About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Friday, December 1, 2017

கார்த்திகை காதல்கள்

நாளைக்குத்தான் நாள் என்று வாக்கிய பஞ்சாங்க காலண்டர் காட்டும் போது திருக்கணிதம் நாளை மறுநாள்  என்றதில் கோயில் தொட்டு கேணி வரை ஒரு குழப்பம் இருந்தது. திருக்கணிதத்தின் எல்.எச்.எஸ்ஸும் வாக்கியத்தின் ஆர்.எச்.எஸ்ஸும்  அல்ஜீப்ரா கணக்குகளில் பெரும்பாலும் சமனாவதில்லை.அப்படியே ஆனாலும் ஒருபக்கம் காப்பிட்டல் எக்ஸும் மறுபக்கம் சிமோல் எக்ஸுமாய் இருக்கும்.

இருந்தாலும் குண்டுமணி,தம்பா,ராகீ அன்ட் கோ உள்ளடங்கிய ஆலய நிர்வாக சபையின் 1/3 பெரும்பான்மை வாக்கோடு வாக்கியம் வென்றதில் நாளைக்குத்தான் கார்த்திகை விளக்கீடு  என்று முடிவாகியிருந்தது.

முடிவாகி முதல் நாளே சுற்றுவட்டாரத்தில் புழுதி கிளம்பியிருந்தது. வாழைக்குத்திகள் துண்டாகின.அரைக்கொப்பறாவுக்காக தேங்காய் ஓடுகள் முழுக்கவனத்துடன் சில்லிகளாக்கப்பட்டது. தேர்முட்டிக்கு பக்கத்தில் எழுபது வயதில் புதிதாய் ஒரு சிட்டி விளக்கு கடை - "மூன்று எடுத்தால் ஒன்று இலவசத்தோடு"  தலையெல்லாம் எண்ணையாய் கூப்பிட்டது. சுற்றி கூட்டம் அம்மியது.ஒரு வண்டில் தென்னோலை சொக்கப்பனைக்கு இரையாக காத்திருந்தது.தோரணம்,வாழை, இதர பல இத்யாதிகளும் தயாராகிக் கொண்டிருந்தன.

கோயில் பின் கிறவுண்ட் சிரமதானப்பணிகள் தம்பா தலைமையில் செவ்வனே முடிந்திருந்தது. குண்டுமணி மேற்பார்வைக்காக  விலாட்டுமாவின் கீழிருந்து இரண்டாவது கிளையில் காலை இருபக்கமுமாய் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தான். அதற்கு மேலிருந்த மூன்றாவது கிளை போன மாதம் திடீரென்று முறிந்து போய் விட்டது.அதற்கு மேலிருந்த குண்டுமணிக்கு முழங்கால் சுளுக்கு எடுபட ஒருவாரம் பிடித்தது.

சுளுக்கு போனாலும் அழுக்கு போகாதது போல குண்டுமணி தம்பாவின் டீமிலும் இல்லாமல், கிச்சாவின் டீமிலும் இல்லாமல் கடந்த சில வாரமாகவே தூக்கி எறியப்பட்டிருந்தான். குண்டுமணி அம்பயராக இல்லாமலே மேட்ச் ஆடினார்கள். தேவைப்பட்ட போது அவர்களே கலந்து பேசி அவுட் கொடுத்தார்கள். குண்டுமணி பெட் ரெஸ்டில் இருந்த சில நாட்களினுள்ளேயே தம்பாவும், கிச்சாவும் தங்களது டீம் மீதான முழு ஆதிக்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். அதன் பின்னர் கு.மணியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பெரும்பாலும் இரண்டாவது கிளையில் இருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பான். அவன் இருக்கும் பக்கம் யாரும் திரும்பிக்கூட பார்பதில்லை.

குண்டுமணிக்கு மா ரீதியாய் விழுந்த அடியிலும் பார்க்க மன ரீதியாய் விழுந்த இந்த அடியை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

நாளை மாலை தம்பா டீமுக்கும் கிச்சா டீமுக்கும் பத்துக்கு பத்து ஓவர் மேட்ச் இருந்தது. அது முடியவும் கோயில் சொக்கப்பானை எரியத் தொடங்கவும் நேரம் சரியாய் இருக்கும் அதை தொடர்ந்து கேணித்தீபம், மைதானத்தீபம் என்று பக்காவாய் நிகழ்ச்சி நிரல் பிக்ஸாகியிருந்தது.

தி கிரேட் பு.ம என்கிற புஸ்பமணியம் சிறப்பு பூசையின் பின்னரான பிரசங்கத்திற்காக தயாராகி கொண்டிருந்தார். நட்சத்திராவில் அறிமுகமாகிய பு.மவின் மகள் அபிஜிதாவுக்கு இந்த பதிவில் ஒரேயொரு சந்தர்ப்பத்தில்,  தூண்டாமணி விளக்கோடு கேணிக்கரையில் மஞ்சளும்,வெளிர் பச்சையும் கலந்த கலர் தாவணியில் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

கடந்த வருடம் விளக்கீட்டின் போது, தங்கள் வீட்டு கிணற்றுத்தண்ணீரில்தான் விளக்கு ஏற்றியதாய் வெடியன் கூறிய போது - எல்லோரும் அரைவட்ட வடிவில் இருந்து நாடியில் கைவைத்து கேட்டுக்  கொண்டிருந்தார்கள். "வேண்டுமானால் அடுத்த வருடமும் ஏற்றிக்காட்டுகிறேன் பார்" என்று கூறி முடிப்பதற்குள் ஒரு வருடம் உருளாமல் நேராகவே ஓடியிருந்தது.

