About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, February 25, 2015

அபூர்வா!




இந்தக்கதையின் இத்தனையாவது பந்தியில் பெயரருக்கேற்றாற் போல அபூர்வா  இறந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஆனால்......

அதற்கு முதல் அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

இன்றோடு 365×7+45 நாட்கள் முடிகிறது.ஆண் குழந்தை பிறந்தால் அபூர்வன் என்று முடிவில் இருந்த போது. பெண் குழந்தை.பேர் மாறியது.

திருஷ்டிக்கு கடவுளே கன்னத்தில் சிறிதாய் பொட்டு வைத்து பூமிக்கு அவளை பொட்டலம் கட்டியிருந்தார்.

சற்று வளர்ந்த பின் உலக நடப்புக்கள்  தெ(பு)ரியவில்லை என்று பொருத்தமான டயப்ரரில் கண்ணாடி போட்டுக்கொண்டாள்.

அதிகம் சிரிப்பாள்.கொஞ்சமாய் அதையும் வித்தியாசமாய் பேசுவாள்.

அபூர்வா ஒரு வயது தாண்டிய பின்னும் "அம்மா" வை கூப்பிடாதது அபூர்வம்.இரண்டு வயது தாண்டிய பின் கூப்பிடதாது குறை.நாலு வயதில் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லாமல் போனது.

விபத்தின் இறுதி வினாடிகளின் போது மேரியின் அந்த கடைசிப்பார்வை அபூர்வாவை பார்த்திருந்தது.'அம்மா' என்று அவளை கூப்பிடச்சொல்லிய பார்வை.அவள் கூப்பிடவில்லை.கைகளை மட்டும் பிடித்துக்கொண்டிருந்தாள் கெட்டியாக.

இப்போது 7வது வயதில் கை விரல்களை உதடுகளாக்கி அப்பா என்கிற ஆத்மிகனுக்கு அவ்வப்போது நிறைய கற்றுக்கொடுக்கும் ஒரு சந்தோச குறை.

கோலிங் பெல் அடிக்க.......
கொலுசு சத்தம் அமோகமாய் கேட்டது.
அழைப்பு அபூர்வாவிடம் இருந்து.
எங்கிருந்து.விழுந்தாலும் அழ மாட்டாள்.காலை போட்டுத்தான் அடிப்பாள்.என்னவோ ஏதோ என்று
ஓடி,கதவு திறந்து

மூன்றடி உயரக்கதிரையில் ஆறடி உயரத்தில் கோலிங் பெல்லை விடாமல் அழுத்தியபடி,சிரித்தாள் கையில் தட்டு.தட்டில் தோசை.பிளஸ் தோசை சுட்ட ஈசம்மா- வேலைக்காரி.

என்ன தோசையா?அபூர்வாவை பார்த்தான்.
அவள் ஈசம்மாவை பார்த்தாள்

"காலைக்கு தோசைதான் பண்ணிணேண்.மத்தியானம்?? என்ன பண்றது?

"இண்டைக்கு மத்தியானம் வேணாம்.இரவுக்கு ஏதாவது பண்ணிணா போதும்"

தோசையோடு அவளை தூக்கி.

"அப்பாவும்,அபூவும் சேர்ந்து சாப்பிட்டு அப்புறமாய் கோயிலுக்கு போகலாம்.

"கழுத்திலிருந்த சிலுவையை தூக்கி காட்டினாள்."இதுவா?

"இது சேர்ச்"

"இது தான் கோயில்.அதே கழுத்திலிருந்த ஓம் பதக்கம்  பளபளத்தது."

"......" சிரிப்பு.
ஆத்மியும் சேர்ந்து சிரித்தான்.

"சிரிக்க வேண்டும்.இல்லா விட்டால் வழமையான அடுத்த கேள்வி.இரண்டையும் ஒன்றாய் தூக்கி என்ன வித்தியாசம் இரண்டுக்கும் என்பாள். பதில் சொல்வது கடினம்"

வயதுக்கு அதிகமாய் முடி வளர்த்திருந்தாள். இரண்டாய் பிரித்து பின்னி விட்டான்.
காதோரம் விழுந்த முடிகளை அணைத்து பூச்சிக் கிளிப் குத்தினான்.
மனைவியிடம் கற்றதை மகளுக்கு பிரயோகிப்பவன்.நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி சிவப்பு சட்டைக்கு சிவப்பிலே பாவடை போட்டு குட்டி தேவதை புறப்பட்டது.

கோயிலில் கால் கழுவும் போது அவள் பார்வை மரத்தின் கீழிருந்த பிச்சைக்காரர்களை பார்த்தது.வரும் போதே அவளிடம் கை நீட்டியமை. அவர்களின் முதலாம் பட்ச தொழில் தந்திரம்

அவளை தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் சுற்றும் போது வழமையான சைகை கேள்விகள்.

"ஏன் பாம்புக்கு கீழ் அவர் படுத்திருக்கிறார்.பாம்பு கொத்தாதா?"

"இவருக்கு பக்கத்தில் மட்டும் ஏன் இரண்டு பேர்.?"

ஏன் சூலம்.ஏன் வேல்.ஏன் நாய். ஏன் நந்தி.நிறைய கேள்விகள் விடையில்லாமல். கைகளால் அபிநயம் பிடித்து கேட்க.

ஞாயிற்றுக் கிழமைகளில் மேரிக்காய் சேர்ச்சுக்கு போய் வெள்ளிக்கிழமைகளில்  கோயிலுக்கு வரும் ஆத்மியின் தற்போதைய ஒரே ஒரு கடவுள்  அபூர்வா.

