்டா அதான் இல்லை.
வீட்டுக்குள்ள
நான் வைக்கோல் பட்டறை நாய் என்டா
அவர் வைக்கோல் பட்டறை எருமை மாடு
நாயோ எருமையோ பெரிசு ....???

அண்ணரோட சாப்பாட்டுக்கு மட்டுமில்லை,சாப்பாட்டுக்கிண்ணிக்கூட அடிபட்டிருக்கன்.அது உண்மைல ஐஞ்சு வயசில தொடங்கின ஒரு பிரச்சினை.

ம்,நான் ஒரு மூணு வயசு மட்டும் பேபி புரடக்ஸ்ஸோட சூப்பி போத்தல் பாவனையாளர்.அதென்னவோ தெரியாது பேணில தண்ணி குடிச்சா வாய்க்குள்ள போறதிலும் பாரக்க கடவாய்யால வெளில நிறைய போய்டும் நாலு வயசில நைஸாய் பேணில குடிக்க பழகி அஞ்சு வயசில அண்ணாந்து குடிக்க பழகிட்டன்.
ஆனா அண்ணர் அதிலயும் பார்ஸ்ட் இரண்டு வயசிலயே பேணில குடிச்சவராம் என்டு எப்பவும் பீத்திக்கொள்ளுவர்.நான் கண்டு கொள்ளுரேல்ல.ஒரு நாள் அம்மா இதன்டா உவன் முதல் முதல் தண்ணி குடிச்ச பேணி என்டு தூக்கி காட்டினா...பெருமையா.
அப்பதான் வடிவா கவனிச்சன்.
யாழ்பாணத்தாரின்ர அரியதொரு கண்டுபிடிப்பது
ஒரு மூக்குப்பேணி.

பத்தி கொண்டு வந்திச்சு பம்மாத்திப்போட்டானே என்டு.மூக்குபேணியை கொண்டே அவற்ற மூக்கு மேலயே விட்டெறியோனும் போல கிடந்தது.ஆனா நான் அப்படி செய்யேல்ல.. கடுப்பில கொஞ்சம் வித்தியாசமா டிரை பண்ணிணன் அவர் சோத்துக்கோப்பையோட வந்து சோத்து மயக்கத்தில கதிரைல இருக்க பின்னால ஒரு கொஞ்சம் உன்னான ஒரு கொஞ்சம்தான் இழுத்தனான்.அது நாசம் அண்ணர் தொபுக்கடீர் என்டு நிலத்தில விழுந்தார்.கோப்பைல கிடந்த சோறொல்லாம் தெறிச்சு மேல போய் கீழ வந்து சோறு மழை பெய்தது.

அந்த டைம்ல பாடி வேற தொலைச்சு விட்டன் ஒரு ஆவேசத்தில
தொப்பொன்டு விழுந்தார் தொப்பி கழன்டார் என்டு..
என்ன செய்யறது என்டு தெரியேல்ல அண்ணருக்கு,அப்படியே கொஞ்ச நேரம் சோத்துக்கோலத்துக்கு நடுவில இருந்தார்.நான் இடுப்பெலும்பு உடைஞ்சுதும் தெரியா என்டு ஒருக்கா பயந்திட்டன்.
திடீர் பாய்சலாய் எழும்பி வெறி ப்பிடிச்சாப்போல திலத்த தொடங்கிட்டார்.இனி வழமையான சீன்தான் அவர் என்னை டாம் போல திலத்திறதிலயும் நான் அவரை முந்திகொண்டு ஜெர்ரி மாதிரி ஓடறதும்.

இருந்தாலும் அதுக்குப்பிறகு நடந்த அந்த சம்பவம்தான் இத்தனைக்கும் இந்தக்கதைக்கும் காரணம்.
வரலாற்றையே புரட்டிப்போட்ட சம்பவம் அது.
திலத்திட்டு வந்த அண்ணர் பாதில நின்டு திரும்பி ஓடினார்.
வலிச்சு வலிச்சு ஓடின எனக்கே ஒருமாதரியாயிட்டு.என்ன கருமம் என்டு திரும்பி பதுங்கி பதுங்கி நடந்தன்.அண்ணர் அந்ந டைம்ல கொரில்லா தாக்குதல்ல புகழ் பெற்ற ஒரு ஆள்.எக்ஸோரா இல்லாட்டி குறோட்டனுகளுக்குள்ள உப்புடி பதுங்கி நின்டு என்னை பல முறை தாக்கியருக்கார்.கவனமாத்தான் நடந்தன்,இருந்தாலும் அப்படி ஏதுமே நடக்கல்ல.
வீட்டுக்குள்ள போய் பார்த்தா அண்ணர் சோறு சாப்பிட்றார்.அதுவும் கத்தரிக்காய் பொரியலோட.நான் உடன நிலத்தை பாத்தன்.கீழ கொட்டுப்பட்ட சோறு அப்படியே கிடக்குது
அப்ப,அப்ப உது என்ர சோறு....

அன்டைக்கு அண்ணர் எனக்கு முதல் முதலா சோக்காட்டினார்.
சோத்தை வாரி ச்சீ சேத்தை வாரி அடிச்சப்போல கிடந்துது மூஞ்சில.

அன்டைல இருந்து
மானத்துக்கும் அவமானத்துக்கும் இடையிலான ஒரு மரண போராட்டமா இந்த
சோக்காட்டுதல் வந்தது வீட்டில.