முழு இருளுக்குள் விசித்திரா கையில் வைத்திருக்கும் தட்டிலுள்ள அகல் விளக்கு சிறிது சிறிதாய் பிரகாசம் கூடுகிறது, பொன்னிறத்தில் ஒரு பெண்ணாய் விசித்திரா வலக்கை பெருவிரலால் திரியை தூண்டிவிடும்போது - முழுநிலவொளி மஞ்சளா? வெள்ளையா? என்ற நீண்ட கால சந்தேகத்திற்கு விடை கிடைத்ததோடு ராகீயின் நான்குமணி நடுச்சாமக்கனவு விழித்துக்கொண்டது.

திருவிளக்கு நாள்.

மாலையாகும் போது பெரும்பாலான வீடுகளின் கேட் வாசலில் அரை வாழைக்குத்திகளுக்கு மேல் கொப்பறாவுக்குள் எண்ணெய் நிரம்பி வழிய பருத்தி திரியோடு சிரட்டை விளக்குகள் தயாராகி இருந்தன.காணிக்குள் பெரும்பாலான இடங்களில் முட்கிளுவை தடியில் துணி சுற்றி எண்ணெயில் நனைத்து பந்தங்கள் ஊன்றப்பட்டிருந்தது. வீட்டுக்கு முன்னால் அகல் விளக்குகள் எல்லாம் அடுக்கடுக்காய் வரிசை கட்டி வைக்கப்பட்டு, ஆறு மணி தாண்டி இருள் கவ்வும் போது அற்புதம் நிகழ்த்த காத்திருந்தன.

ஆயிரம் அகல் விளக்குகளுக்கும்  ஐந்நூறு வாட்ஸ் போகஸ் லைட் வெளிச்சத்துக்கும் இடையில் தொளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது விளக்கொளிகள் வித்தியாசமாய் இருக்கும். அதற்கு மேலால் விளக்கொளியை மூடி இருக்கும், முற்றாய் விலகாத இருள் ஒன்று எப்போதும் போகஸ் லைட்டுகளை பார்த்து அழகாய் சிரி்த்தபடி இருக்கும். "ஒளியை மூடும் இருளழகு"  கான்சாப்ட் அங்கே கி்டைப்பதில்லை என்பதற்காய் இருக்கலாம்.

கோயில் முன்னால் பத்தடி உயரத்தில் சொக்கப்பானை எழுந்து நின்றது. உள்ளே வாழை உயிர் கொடுக்க தயாராய் இருந்தது. சிறப்பு பூசைகள் சிறப்பு தீபங்களுடன் ஆரம்பமாகி இருந்தது.

மேட்ச் முடிய இன்னும் இரண்டு ஓவர்கள் மிச்சமிருந்தது. குண்டுமணியை கிரவுண்டில் எங்கேயுமே காணக்கிடைக்கவில்லை. யாரும் அதை பெரிதுபடுத்தவும் இல்லை. இதை ஒரு பிரக்டீஸ் மேட்ச்சாகத்தான் இரண்டு டீமும் எடுத்துக்கொண்டது. காரணம் வரும் வாரத்தில் புளியடி டீமுடன் பெரியளவிலான மேட்ச் ஒன்று பிக்சாகியிருந்தது. புளியடி டீமை இரகசியமாய் "மண்டான் டீம்" என்று ஊரில் கூப்பி்டுவார்கள். பேரைச் சொல்லும் போதே குழல் நடுக்கத்தில் குரலும்.

கடைசி ஓவரில் முதல் பந்தை வீசும் போது கிரவுண்டுக்குள் விச்சுவா மூச்சிரைக்க ஓடி வருவது தெரிந்தது. ஓடி வந்த வேகத்திலேயே
"பப்பை காணல்லை, பப்பை காணல்ல" என்று அலறியது மைதானத்தினுள் எதிரொலித்தது.

"என்னடா பப்"

"ப...ப் இல்லை கப்"
மூச்சு வாங்கிவிட்டு தெளிவாய் உளறினான்.

"புளியடி டீமிட்ட தோத்தா கொடுக்கிறதுக்கு என்டு வாங்கி வைச்சிருந்த சாம்பியன் கப்பை பெட்டிக்குள்ள காணல்ல."

அனைவரும் சம்பவ இடத்துக்கு கால் தெறிக்க ஓடினார்கள்.

விச்சுவாதான் பந்துகள், விக்கெட்கள், துடுப்புக்கள் என்று எல்லாவற்றையும் வைத்துப்பூட்டுகின்ற ஆயுதப்பெட்டியின் காவலன். ஆக மொத்ததில் அவன் சொன்னால் விடயம் உண்மையாய்த்தான் இருக்கும்.

இருந்தாலும் அவன் கழுத்து நூலில் பெட்டியின் திறப்பு தொங்கும் போது பெட்டிக்குள் இருந்த கப் அதுவும் புது கப் எப்படி காணாமல் போகும்.