கடவுளிடம் கூட பதில் சொல்லாமல் தப்பிக்கலாம்.ஆனால் இந்த அபூர்வாவிடம்...

கேள்விகளுக்கு விடையாய் அவளைக்காட்ட
மறுபடியும்.
"......"சிரிப்பு.

திரும்பும் போது.பிச்சைக்காரனை பார்த்துக்கைகாட்ட..

"என்ன?"
"காசு கொடு என்றாள் பேர்சை காட்டி"

முடியாது.கிருஷ்ணனுக்கு முன் தொடங்கி கி.பி வரை அபிவிருத்தி அடையாத ஒரே தொழில் இது.

"இவர்களுக்கு காசு கொடுத்தால் நமக்கு பாவம் வரும்மா"

"இல்லை கொடு"

"முடியாது"

"கையை இடறி ஓட"

"நில்!அபூ எங்க போறாய்?"

 பிச்சைக்காரனோடு போய் பக்கத்தில்  இருந்தாள்.

"அபூ. இப்போ எழும்பி வரப்போறியா இல்லையா?"
பிச்சைக்காரனோடு போய்...உடம்பு பதறியது.

அவன் வினோதமாய் ஆத்மீயை பார்த்து,அசந்தர்ப்பமாய் ஐயா!, கையை நீட்ட அந்த  கைக்கு மேல் தன் கையை வைத்தாள்.

அவளுக்கு பேர்சில் பெரிதாயிருந்த நோட்டை போட்டான்.பிச்சைக்காரியாகி விட்டாளே கடைசியில்.

போகும் போது தோளைப்பிடித்திருந்த அந்தக் குட்டிப்பிச்சைக்காரியை நினைக்க கோபம் கொந்தளித்தாலும் காட்டவில்லை.

நினைத்தை முடிப்பதற்காக எதையும் செய்ய தயங்காத பிடிவாதம்.பிறக்கும் போதே சேர்ந்து வந்திருக்க வேண்டும்.சின்ன வயதில் மறந்தும் நிலாக்காட்டி சோறூட்டவில்லை.நிலா வேண்டுமென்று கிணற்றில் குதிக்க தயாராகி இருப்பாள்.

இப்படியான ஒரு பிடிவாதத்தில்
நேற்று அவளோடு  குடித்த மூன்றாவது ஜஸ் கிறீமுக்கு
இன்று 39 பாகையில் அவனுக்கு சுட நாளைக்கு கொஸ்பிட்டல் போகலாம் என்று முடிவில் இருக்க.

நெற்றியில் கை வைத்து அவன் காய்ச்சலை பார்த்தபடியே உறங்கி போன அவளை கட்டிலில் படுக்கவைத்து,மறு நாள் கொஸ்பிட்டல் போனான்.
நேற்றை விட இன்று காய்சல் குறைந்திருந்தது.இருந்தாலும் கொஸ்பிட்டலுக்கு போய் சோதனை பண்ணிப் பார்க்க ஐந்து மில்லி இரத்தத்தை இழக்க வேண்டியிருந்தது.

சாதாரணகாய்சல்தான்.

"பனடோல்" ஐ விளங்காத எழுத்தில் எழுதியிருந்தாலும் குளிசையின் வடிவத்தில் அதுதான் என்று புரிந்தது.வாசலுக்கு அருகில் வர.

யாரிவன் கை காட்டுகிறான்.
வைத்திய சாலைகளிலும் பிச்சை எடுக்க தொடங்கி விட்டார்களா.

பிச்சைதான் கேட்டான்.ஆனால் ஒரு விதமான பிச்சை.இரத்தம்..,இரத்தத்தை பிச்சையாய் கேட்டான்.

"சேர்!!. சேர் உங்களால பிளட் டொனேட் பண்ண முடியுமா?"
உங்க பிளட் குறூப் AB தானே.

இவனுக்கு எப்படி தெரியும். என் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்டை பக்கத்தில் நின்று ஒட்டுப்பாத்திருக்க வேண்டும்.

"இங்க இல்லையாம் ......சேர்.என் வைஃப் அன்ட் டோட்டர்.... வசனத்தை முடிக்காமல் மூச்சு விட்டான்.
பார்த்தான்.கொஞ்சம் அழுதிருந்தான்."

அவன் கையிலேயே நிறைய இரத்தம் காய்ந்து போய்.அவனுடையதா?இருக்கலாம்.

இரத்தம்..இரத்தம் ஏதோ செய்தது.தலையெல்லாம் கிறு கிறுத்தது அவனைப்பார்க்க.மூன்று வருசத்துக்கு முதல் அவனைப்போலவே இரத்....
அன்றிலிருந்து இரத்தத்தை பார்த்தாலே

"இல்லை.சொறி!.நான் இப்ப...போகனும்"

அப்பா நீ ? குடு. கையை பிடித்தாள்

அபூ! இது ஐந்து ரூபா பிச்சைக் காசில்லை .இரத்தம். எல்லாம் சிவப்பு நிறம் என்றாலும் ஒவ்வோன்றும் ஒவ்வோரு ரகம்.
ஒரு ரத்தம் களவு .மற்றது இரக்கம்.நேர்மை.துரோகம்.

அதுக்கு தக்கதாய் ஒவ்வோரு வரின் இரத்தமும் வேறு வேறு  வகையாய் கடைசில பிரிஞ்சுட்டுது.இப்ப A,B,AB,O+,O- இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.