வீட்டை இருந்து வந்த எழுதப்படாத சட்டத்தை பற்றி போன பதிவில எழுதினதா ஞாபகம்.காயோ,பழமோ ஆர் முதல்ல கைப்பற்றினமோ அவையளுக்குத்தான் தோல் கூட.சரி பாதி சமத்துவத்துக்கு சான்சே இல்லை.

இது ஊருக்கே தெரியும்,வீட்டை ஏதாவது சாப்பாட்டு சாமன் அனுப்புறதென்டா அவையளே பாக பிரிவினை செய்து இரண்டு டிஸ்ஸில போட்டுத்தான் வீட்ட வரும்.ஒரு ஆள் மட்டும் நின்டா எந்த வஞ்சகமுமே இல்லாம இரண்டு டிஷ்ஷையும் ஒன்னாக்கிட்டு சாப்பிட்டறது.இரண்டு பேரும் நின்டா
அங்கதான் ஆட்டம் ஆரம்பம்.
வலு மெதுவா,வலு வலு மெதுவா சாப்பிடணும்.ஆசைல அவாக் அவாக் என்டு சாப்பிட்டு முடிச்சா... அவர்ர வாயை நானோ இல்லை என்ர வாயை அவரோ பாத்துக்கொண்டிருக்கோனும்.
அந்த நேரம் பாத்து பொச்சடிச்சு நாக்கில எச்சில் ஊற வைக்கறமாதிரி சாப்பிடுவன்/வர் பாருங்கோ அதான் சோக்காட்டுதல்.
இதில வெல்லுறதுக்கு ஆளாளுக்கு இரண்டு மூன்டு டெக்னிக்கை பொலோ பண்ணிணம்.
கொண்டு வாறதிலை கொஞ்சத்தை தூக்கி முதலே ஒளிச்சு வைக்கிறது.
சாப்பிட்றாப் போல பவ்லா காட்டிட்டு சாப்பிடமா இருக்கிறது.
இதெல்லாத்துக்கும் மேலால கடைசி வாயை தின்னுட்டு விழுங்காம வாய்க்குள்ளயே வைச்சிருக்கற வரைக்கும் அட்டூழியம் பண்ணியிருக்கன்/கார்.

இப்படி இருந்த காலத்தில அண்ணருக்கு சாதகமா காத்து வீசின ஒரு காலம் அவர் ஏஎல் எழுதிட்டு இருந்த காலம்.நான் பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்து சோத்தைப்போட்டு கறியைப் பாத்தா சட்டி கழுவனுமா என்டு சந்தேகம் வாறது  போல கிளீனா இருக்கும், பொரியல் இருந்ததுக்கு அடையாளமாய் சின்ன துண்டு அப்பளம் இருக்கும்.நான் நல்லாவே நொந்து போன காலம் அது.

இரண்டு நாள் பொறுத்துப்பார்த்தன்
மூண்டு நாள்
அண்ணர் திருந்தேல்ல.
ஆனா கதிரையை வலு அலேட்டா இழுத்து விட்டு தின்டு கொண்டிருந்தார் தினமும்.

பொறுத்து,பொறுத்து
பார்த்து ஐஞ்சாம் நாள் காலைலயே பொரிச்சு வைச்ச அப்பளம் அவ்வளத்தையும் பேப்பர்ல சுருட்டி அலமாரிக்குள் இரண்டாவது தட்டில மூணாவது வாளிக்கு பின்னால ஒளிச்சு வைச்சுட்டு போனன்.

மத்தியானம் வீட்ட வர அண்ணர் கோப்பையும் கோபமுமா நிக்கிறார்.
வலு குஷியா போய் முகம் கழுவி,உடுப்பு மாத்தி கோப்பையை எடுத்து சோத்தை போட்டுட்டு

ஒரு வெற்றிச்சிரிப்பு,ஒரு எகத்தாள சிரிப்போட
நான் குனிஞ்சன்.
அண்ணரும் குனிஞ்சார்.
இரண்டாவது தட்டில மூணாவது வாளிக்கு பின்னால கைய விட்டா....
அப்பளத்தை காணேல்ல.
ஆண்டவா அப்பளத்தை காணேல்ல.

அங்கால
கொஞ்சம் தள்ளி மூலைக்குள்ள
நாலு காலையும் மடக்கிட்டு
இரண்டு கண்ணையும் மூடிட்டு
கறக்,மொறக், என்று பொச்சடித்து
சோக்காட்டி தின்டு கொண்டிருந்தது.
அந்த அற்(புத)ப ஜீவன்.

            *******






கதைக்கு ஒரு பிற்குறிப்பு
கரண்ட் டைம்ல
இப்போ வீட்ல அண்ணர் இல்லாததால நானே ராசா,நானே மந்திரி,ஆனாலும் சோக்காட்டுறதை வைபர்,மெசென்ஜருக்குள்ளால போட்டோ போட்டு தொடர்ந்தாலும் அந்த நேர்ல காட்டி தின்றது போல பீல் வருதில்ல.சுருக்கமா சொன்னா அந்த கத்தரிக்கா பொரியல் கூட லைட்டா கைக்குது.
அண்டைக்கு ஐஸ்கிறீம் குடிக்கிறன் என்டு மூக்கில கிறீமோட செல்பி அனுப்பினார். நான் அப்பத்தை தூக்கி கையில வைச்சு கொண்டு  மூஞ்சை முழுக்க பாலை அப்பிட்டு அப்பம் நக்கின மூஞ்சியோட ஒரு செல்பியை அடிச்சு விட்டன் பதிலுக்கு.

அண்ணரின் அலப்பறைகள் தொடரும்.....