தம்பா,கிச்சாவையும்
கிச்சா,தம்பாவையும்
சந்தேக கண்ணோடு ஒரு மில்லி செக்கன் பார்த்து்க் கொண்டார்கள்.

மண்டான் டீமை நினைக்க இருவருக்கும் குலை நடுங்கியது.உடனடியாய் கப் வாங்கவும் முடியாது. கப் இல்லை என்று மேட்ச்சை நிறுத்தவும் முடியாது. வென்றால் பிரச்சினை இல்லை. தோற்று விட்டால் ....

"எப்படி காணமல் போகும்"  தம்பா கையை முறுக்கி, முணுமுணுக்க

விச்சுவா தயங்கித்தயங்கி பெட்டிக்குளிருந்து எடுத்து,

புழுக்கொடியலில் சுத்தியிருந்த அந்த பேப்பரை விரித்துக்காட்டினான்.
அதில்
                           "கப் வேண்டுமா?
                           நான் வேண்டுமா?"
                                                       - குண்டுமணி

அதனர்த்தம் உடனடியாகவே தம்பாவுக்கும், கிச்சாவுக்கும் புரிந்தது. குண்டுமணியை தேடிப்பிடிப்பது சுலபம். கப்பை தேடிப்பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் கர்வம் தலைக்கேறிய நிலையில் இருந்த தம்பாவும் கிச்சாவும் கப்பை தேடிப்பிடிப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள். அவரவரின் டீமோடு தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.

ஆறுமணி டாணடித்தது...
மின்சாரம் இல்லாமல் போக வேண்டும் என்று விரும்பி வேண்டிக்கொள்கின்ற அந்த கணப்பொழுதுகள் ஆரம்பமாகியிருந்தது. எல்லா வீடுகளிலும் சின்ன சின்ன சுடர்கள் மின்னத் தொடங்கியிருந்தது.

அனைவரும் பிரிந்து ஒவ்வொரு வீடாய் தட்டி கு.மணி கப்போடு வந்தானா என்று விசாரிக்க தொடங்கினார்கள்.

"ஆண்டாள் வீட்டில் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டுக்கொண்டிருந்தாள்."

"வெடியன் வீட்டில் சொன்னது போலவே தண்ணீரில் விளக்கெரிந்தது."

"குண்டுமணியை மதியம் கோயிலுக்கு அண்மையில் வைத்து ஒரு பெரிய பையோடு கண்டதாய்". கேணிக்கரையில் அபிஜிதா தூண்டாமணி விளக்கோடு ராகீக்கு  ஒரு சிறிய துப்புக்கொடுத்தாள்.

இருந்தாலும் ராகீக்கு கொடுத்த அந்த துப்பு, விசித்திரா என்கிற அழகிய தப்பால் வீணாகிப்போனது.

விசித்திரா கேணிப்படிகளில் சிட்டி விளக்கேற்றிக்கொண்டிருந்தாள். காலைக்கனவுகள் மாலையில் நனவாகலாம்.

ராகீ கிடைத்த துப்பையும் மறந்து அப்படியே ஒரு படியில் இருந்து விட்டான். காதல் கண்ணை மறைத்து எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தது.

வீதிகள், வீடுகள் என்று விளக்கொளியில் சல்லடை போடப்பட்டது. கப் மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை.

மழை வரும் போல இருந்தது. முழுநிலவை மேகம் பாதியாய் மறைத்தது.

குண்டுமணி கோயிலுக்கு முன்னால் இருந்த பிரசங்க கூட்டத்தில் முன்வரிசையில் இருந்தான்.

சொக்கபானை கொழுந்துவிட்டு எரியத்தொடங்கவும், பு.ம தொண்டையை செருமிக்கொண்டு பிரசங்கத்தை ஆரம்பித்தார். முன்பொரு காலத்தில் பிரம்மா பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற கேள்வி வந்தது. அவர்கள் சிவனிடம் போக சிவன் ஒரு ஜோதிப்பிழம்பாக தோன்றி இதன் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் தேடிப்பிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்ற,

தம்பா அன்னப்பறவை போல ஒவ்வொரு மரம் மரமாய் பறந்து தேடினான்.
கிச்சா வராகமாய் மண்ணை எல்லாம் கிண்டி தேடினான்.
எங்கேயுமே கப் கிடைக்கவில்லை.

தம்பாவும், கிச்சாவும் தோல்விக்களைப்போடு திரும்ப
சொக்காப்பானை எரிந்து முடிந்தது.
வாழை துண்டானது.

தம்பா சிரித்தபடியே விழுந்து துண்டாகிய வாழையை இழுத்துக்கொண்டு புறப்பட்டான்.

                   ××××××××××××××

இந்த இடத்தில் முற்றும் போட வேண்டும்.

ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தப்பாவம் எனக்கும் வேண்டாம்.

ஆகவே முடிவுரைக்கு போகலாம்.

வெடியன் வீட்டில் இந்த தடவையும் கிணற்றுத்தண்ணீரில் விளக்கெரிந்ததற்கான விளக்கம் - இன்னும் ஓரிரு மாதங்களில் "கிணற்றுத்தண்ணீரில் ஆயில் கலந்திருக்கிறதா?" என்ற பாரிய பிரச்சினையோடு ஆரம்பித்து தீர்வு கோரி போராட்டம் வரை நடக்கும். அடுத்த வருடம் அனைவர் வீட்டிலும் தண்ணீரில் விளக்கெரியலாம்.