"வா போலாம்".
முடியாது. அதே திமிர் பார்வை.

கையை மீண்டும் இடறினாள்!

சுற்றி பார்த்து மதில் பக்கத்தில் இருந்த தகரத்தின் கீழ் கையை வைத்து

"சர்க்" கோடாய் இரக்க குறூப் இரத்தம் வடிய அதை இரத்தம் கேட்டவனிடம் கொண்டு சென்றாள்.

"Damn it  ... அபூ"

"விரோதப் பார்வை பார்த்தாள் ." ஏன் நீ இப்படி?

கட்டிலில் படுத்திருந்தான். AB   இரத்தம் துளித்துளியாய் கலனுக்குள் வடிந்து கொண்டிருக்க.ஒரு பக்கத்தில் ."அப்பா நோகுதா" என்று கண்ணாலே கேட்க தலையாட்டி "இல்லை" .
உனக்கு.காயம்?
"இல்லையே" என்று  கை காட்ட.இல்லைதான்
"......."சிரிப்பு

இரத்தம் கேட்டவன் கால்  பக்கத்தில் கைகட்டி நின்றான். கோயில் மூலஸ்தான மூர்த்தியை பார்ப்பது போல.


தலைக்கு பக்கத்தில்
டொக்ரரின் கேள்விகள்.

பெயர்:ஆத்மீகன்.
வயது:34

நல்ல காலம் உங்களால தான் இவங்க குழந்தை பிழைச்சுது.

உங்க குழந்தை பிழைக்க என் குழந்தை தான் காரணம்.

"அப்டியா யாரது?.எங்க இருக்காங்க.?"

இதோ இருக்கிறாள்.!!

                              அ..பூ ...ர்...வா..!!

"....." சிரிப்பு.




                 ######

Friday, February 13, 2015

ஐ நாளைக்கு.....


ஸ்டம்ப் எல்லாம் நட்டு எல்லைக்கோட்டுக்கு கசற் ரேப்பை கல்லில கட்டி கிறவுண்ட் எல்லாம் ரெடி பண்ணியாச்சு.

ஆனா இன்னும் தம்பாவோட ரீமைக்காணேல்ல.பெரியாச்சரியம் எங்கட ரீமுக்கு.ஏன் என்டா எங்கட ஏரியாக்குள்ளயே ஒரு கெத்தான ரீம் என்டா அது தம்பான்ர ரீம் மட்டும் தான்.பின் வாங்கி இருக்க மாட்டாங்கள்.

நிஐம்தான் தூரத்தில அவங்கட ரீம் வாறது தெரிந்தது.மட்ச் நடக்கும் போது பிளாஷ்பாக் போகட்டும்

#####

உண்மைல ஒரு இரண்டு வருசத்துக்கு முதல் "தம்பா" வின்ர ரீம் "கிச்சா" வின்ர ரீம் என்டெல்லாம் இல்லை.
அப்ப இந்த இரண்டு ரீமும் ஒண்டாத்தான் எங்கட ஏரியா முருகன் கோயிலுக்கு பின்னால கிடக்கிற பதினைஞ்சு பரப்பு காணிக்குள்ள விளையாட்றது.

ஆர் கண்ணு பட்டுச்சுதோ ஒரு பெரிய சண்டைல தான் இப்படி ஒண்ணாயிருந்தது உடைஞ்சு இரண்டாயிட்டுது.

நான் கிச்சாவின்ர ரீம்காரன்.அதால கதைல கூட எங்கட ரீமுக்குத்தான் சப்போட் பண்ணுவன்.

அந்த சண்டைல இருந்து சகலத்துக்கும் சண்டைதான்.கிரவுண்டுக்குத்தான் பெரிய ஆர்ப்பாட்டம்.உண்மைல தம்பா ன்ர ரீம்தான் பவரான ரீம் என்டு எங்கள் எல்லாருக்கும் தெரியும்.ஏன் என்டா அந்த ரீமில இருந்த இரண்டு பேர்.ஒண்ணு "குண்டுமணி" .அவனுக்கு  அப்படி ஒரு பேரை வச்சதுக்கு காரணம் நீங்க நினைக்கிற மாதிரியில்லை.

அவன் இருக்கிற நேரத்தில மணிவண்ணன் ஐ சுருக்கி "மணி" என்டும் இல்லாத நேரத்தில "முன்பாதியையும்" பயன்படுத்துவம்.

இவனை பற்றி சிறப்பா சொல்லணும்.இவன்தான் தம்பா ரீமோட தலை சிறந்த கீப்பர்.இவன்ர வரலாற்றில இவனைத்தாண்டி பந்து பின்னால போனதும் இல்லை.பந்தை கையால பிடிச்சதும் இல்லை.

விளையாடும் போது காற்சட்டைக்குள் புழுக்கொடியலோ இல்லை பனங்கிழங்கோ வைத்து சப்புவான்.பந்து இவனில் பட்டு உந்தத்தை காக்க தெறித்து ஸ்டம்பில் பட அந்த நேரம் பார்த்து பேட்ஸ்மானும் கிறிஸ் கோட்டை தாண்டி நிக்க அம்பியருக்கு பதிலாய் குண்டுமணியே புழுக்கொடியலை தூக்கி காட்டுவான்.அவுட்.

இரண்டாவது "விச்சுவா." குண்டுமணியோட தம்பியா? என்டு எல்லாரும் கேட்டாலும் அவன் இவனுக்கு அண்ணண் முறை.ஆனால் அப்படி ஒரு உருவ ஒற்றுமை.இவனுக்கு வாழ்க்கையில் இரண்டு விசயத்தில் மட்டும் அலாதிப்பிரியம்.முதலாவது வாயில் உள்ள பட்டாணிக்கடலை.இரண்டாவது கையில் உள்ள ப.கடலை.

இவங்களை சமாளிக்க எங்களோட ரீமில இருந்த ஒரே ஒரு ஜீவன் "கிச்சா". கோபமோ சந்தோசமோ எப்போதும் "கல்க்" போல இருப்பான்.சிரிக்கும் போது மட்டும் இரண்டு கன்னத்திலும் ஒரு ஸ்பூன் அளவு பள்ளம் விழும்.

இரண்டு ரீமில் தலா ஆறு பேரளவில்தான் நிரந்தர பிளேயர்கள் மீதி நாலைந்து பேர் பாரளுமன்ற உறுப்பினர்கள் போல் பாய்வார்கள்.

பெரிய பிரச்சினை கிரவுண்ட்தான்.அதுக்காக மட்ச் போட்டு நாங்கள் வென்றாலும் மறுநாள் குண்டுமணியையும் விச்சுவாவையும் காவலுக்கு விட்டுவிட்டு அவர்கள் அந்த இடத்தை பயன்படுத்த கிச்சாவும் பொறுத்து பொறுத்து பார்த்து வேற ஒரு காணியை பிடித்தான்.
அந்த காணி முழுக்க நெருஞ்சி முள்ளு.எங்கட ரீம் இரவிரவா வாழைக்குத்தியளைப் போட்டு உருட்டி எடுத்து இடத்தை ரெடி பண்ணிட்டு அடுத்த நாள் வந்தா முதல் நாள் கிடந்ததை விட கூடவா கிடக்கு முள்ளு. கூடவே முறிச்சு எறிஞ்சு கிடந்த இரண்டு மூண்டு புழுக்கொடியலின் நுனிக்காம்புகள்.

இப்படி பல விசயங்களிலும் பல இடங்களிலும் இந்த புழுக்கொடியல் நுனி துண்டுகள் கிடக்கும்.எங்கெல்லாம் அது கிடக்கிறதோ அங்கெல்லாம் குண்டுமணியிண் அநியாயங்கள் நடைபெற்றிருக்கும்.

இருந்தாலும் பூமி விடாம சுத்தினதில கொஞ்சக்காலம் போக எங்கட ரீமில புதுசா  வந்து சேர்ந்தவன் ராகீ என்கிற ராகவன்.கண்ணாடி போட்டு நெற்றியில் ஓரிரு முடிகள்.ஐந்தடி இருப்பான்.எப்படி எறிந்தாலும் அவன் பேட்டில் பட்டுத்தான் பந்து பாதை மாறியது.அசப்பில் குட்டிக் கங்குலி போல இருப்பான்.
அவன் வந்ததின் பின் எங்கள் ரீம் ஆயிரம் யானை பலம் பெற்றது.
அந்த பீமனை தங்கள் பக்கம் இழுக்க தம்பா ரீம் எவ்ளோ வேலை பண்ணியும் பாண்டவர் பக்கம் ஒரு கர்ணன் மாதிரி நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டான்.எங்களோடு.

இந்த கர்ணன் லவ் பண்ணித் தொலைத்தான். விசித்திரா என்கிற புருசாலியை.இதில கொடுமை என்ன என்டா இந்த விசித்திரா விச்சுவாக்கு மச்சாள் முறை.
எங்களோடு சின்ன வயதில் சேர்ந்து விளையாடியவள்.பின் அவள் இனி விளையாட வர மாட்டாள் என்று வீட்டில் ஏதோ பங்கஷன்  வைத்து தகவல்  சொன்னார்கள்.

அதன் பின் அவளைக் காண்பது அரிதாகியது.

ராகீ வந்து சில மாதங்களின் பின் விசித்திரா பக்தியோடு அடிக்கடி மாலை வேளைகளில் முன்னால் இருந்த முருகன் கோயிலை சுற்றிக்கும்பிட்டது. எங்களுக்கு மட்டும் விசித்திரமாயிருந்தது.

அவள் அப்படி சுற்றி வரும் போது விச்சூ கடலையை வாயில் போட்டும் ராகீ அதை அவளிடம் போட்டதிலிருந்தும் புரிந்து போனது.

இது இப்படியே போய் கொண்டிருந்த கால கட்டத்தில் கிரவுண்ட்டுக்கான சண்டை நன்றாய் முத்தியதில் கடைசியாய் அதற்கான உரிமையை தீர்மானிப்பதற்காய்

போட்ட மேட்ச் தான் இப்போது நடந்து கொண்டிருப்பது.

ஆனால் இந்த மட்ச்சில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம் ராகீயை தம்பா ரீம் வாங்கி விட்டிருந்தது. பயமுறுத்தல் மூலமாக.
விச்சுவாக்கு விசித்திரா-ராகீயின் விசயம் தெரிந்து அதை அவள் வீட்டில் போய் சொல்லி விடுவேன் என்று வெருட்ட ராகீ திணற இறுதியில் மட்சில் அவன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று குழாயடியில் வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டான் விச்சூ.

இதை படங்களில் வருவது போல நான் ஒளிந்து நிண்டு கேட்டன் என்டு எழுதுறதுதான் சம்பிரதாயம் .ஆனா நிஜ சீன் அவனாவே இதை என்கிட்ட விசித்து விசித்து சொன்னதுதான்.