குண்டுமணி இழுத்துக்கொண்டு போன வாழைக்குள் ஆங்காங்கே சில எரிகாயங்களுடன் கப் இருந்தது. அந்தக்கப் மறுநாள் புளியடி டீமுக்கு அரைவிலையில் இரகசியமாய் குண்டுமணியால் விற்கபடும்.

'குண்டுமணியே பரம்பொருள்' என்று தம்பாவும்,கிச்சாவும் ஏற்றுக்கொண்டு, புளியடி டீமுடனான மேட்சுக்கு முதல் நாள் போய் காலில் விழுவார்கள். அவர்களுக்கு குண்டுமணியிடமிருந்து எந்த கப்பும் கிடைக்காது. இருந்தாலும் அனைவரும் ஒன்றாகி மேட்சை வின் பண்ணுவார்கள். அதன் போது கர்மா பூமராங் ஆகி, புளியடி டீம் எரிகாயங்களுடன் கொடுக்கின்ற அந்த கப் "நெருப்புக்கிண்ணம்" என்று  கால காலத்துக்கும் அழைக்கப்படும்.

(ஆக மொத்ததில் மக்களே, இது "மிடில்விக்கெட்" என்ற முந்திய பதிவுக்கு ஒரு spin off story" - அதன் லிங் கீழே கொடுக்க முடியாது. வேண்டுமானால் தேடி வாசிக்கவும்.)

               ###############













"ஹாவ் பன்
ஹாப்பீ கார்த்திகை விளக்கீடு"
அன்புடன் அற்பபிறவி

Saturday, October 21, 2017

நட்சத்திரா

இந்த மாத தொட்டுக்க ஊறுகாயாய் வந்திருக்க வேண்டிய பதிவு,கடைசியில் அனுமார் வாலாகி விட வழமையைப்போல் ஒரு மங்கையின் நாமம் தேடிப்பிடித்து தனி டைட்டிலோடு வருகிறது.ஓ/எல்லின் இங். லிட்ரேச்சரில் வில்லியம் வேட்ஸ்வோர்த்தின் "she dewlt among the untrodden ways?" ல் Lucy அறிமுகமாயிருந்த நேரமது. படித்த இருபது பொயத்தினுள்ளும் அது மட்டும் ஆல் டைம் பேவரிட்டாக இன்று வரை இருக்கிறது. "WHO IS LUCY ?" என்ற கேள்விக்கு முந்நூறு சொல்லுக்கு குறையாமல் அப்ரிசியேட் பண்ணி தொலைத்திருக்கிறேன். She may be the nature,forests,mossy stones,trees,doves etc,etc என்று கொண்டு வந்து கடைசியில் மே பி அது வி.வேட்ஸ்வேர்த்தின் ஒரு தலை காதலியாக இருக்கலாம், (செட்டாகாததால்) அன்புத்தங்கையாய் இருக்கலாம் என்பது வரைக்கும்,சேரின் நோட்ஸை அப்படியே காப்பி,டீ அடித்து எழுதியிருக்கிறேன்.

ஆனால் யாரென்றே தெரியாத லூசியின் மிஸ்டரி பிடித்து போய் விட்டது. எங்கே இருந்து பார்த்தாலும் மோனலிசா சிரிப்பது போல எதை ஒப்பிட்டாலும் லூசி பொருந்தியது. கையில் மருதாணி வைத்தவள், காதில் ஜிமிக்கி போட்டவள், பின்னலில் நித்தியகல்யாணி செருகியவள். ஆலியா,ஆகாயா,அபூர்வா,சப்தஸ்வரா, ஏன் இந்த நட்சத்திரா எல்லாமே லூசியின் நிஜ உலக வேர்சன்களாய் படுகின்றது.

"Fair as a star, when only one
Is shining in the sky."

இரவில் உழுது விட்ட பரந்த வயலுக்குள் மல்லாக்காய் கிடந்து வானம் பார்ப்பதிலும்
ஒராயன்,ஸ்கோர்ர்பியன் தாண்டி மம்மத், டைனோர்களையெல்லாம் உடுத்தொகுதிக்குள் உருவாக்குவதிலும் வருகின்ற சந்தோசம் இரவு பன்னிரண்டு மணிக்கு கனவில் வரும் கவிதை போன்றது.


வானம் ஒரு புள்ளி வைத்த சாணித்தரை இஷ்டத்துக்கு கோடு இழுத்து கோலம் போட்டுக்கொள்ளலாம். தண்ணீர் எல்லாம் அதுவாகவே தெளித்துக்கொள்ளும். தேவைப்பட்டால் பூப்பூவாய் வெள்ளியெல்லாம் சிரித்துக்கொள்ளும்.

இரவு நேரங்களில்  குலு மாடுகள் கூட்டமாய் படுத்துக்கிடந்து அசை போடுவதற்கு கண்டுபிடித்த இடங்களில் ஒன்று  வயல்வெளி. இரவு ஏழிலிருந்து பத்து வரை நேரமெல்லாம் வயலுக்குள் உரமாகியது.குழுவின் ஒட்டு மொத்தமான கர்ணகொடூரக்கதைகளில் அடுத்த விதைப்புக்கு அந்த இடத்தில் மட்டும் நெல்லு முளைக்காத அளவுக்கு ஒரு நெகட்டிவ் எனர்ஜி உருவாகியிருந்தது.