######

கொடுத்த வாக்குக்கமைய ராகீ மட்சில் நிறைய சொதப்பினான்.

இரண்டு ஓவருக்கு 28 ரன் கொடுத்து பத்து போலில் மூன்று ரன்னை எடுத்து எதிர்த்தாப்புறத்தில் நின்ற என்னைப் பார்த்தான்.

தம்பா வின் ரீம் 109 ரன் இலக்காக்கியது.
இன்னும் இரண்டு பந்தில் மூன்று ரன் எடுத்தால் வெற்றியும் கிரவுண்டும் எம் வசம்.
வந்த பந்தை தட்டி விட்டு நான் ஒன்று ஓட ராகீயின் முறை இப்போது.
ஒரு பந்து இரண்டு ரன்.

எந்த சலனமும் இல்லாமல் இப்போது நின்றான்.வந்த பந்தை தூக்கி அடித்தான்

பந்து பரவளைவு பாதையில் ஈர்ப்பார்முடுகலுடன் இயங்கியது .விச்சூ பந்தை பிடிக்க தயாராய் கையை உரசிக்கொண்டான்.
நான் ஓட தொடங்கினேன்.

பந்தைப்பிடித்தால் தோல்வி .
ராகீ காதலுக்காக நட்புக்கு செய்த துரோகம்.
கிரவுண்ட் போச்சு

பிடிக்கா விட்டால் வெற்றி.
நட்பை விட்டுக்கொடுக்கவில்லை.
கிரவுண்டும் எங்களுக்கே.அவன் காதல் ...???... ஆயிடும்.

இந்தக்கதைக்கு எப்படி முடிவு கொடுத்தாலும் ஒரு பக்கத்துக்கு அநியாயம் செய்யற போல போயிடும்.அதால முடிவு கடவுளுக்கு மட்டும் தெரியட்டும்.

அதெல்லாம் வேணாம் முடிவு வேணுமெண்டாக்கள் கொஞ்சூண்டு பொறுமை.பந்து கொஞ்சம் கீழ வரட்டுமே.

அது வரைக்கும் இந்த பதிவு எழுத காரணமான இரண்டு பகுதிகள்.

பகுதி - 1
காதல். வழக்கமான சமாச்சாரம் தான்.எல்லோருக்கும். தெரிஞ்ச விசயம் தான் என்று விடமுடியாது.காரணம் கடைசியாய் அண்மையில் நீயா நானா பார்த்த போது கோட் கோபிநாத் சார் காதல் என்றால் என்ன? என்று கேட்க வந்ததில் பாதி பேந்த பேந்த விழித்தது.

பாதி இஷ்டத்துக்கு

"சுய நலமற்ற அன்பு"
"ஒரு உணர்வு"

அது இது என்று ஏகத்துக்கும் வரைவிலக்கணங்களை அள்ளி வீசியது.

ஆதாம் ஏவாள் முதல் ஆண்டாள் அழகர் வரை அனேக காதல் கதைகள் பார்த்தாயிற்று இன்னும் நிறைய பார்க்க இருக்கிறது.
ஆனால் காதல் என்றால் என்ன? கேள்வி க்கு
விடை தெரியாது.

இவ்வளவு கதைக்கிறியே உனக்கு தெரியுமா என்டு கேட்டால் எனக்கும் தெரியாது.

அதால அதை தெரிஞ்சவங்கள் இந்த பகுதி ஒன்றை பூரணப்படுத்தவும்

பகுதி - 2
கிரிக்கெட்.இப்போது
ரியூசன்ல ஒரு பாடம் முடிந்து மற்ற பாட வாத்தியார் வருவதற்கிடையில் கலக்ஸியை நோண்டி கண்டிக்கிரஷில் இரண்டு லெவல் முடித்து ரெம்பிள் ரன்னில் குரங்குக்கு பயந்தோடும் குரங்குகளுக்கு மேலே கதையில் வந்த மாதிரியான ஒரு காலம் இருந்தது என்பது புரிய வேண்டும்.

1996 ஆம் ஆண்டு இலங்கை கப் அடித்த போது என்னால் அதைப்பார்க்க முடியாமல் போனதுக்கு இரண்டு காரணம்.ஒன்று நான் பிறந்தது அதுக்கு முதல் வருசம்.

இரண்டாவது அப்படியே வேளைக்கு பிறந்திருந்தாலும் 100 ஓவருக்கு டைனமோ சுத்த முடியாது தொடர்ந்து.அந்த ரைமில்.

கிரிக்கெட் என்பது புரிந்து அதன் மீது வெறியனாகி ஏழாம் ஆண்டுக்கு வரும் போது மீண்டும் இலங்கை இறுதிக்குள் நுழைந்தது 2007 ல்.
அப்போது வீட்டில் ரிவீ இல்லை.சூரியனில் விழுந்து கிடந்து இறுதியாட்ட ஸ்கோர் கேட்க மழை பெய்தது.கிரவுண்டில்.

96ல் வாங்கிய கப் வேண்டாம் என்று பொண்டிங்கிடமே கொடுத்து விட்டு வந்தார்கள்.சகிக்கவில்லை எனக்கு.

2011ல் ஓ எல் படிக்கையில் எக்ஸ்ஸாமை அப்புறம் பார்க்கலாம் மட்சை இப்பவே பார்க்கனும் என்று இறுதியைப்பார்க்க விட்ச்சில் எங்கே பேட்ஸ்மான் பேட்டைக்குத்த வேண்டும் என்பதைக்கூட நாட்டின் அரசியல் தீர்மானித்திருக்கலாம் என்று தோற்ற பின் கதைத்துக்கொண்டார்கள்.

இப்போது 2015
நாளை ஆட்டம் ஆரம்பம்.இதுவரை காலமும் இலங்கையை தாங்கிய இரு தூண்கள் மகேல.,சங்கா வின் சகாப்தம் இந்த உலக கிண்ணத்துடன் முடிகிறது.

இந்த முறையும் இறுதிக்கு வந்து அல்வா கிண்டினா ........
ஆமா சொல்லிப்புட்டேன்.

ஆக மொத்ததில் டபுள் கொண்டாட்டம் நாளைக்கு.
அதை அழகாய் கொண்டாட வாழ்த்துக்கள் கூறி விடை பெற

ஓவ்!!! பந்து விச்சூவின் பத்து விரல்களுக்குள்ளும் சரியாய் விழுந்து........

நிற்காமல் அப்படியே கீழே விழ

கூடவே விச்சூவும் விழுந்தான்.நிலத்தில்.
பட்டாணிக்கடலையெல்லாம் கொட்டுப்பட்டது அவன் பையிலிருந்து.

"அவனை தூக்கப்போனவர்களில் யாரோ கேட்டது, எனக்கு கேட்டது"

"ஏதுடா உனக்கு இவ்வளவு கடலை???"

எனக்குப் புரிந்தது. ராகீ கர்ணண் இல்லை கண்ணண்





அற்பப்பிறவி


Thursday, February 5, 2015

காதல் இல்லாமல்......


எனக்கு இதை தவிர வேற வழி தெரியேல்ல .
எத்தினை நாள் தான் நானும் சாடை மாடையாய் சொல்றதும் அவளும் கண்டுக்காம இருக்கிறதும்.

இது மூலமா எப்டியாச்சும் சொல்லிட வேண்டியதுதான்.
'உ' போட்டு
தொடங்கினேன்.


உலகம் அப்படியே அதே நீள் வட்டப்பாதையில் இருபத்து நான்கு மணி நேரமும் சுற்றிக்கொண்டிருந்தாலும் இந்த 2165 ஆம் ஆண்டில் ஜீரோனுக்கு அது பிடிக்கவில்லை.


வேகமாய் சுற்ற வேண்டும் போல கிடந்தது.
அப்படி சுற்றினால்தான்  வேகமாய் விடிந்து மீண்டும் வகுப்புக்கு போய் ஆலியாவை பார்க்க முடியும்.

ஆலியா.அழகு. இப்போதைக்கு இப்படித்தான் அவனால் கூற முடியும்.

இதற்கெல்லாம்
காரணம் சற்று கிழமைகளுக்கு முன்


யாருக்கும் இல்லாத பிரச்சினை.

வகுப்பில் படிக்கும் போது அது பெரிசாய் தெரிவதில்லை.வீட்டில் இருக்கும் போதுதான் மீண்டும் வகுப்புக்கு போக வேண்டும் போல.

யோசித்தான்.நேற்று அதுக்கு முதல் நாள் வித்தியாசமாய் தின்றது குடித்தது.என்ன செய்தேன்.

ப்ளாஷ் அடித்தது. சட்டென்று ஞாபகம் வந்தது.கம்பியூட்டரில் கை வைத்து தப்பாட்டம் ஆடியது.

அசைன்மென்டுக்கு பக்றீரியா தேட இறங்கி எங்கோ ஏதோ எப்படியோ போய் சிக்கியது
.ஏதோ போயம் போல
வாசித்தது

முதலில் வாசிக்கும் போது அவனுக்கு அது பிடிபடவில்லை.

"காதலித்துப்பார் உன்னைச்சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரியும்"

காதல்.????

இந்தக்கணம் பொறி தட்ட மீண்டும் பழைய கிஸ்டரியை நோண்டி அதே பக்கத்தை எடுத்து வாசிக்க வரிக்கு வரி அவனுக்கு இப்ப உள்ள பிரச்சினைகள் அதிலே  விலாவாரியாய்.

"வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை உருளக்காண்பாய்"

எக்ஸாட்லி !!!!
எனக்கு வந்திருக்கிறது ஒரு வருத்தம்தான்.
காதல்.என்ன கருமம் இது.

உடனடியாய் பிரிஸ்கிரிப்ஷன் தேவை.ஒரு அழைப்பில் அந்த ஸ்டேசன் மருத்துவர் வீட்டில் இருந்தார்.இந்த நூற்றாண்டின் விதி.அது.

நெற்றியில் கொஞ்சம் நரை தலைமயிர்.கையில் பெட்டி கோட்டை கழட்டி மேசையில் வைத்து.அறுபது தாண்டியிருக்கும்.

என்ன?

வருத்தம்?

என்ன செய்யுது?

மூன்று முறை குளித்து ஆறு தரம் பல் துலக்குகின்றேன்!!

அப்டி என்டா வருத்தம் ஒன்டும் வரக்கூடாதே.!!

"அதான் டாக்டர் பிரச்சினை.எனக்கு வந்திருக்கிறது காதல் வருத்தமாம் அப்டியே இதெல்லாம் அதில போட்டிருக்கு"

எதில.
சொல்ல முடியாது. தடை செய்த பக்கங்களை கிண்டியது. சைபர் கிரைம்.நாக்கைக்கடித்தான்.