வரம்பில் தலை வைத்து வானம் பார்க்கும் போது ஒரு வசதி - கிட்டத்தட்ட ஈசிசேரில் இருந்து டீவி பார்ப்பது போல். உச்சியிலிருந்து சர்ரென்று தென்மேற்கு திசையில் ஒரு வெள்ளி - எரிந்து - விழுந்து - - செத்தது. குடும்ப பிரச்சினையில் தற்கொலையாய் இருக்கலாம், ஏன் கொலையாய் கூட இருக்கலாம். வெள்ளி எரிந்து விழுவதை பார்க்ககூடாது, தவறிப்பார்த்தால் துர்சம்பவம் நடக்கும் என்பது வீட்டு நம்பிக்கையாய் இருக்க, வெள்ளி எரிந்து விழும்போது மூன்று பால்மரங்களை நினைத்துக்கொண்டால் எண்ணிய காரியம் நடக்கும் என்பது வரம்பு நம்பிக்கையாய் இருந்தது.அலரி,பலா,எருக்கலை ஏன் முட்கள்ளியை கூட அடிக்கடி இப்போது நினைத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

பார்த்துக்கொண்டிருக்கும் போதே, இன்னுமொரு வெள்ளி கிழக்காலே விழுந்து தொலைக்க..... "Make A Wish"....

"நாளைக்கு தைரியமாய் போய் அவளிடம் கேட்டுத் தொலைக்க வேண்டும்"
"ஆம் என்று வாய் திறக்கவெல்லாம் வேண்டாம். ம் என்று தலையாட்டினாலே போதும்."

தேமா,பலா, .......தென்னை 
தென்னை பால்மரமா என்ன? திடீரென்று மனசு குழம்பியது.பால்மரம்தான். தென்னங்கள்ளு பால்தானே.வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் மனசு சமாதானமானது.

                       ××××××××××××

நட்சத்திரங்கள் வாழ்க்கையில் "டக்கோ டிக்கோ டொஸ்" விளையாடுவதால் திருமணத்திற்கு முன்பாக ஒரு பிரபல ஜோசியரைக்கொண்டு பையன் நட்சத்திரத்தையும், பெண்ணின் நட்சத்திரத்தையும் ஒன்றாய் வைத்து இன்டர்வியூ எடுப்பார்கள்.

"ஸ்வாதி உனக்கு மகத்தை பிடித்திருக்கிறதா,"
"இறுதி வரை அவன் இன்பத்திலும் துன்பத்திலும் சேர்ந்திருப்பாயா?"
"ஆமென்."

"மகம் உனக்கு ஸ்வாதியை பிடித்திருக்கிறதா?"
"இறுதி வரை ?! அவளை....."
"மாட்டேன்" என்கிறாயா?
மகம் வாயைச்சுளித்து விட்டால் அவ்வளவுதான்....புஸ்ஸென்றாகிவிடும்

ஸ்வவேதிக்கு டாட்டா காட்டி விட்டு வேறு நட்சத்திரம், வேறு வாழ்க்கை.

மகத்திற்கு திருவாதிரை மீதோ, அல்லது ஆயிலியம் மீதோ கண்ணென்று கதைத்துக்கொள்வார்கள்.

பிரபஞ்சத்தில் நட்சத்திர பொருத்தமெதுவுமில்லாமல் கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜீவன் சந்திரன். எப்படி சாத்தியமானது என்று விக்கிபீடியாவில் தேடிப்பார்த்தால் கட்டிக்கொண்டது - இருபத்தேழு நட்சத்திரங்களையும்.

இருபத்தேழு இருந்தாலும் சந்திரனுக்கு ரோகிணி மீது மட்டும் ஒரு அதி உன்னதக்காதல்.இருபத்தாறுக்கும் கல்யாண் ஜீவல்லர்ஸில் சாதாரண நெக்லெஸ் வாங்கிவிட்டு ரோகிணிக்கு மட்டும் ஜொஸ் அலுக்காஸில் டயமன்ட் ஒட்டியாணம் வாங்குமளவுக்கு - மனிதர் உணர்ந்து கொள்ளமுடியாத நிலாக்காதல்.

ஒரு நட்சத்திரம் பொருத்தமில்லாவிட்டாலே புரட்டி போடும் வாழ்க்கையில் இருபத்தாறும் சேர்ந்து செய்த சம்பவத்தில் கிடு,கிடு என்று ஒவ்வொரு பிறையாக தேயத்தொடங்கி விட, விளைவு மோசமாகி விட்டது என்பதை உணர்ந்த சந்திரன் கடைசியில் ஒரு மியூட்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில் ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்தின் வீட்டிற்கு போவது என்று முடிவு செய்து கொண்டது.

சந்திரன் போகும் வீடு அன்றைய நாளின் நட்சத்திரமாகியது. அந்த நாளில் பிறந்தவர்களுக்கு அதுவே ஜனன நட்சத்திரமும் ஆகியது. ஆக மொத்ததில் எவன் வீட்டோ குடும்ப சண்டை என் தலையில் திருவோண நட்சத்திரம் எழுதி வைத்து விட்டது போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேட்டால் திருவோணம் ஒரு கோணம் ஆளும் என்கிறார்கள். அது கூர்ங்கோணமா இல்லை அல்லது பின்வளைகோணமா என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது.

                      ××××××××××××

பிறந்த நட்சத்திரத்தையே பெயராக வைத்து விடுகின்ற ஒரு பாரம்பரியத்தில் நிறைய ரோகிணிகளும்,உத்தராக்களும்,ஸ்வாதிக்களும், உலாவித் திரிகின்றன.

கூடப்படித்த ஒருத்தி அபிஜிதா என்று பெயர் வைத்திருந்தாள்,வகுப்பில் எல்லாரும் அவளை "அதிஸ்டக்காரி அபிஜிதா" என்றுதான் கூப்பிடுவார்கள். நாற்பது MCQ கேள்வியுள்ள பேப்பரை கொடுத்து கண்ணை கட்டி விட்டு கீறச்சொன்னால் முப்பதுக்கு சரியான விடையையும் மீதி பத்துக்கும் சரியான விடைக்கு பக்கத்து விடைகளையும் கீறியிருப்பாள்.

ஒரு தடவை  பெயருக்கு விளக்கம் கேட்ட போது வெடிகுண்டு தயாரிக்க தேவையான அளவுக்கு விளக்கம் சொன்னாள்.

"உண்மையில் நட்சத்திரங்களின் லிஸ்டில் 28 நட்சத்திரங்கள் இருந்ததாம். புளூட்டோவை சூரியக்குடும்பம் தலைமுழுகி தள்ளி வைத்தது போல இருபத்தேழின் சதியில் தூக்கியெறியப்பட்ட ஒரு நட்சத்திரம்தான் அபிஜித், உத்தரட்டாதியின் இறுதி நான்கு பங்கும் திருவோணத்தின் முதல் பதினைந்து பங்கும்தான் இந்த அபிஜித்.,என் அப்பாக்கு இந்த அஸ்ட்ரோலஜி எல்லாம் அத்துப்படிங்கிறதால நான் பிறந்தது இந்த நட்சத்திரத்திலதானம்ங்கிறதை சரியா கணிச்சு இந்த பேரை வைச்சார்"

"உன் அப்பா பேரு"

"புஸ்ப மணியம்"

இரண்டு மாதத்திற்கு பிறகு, இன்று, அதே அதிஷ்டக்காரி அபிஜிதாவிடம் மேசையில் எதிரும் புதிருமாய் இருந்த போது இன்னுமொரு கேள்வியையும் கேட்டுவைக்க வேண்டியிருந்தது.

உங்க அப்பா மிஸ்டர் பு.ம ..... புஸ்பமணியம்,பெரிய ஜோசியர்தானே?
கொப்பியிலிருந்து நிமிர்ந்து பார்க்கமலே 'ம்' கொட்டினாள்.
"அவரிட்ட ஒரு விஷயம் கேட்டுச் சொல்லுவியா?"
'ம்'
இந்த அபிஜித் நட்சத்திரத்துக்கும் திருவோண நட்சத்திரத்துக்கும் திருமணப்பொருத்தம் இருக்கான்னு?

                ××××××××××××

பூமியில் மனிதக்காதல்களுக்கு முன்பாக வானத்தில் நட்சத்திரக்காதல்கள் தொடங்கிவிடுகின்றது, மனிதக்கண்களுக்கு முன்பாக நட்சத்திரக்கண்கள் பார்க்கத்தொடங்கிவிடுகின்றது.

இதற்கு மேலுள்ள பந்தியில் அபிஜித்தோடு பொருந்துமா என்று கேட்ட திருவோணமும்,அந்த பந்தியோடு சம்பந்தமேயில்லாத அஸ்வினியுமாக பால்வீதியில் உள்ள காஃபி சொப்பில்  நூற்றி எண்பது டிகிரியில் எதிரும் புதிருமாய் இருந்து மில்க் சேக்கோ, காப்ச்சீனோவோ ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருக்கிறன. 

திருவோணத்தின் கருவிழிக்குள் அஸ்வினியும் அஸ்வினியின் கண்மணிக்குள் திருவோணமும் தெரிகிறது. 

ஆர்டர் பண்ணியது இன்னும் வரவில்லை.

ஒன்றை ஒன்று பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க!

காலக்ஸி விதிகளின் படி - நட்சத்திரங்களின் முறைப்படி திருவோணம் அஸ்வினியிடம் புறப்போஸ் பண்ணுகிறது. 

"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது."
இருவரும்  ஒரு தடவை அருந்ததியின் வீட்டுக்கு போய் வரலாமா?"

                     ×××××××××××

அபிஜிதா
கேட்டுச்சொல்கிறேன் என்றாள். நிமிர்ந்து பார்க்கவில்லை.
பொருத்தமில்லாவிட்டால் கழட்டி விட்டு விடுவாயா? என்றாள்.

இல்லை.
பெயரையும், நட்சத்திரத்தையும் மாற்றிக்கொள்ளலாம் என்று மனசுக்குள் நினைத்துக்கொள்ள.....

மேலே பால் வீதியில் திருவோணத்திற்கு அஸ்வினி தலையாட்டி சம்மதம் தெரிவித்தது

இந்த இடத்தில் நிறுத்தி, வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்டு
தொலைக்கிறது

☆."Make A Wish" பகுதியில் நினைத்துக்கொண்டது அபிஜிதாவின் சம்மதத்துடன் நடந்தேறியது என்றால் வெள்ளி எரிந்து விழும் போது ஏதாவதொன்றை மனதில் நினைத்துக்கொண்டால், அது நடக்கும்.