டொக்டர் காவி தெரிய சிரித்தார்.
காதல்.
இதை நீ எங்க கேள்விப்பட்டாய் அது ஒரு எண்பது தொண்ணூறு வருசங்களுக்கு முந்திய அழிஞ்சு போன ஒரு கொடுமை.

கிட்டத்தட்ட 2067 ம் ஆண்டளவில இந்த உலகத்தில இருந்த கடைசிப்பெண் போனதோட அந்த காதலும் மெல்ல மறைஞ்சுட்டுது.தொடர்ந்து விஞ்ஞானத்தால பெண்ணிணத்தை உருவாக்க மட்டும்தான் முடிஞ்சுதே ஒழிய அவங்களோட வயிற்றில

"அதெல்லாம் வேண்டாம் விடு"

"இல்ல டொக் சொல்லுங்க"

இப்ப குழந்தைகளை வோம்ப் ஸ்டேசன்ல இருந்து வாங்கிற மாதிரி நூறு வருசங்களுக்கு முன்னாடி இல்ல.வயிற்றிலதான் கரு வளர்ந்தது. குழந்தை பிறந்தது பெண்களுக்கு.
உண்மையான  மனிதப்பெண்கள் போனதோட இந்த காதலும் போயிட்டுது.இப்படியான உணர்வுகளும் போயிட்டுது.

இப்ப இருக்கிறதெல்லாம் உணர்வுகள் எதுவுமே இல்லாத  காதோரங்களுக்கு கொஞ்சம் தள்ளி கறுப்பு குறியுள்ள பெண் உடல்கள் மட்டும்தான்.

கொம்பியூட்டர்ல ரெஸ்ரிக் பண்ணிய பக்கங்களை நோண்டாம இருந்தாலே போதும்.உனக்கு இந்த வருத்தம் எல்லாம் வராது.இதெல்லாம் ஒரு பிரமை.

ஏன் என்டா இப்ப உன்னால யாரையும் காதலிக்க முடியாது.உன்னையும் யாருமே காதலிக்க மாட்டார்கள்.
அதால தான் இந்த உலகம் இப்ப இவ்வளவு அமைதியாய் இருக்குது.

இருந்தாலும் ஏதோ யோசித்து புறப்படுகையில் அவனிடமிருந்து ஐந்து மி.லீ ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டார்.

இது நடந்து சற்றுக்கிழமைகளின் பின் இப்போது.
வகுப்பில்.

ஆலியாவை அடிக்கடி திரும்பி பார்த்தான்.

ஒரு கையை கழுத்துக்குள் வைத்துக்கொண்டு

ஏதோ அவளும் அவனைப்பார்ப்பது போல கிடந்தது.
ஆனால் அப்படி இல்லை அதுவும் ஒரு அறிகுறி என்று சில கவிக்கிறுக்கல்களிலிருந்து கண்டுபிடித்தான்.

பல பழைய விடயங்களைக்கிண்டி கிளறியதில்

நிறைய புலப்பட்டது.

ஷாஜகான் தொடங்கி ஜீலியட் வரை வாசித்து
ஏ.ஆர் முதல் இளையராஜா வரை ஐ போட்டில் நிரப்பி

கவிப்பேரரசுக்குப் போட்டியாய் இப்போது யோசித்துக்கொண்டிருந்தான்.

ஆலியாவை ஆரம்பத்தில் 'அழகு' என்று மட்டும் கூறிய அவன் அந்த அழகை வர்ணிக்க கூடியனாகி.....

இந்தக்காதல் கதைக்கு வில்லன் அவனோட காதல் என்றால் என்ன என்று தெரியாத காதலிதான். இருந்தாலும் இன்னும் ஒரு வில்லனை செருகலாமா என்டு மண்டை நான் மண்டை காய

அது என் திட்டத்துக்கு பாதகமாய் போயிடலாம்.இருந்தாலும்

ஜீரோ வுக்கு அந்த வருத்தம் வந்து இரண்டு மாதம் ஆகி விட்டிருந்தது.

ஆலியா என்னும் பேர் அணு அணுவாக இப்போது உடலில் ஊறிப்போயிருந்தது.
யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்

என்ன உலகமடா இது??
இதெல்லாம் நடப்பதற்கு முன் அவளுக்கு பக்கத்தில் நின்றிருக்கின்றான்.
கதைத்திருக்கின்றான்.
தொட்டுப்பார்த்திருக்கின்றான்.

இப்போது எட்டடி தள்ளி நின்றான்.

இதுக்கு மேலே தாங்க முடியாது.

சொல்லித்தோற்ற காதல்களிலும் சொல்லாமல் தோற்ற காதல்கள் அதிகம் என்று
எங்கோ வாசித்தது ஞாபகம் வந்தது.

சொல்லி விடுவது என்று ஒரு முடிவுக்கு வந்தான். எப்படி??
கையாலேயே கடிதம் எழுத முடிவெடுத்திருந்தான்.

கடைசியாக களவாய் பார்த்த அத்தனை காதல் படங்களையும் மைன்டுக்குள் சுத்தவிட்டு

ஆலியா.ஆலியா.


கடிதம் மூலமா எப்டியாச்சும் சொல்லிட வேண்டியதுதான்.
எழுத
தொடங்கினான்

எல்லாவற்றையையும் விவரமாய
எழுதி முடித்து பார்த்தான்.

பச்சை இலையே  இல்லை சிங்கிள் சிவப்பு ரோசாவுக்கு எங்கே போவான்.
அதனால் வெறும் கவருக்குள் செருகினான்

நானும் செருகினேன்.

ஆபிஸுக்குள் நுழைந்து தேடிப்பிடித்து.

அதிசயா! அதீ

டோன்ட் கோல் மீ .

வை.??

நீ முதல்ல கையில இருக்கிறத அதில வை.நேற்று எங்க போனா?


அய்யோ இண்டைக்கும் முட்டி மோதப்போறாள்!!பட்டென்டு போட்டு உடைக்கனும்.

ஐ . அடச்சீ கருமம் தொண்டை எல்லாம் வறண்டு போய்.எச்சிலை விழுங்கி சட்டென்று சொன்னேன்.

"ஐ லவ் யூ"

"அதிச(யா)யம் அதிசயமாய் பார்த்து."

என்ன நீ? கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா உனக்கு?

"கொஞ்சம் பொறு நான் இன்னும் முடிக்கேல்ல"

இந்தா.. ஆலியாவிடம் ஜீரோன் கவரை நீட்டினான்.

இதைத்தான் கருமம் லெட்டரா வேற கொண்டந்தியா.கொடுப்புக்குள் சிரிப்பதை கன்னக்குழி காட்டியது.அவள் அதை காட்டாமல் நெற்றி முடியை ஒற்றை விரலால் இழுத்து விட்டுக்கொண்டு மறைத்தாள்.

"எல்லாக்காதலிகளும் கை தேர்ந்த கள்ளிகள்"

இங்க கொண்டா!

"இது லெட்டரில்ல."

"அப்போ"

"அடுத்த கிழமைக்கு லவ்ர்ஸ் டேக்காக ஸ்பெஷலாய் பப்ளிஷ் பண்ண நீ கேட்ட கதை. ஆனா?"

என்ன?

இதோட முடிவு நான் எழுதல்ல. நீ என்னை லவ் பண்றதா இருந்தா இந்த கதைல இருக்கிற காதல் எப்படியாவது ஜெயிக்கிற மாதிரி எழுதிட்டு பிரிண்டுக்கு குடு .இல்லாட்டி அதில வாற டொக்டரை வில்லனாக்கி இரண்டு பேரையும் பிரிச்சுடு.முடிவு உன்னோடது.

அதை அறிய 14 வரை காத்திருக்கிறன்.இப்ப எதுவும் சொல்லாதே.

இந்தா....நான் அதிசயாவிடம் கவரை நீட்டினேன்.

இரண்டு கவர்களும் ஒரே நேரத்தில் கீழே விழுந்தது.

அதை குனிந்து எடுக்கும் போது
ஜீரோன் பார்த்தான்

 காதோரங்களுக்கு பக்கத்தில்
கறுப்பு குறி எதையும் காணவில்லை.

அப்படியானால்.இவள்!

          #####














இந்த காதலர் தினத்துக்கு
இந்தக்கதை என்
சமர்பணங்கள்.

அற்பப்பிறவி



Monday, February 2, 2015

அதென்ன "நீ"???


முதல் பதிவு போட்டு கொஞ்ச நேரம் கழிஞ்சு அவன் எடுத்தான் எல்லாம் ஓகே.என்னைப்பத்தி எழுதியிருக்கா பரவால்ல.

அப்புறம் என்ன?

பிளாக்கோட பேர்தான்.அதென்ன நான் பிளஸ் நீ.
நான் ஓகே.
அப்போ நீ யார்?
நானா??

நானில்லடா நீ தான்

நீ அப்போ.?

அது நான்.!!!

"குழப்பாதே....."

"நான் குழப்பல்ல நீதான் குழம்புறாய்.வடிவாய் யோச்சுப்பாரு."

கட்.

பிழைச்சேன்

கொஞ்ச நேரம் கழிச்சு
அதி மேலிடத்திலிருந்து கேள்வி

புதுசா எழுதினதைப்பற்றி பாராட்டவாயிருக்கும் என்டு யோச்சது என்ர மடத்தனம்.

டிரைக்ட் கேள்வி.

யார் அது "நீ"?

நீ?ம்ம்
அது நீதான்!!!!
சிரிக்ககூடாது.சிரிப்பை வைச்சே கண்டுபிடிக்கக்கூடிய எட்டாவது அதிசய அடாவடி.

பூச்சுத்ததே!!

சமாளிக்கணும்.
ஓகே.நான் என்கிறது அதில எழுதுற 'நான்'.

"ம்."

'நீ' ங்கிறது அந்த கணத்தில அதை வாச்சுட்டுருக்கிற ஆராயிருந்தாலும்.
எப்டி நம்ம கற்பனை.

"இப்போதைக்கு தேவல்ல இருந்தாலும் நீ வேற பேர் ஒண்ணை சீக்கிரமா மாத்து.
எனக்கென்னவோ சரியாப்படல்ல இது"

"பெண்கள் வாசம் என்னை தவிர இனி வீசக்கூடாது. அன்பே தெரேசா.
அவரை தவிர பிறர் பேசக்கூடாது."

டொட்.

செல்லப்பிடாரி .... அடங்காப்பிடாரி  யா இருந்தா இப்டித்தான்.

"இதெல்லாம் கற்பனை"

யின்னு கீழ போட்டாத்தான் மேல சொன்ன அவன்கிட்ட இருந்து தப்பலாம்


இப்படிக்கு அதே பழைய
அற்ப பிறவி.