☆.பூமியில் அபிஜித்துக்கும் திருவோணத்திற்கும் பொருந்தும் போது வானத்தில் அஸ்வினிக்கும் திருவோணத்திற்கும் பொருத்தமாகின்றது என்றால் நட்சத்திரங்கள் தொடர்பான கணக்குகள்,கட்டங்கள்,ஜோசியம் எல்லாமே பொய்யென்றாகி விடும்.

விக்கிரமாதித்தா! உனக்கு மூன்று ஆப்சன்கள் தருகிறேன். பொருத்தமானதை தெரிவு செய்யாவிட்டால் டாஷ்...டாஷ்..டாஷ்  உனக்கே தெரியும். 

01.இந்த நட்சத்திர கருமங்கள் எல்லாமே பொய். அபிஜிதா அவனுடனேயே சந்தோசமாக வாழ்வாள்

02.இல்லை இதெல்லாம் உண்மை, அபிஜிதாவிற்கு அவனுடன் பிரேக் அப் ஆகும். அவனுக்கு பின்னர் அஸ்வினி நட்சத்திரக்காரி ஒருத்தியுடன்தான் திருமணம் நடக்கும்

03.வேறு 

விக்கிரமாதித்தன் வேறுக்கு கீழ் தயக்கமே இல்லாமல் கோடிழுக்கிறான். வேதாளம் காரணம் கேட்கிறது.

முழுக்கதையையும் ஓட்டை இல்லாத வகையில் அடைக்க கூடிய அந்த பதில் புஸ்பமணியத்தின் வாய் வழியாய் கிடைக்கிறது.

                    ×××××××××

மிஸ்டர் பு.ம உதட்டை சுழித்துக் கொண்டே திருவோண நட்சத்திரம் சம்பந்தமாய் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். 
இடையில் டீ கொண்டு வந்த மனுசியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

"ஏங்க"
"ம்"
"நீங்க சொன்ன நேரத்திற்கு டாக்டர் சிசேரியன் பண்ணியிருக்காட்டி நம்ம பொண்ணு என்ன நட்சத்திரத்தில பிறந்திருப்பா?"

"தெளிவாய் சொல்ல முடியாது... அனேகமாய்

அஸ்வினியாய்தான்


இருக்கும்"


             ############








#அற்பபிறவி#

Sunday, July 30, 2017

Survivors

முற்குறிப்பு : 13 reasons why? மற்றும் Looking for Alaska ஐ வாசிக்காதவர்களுக்கு 100% Spoiler Alert

சந்திரமதி Vs ஹன்னா பேக்கர்

மஞ்சிமா மோகனை "அவளும் நானும்..." பாட்டில் சைடு வாக்கில் பார்க்கும் போதெல்லாம் ஏஎல்லில் படித்த சந்திரமதியின் முகம், கொழுக், மொழுக் கன்னத்தோடு ஞாபகம் வரும்.  இன்று வரை The best survivor of the world என்று யாராவது கேட்டால் கண்ணுக்குள் வந்து நிற்பது சந்திரமதிதான். குப்பி விளக்கு கொலைகளில் அத்வைதாவையும் கெமிஸ்ரியில் ஆகாயாவையும் சந்திரமதியிடமிருந்து திருடித்தான் உருவாக்ககூடியதாயிருந்தது.

13 reasons why? ஐ வாசிக்கும் போது கிட்டத்தட்ட Hannah Baker ல் சந்திரமதியின் சாயல் அடித்தது. ஆனால் கடைசி கசேட்டில் ஹன்னா சுத்தமாய் சொதப்பியது தெரிந்த பின் நோ,"சீ இஸ் நொட் ஈக்வல் டூ சந்திரமதி" என்பது புரிந்தது. -அது முழுக்க முழுக்க Jay Asher ன் தப்பு.

// Like driving along a bumpy road and losing control of the steering wheel, tossing you—just a tad—off the road. The wheels kick up some dirt, but you’re able to pull it back. Yet no matter how tightly you grip the wheel, no matter how hard you try to drive straight, something keeps jerking you to the side. You have so little control over anything anymore. And at some point, the struggle becomes too much—too tiring—and you consider letting go. Allowing tragedy…or whatever…to happen.//

என்று செய்த தப்பையும்  ஹன்னா பேக்கரையும் நியாயப்படுத்தி இருப்பார். ஆனால் இதுவே சந்திரமதியாக இருந்தால் கார் சில்லே கழன்று தனியாக ஓடினாலும் கடைசி வரை கை விட்டிருக்கமாட்டாள்.

சந்திரமதியின் வாழ்க்கையிலும் நிறைய கோர்ட்னிகளும்,மார்க்குகளும் ஏன் கிளே ஜென்சன்கள் கூட இருந்திருக்கலாம் ஆனால் 1 reason why? என்று ஒன்று இருந்திருக்காது என்று நினைக்கிறேன். கை விடுவதற்குதான் ஆயிரம் காரணம் தேவைப்படுகிறது.

தேவாரம் முடிந்து மண்டபத்திற்கு வெளியில் போகும்போது குட்டி முசோலினிகளும் குண்டு ஹிட்லர்களும் தலைவெட்டு பிழை, சூ போடவில்லை சாக்ஸ் தோய்க்கவில்லை என்று ஆண்களின் வரிசைக்குள் ஊடுருவி வெளியில் பிடித்து விடும்போது பெண்கள் வரிசைக்குள் அடிக்கடி தெரிவு செய்யப்பட்டு வெளியில் நிற்கின்ற ஒரு ஆளாக  ஒன்பதாம் ஆண்டிலிருந்து சந்திரமதியை அவதானித்திருக்கிறேன். அது பெரும்பாலும் நகத்திற்கு நெயில் பாலிஷ் போட்டதற்காகவோ, காதில் ஜிமிக்கி போட்டதற்காகவோ, சீருடை முழங்காலுக்கு கீழ் இல்லாததற்காகவோ, இடுப்பு பட்டியை இறுக்கி தைத்ததற்காயோ இருக்கலாம். ஆனால் இது எதுவும் இல்லாமல் சந்திரமதியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

ஏ எல்லின் கடைசிக்காலங்களில் தனக்கான அரி.சந்திரனையும் தேடிக்கண்டு பிடித்திருந்தாள்.சந்திரமதியே சந்திரனை தேடிப்போய் புறப்போஸ் பண்ணியதாய் பேசிக்கொணாடார்கள், அதுவும் எட்டடி தூரத்தில் போய்கொண்டிருந்தவனை கூப்பிட்டு சந்திரன் "ஜ லவ் யூ" என்று இரண்டு ஏக்கர் ஸ்கூலுக்கும் கேட்க கூடினாற் போல் கத்தி புறப்போஸ் பண்ணியாதாய் சொன்னார்கள்.

என்ன ஒரே ஒரு வித்தியாசம் நிறைய விஸ்வாமித்திரர்கள் அரி.சந்திரனை விட்டு விட்டு சந்திரமதியை பொய் சொல்ல வைக்கிறேன் பார் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். கடைசி காலம் வரை அவர்களால் ஒரு விரலின் நெயில் பாலிசைக் கூட அழிக்க முடியவில்லை.

ஏஎல் முடிந்து வெளியில் வந்து சிறிது காலத்தில் சந்திரன் கழன்று போய் விட்டதாய் கேள்விப்பட்டேன். வாழ்க்கை நிறையவே சந்திரமதியை அடித்து போடுவதாய் பட்டது.

சேர்வைவிங் என்பது ஒரு மந்திரம்,
அதிகாலையில் எழுந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று சூரியஉதயம் வரை சொல்லிபழகிக்கொள்ளத் தேவையில்லாத ஒரு மந்திரம்.எல்லாரும் அதை பழகிக்கொண்டால் சமநிலை குழம்பிவிடும்.டார்வினின் சேர்வைவல் ஒவ் தி பிட்டஸ்டில் ஏதோ ஒரு வகையில் எல்லாருமே சேர்வைவர்கள்தான், ஆனால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் விடும் போது ஹன்னா பேக்கரையும் அதையும் தாண்டி எழுந்து போகும் போது சந்திரமதியையும் பார்க்கலாம்.

அதன் பின் இந்த பதிவின் முடிவு வரை கிட்டத்தட்ட ஒரு மூன்று வருடத்திற்கு சந்திரமதி தொலைந்து போய் விட்டாள்.

ஹன்னா பேக்கர் Vs அலஸ்கா

இரண்டுமே பிக்சன்.இரண்டு பேருமே கடைசியில் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு இறந்து போய் விடுகிறார்கள். ஆனால் ஹன்னாவா? அலஸ்காவா? பெஸ்ட் என்று கேட்டால் அலஸ்காதான். காரணம் அது John Green ன் கதை. Looking For Alaska, Paper Towns ,Abundances Of Katherines என்று கிறீனின் ஒவ்வொரு கதையிலும் அலஸ்கா ரகத்திலுள்ள ஒரு வியார்ட் கரக்டர் இருக்கும்.

அலஸ்கா ஒரு சேர்வைவரா இல்லை லூஸரா என்று கேட்டால் அது ஆளாளுக்கேற்ப மாறுபடும். நீங்கள் ஹன்னா பேக்கரின் விசிறியா அப்படியென்றால் அலஸ்காவை நிச்சயமாய் லூஸருக்குள் சேர்த்து விடுவீர்கள். சந்திரமதியின் விசிறியென்றால் மாறி சொல்வீர்கள்.காரணம் அலஸ்காவின் மரணம் ஒரு மிஸ்டரி."The truth is what you believe"
அது விபத்தா அல்லது தற்கொலையா என்பது வாசகர்களின் முடிவுக்கு விட்டு கடைசியில்,

"Sorry Readers!
I KILLED HER"

என்று எழுதுகின்ற ஒரு Writer- John Green.

"YOU ALL SMOKE TO ENJOY IT
I SMOKE TO DIE "

என்று ஒரு இடத்தில் அலஸ்கா சொல்லும் போது ஹன்னாவின் விசிறிகள் எல்லாம் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து நின்று விசிலடித்து see, she killed herself, it's a suicide என்பார்கள்.

ஆனால் இன்னுமோர் இடத்தில் "Luck is for Losers " என்று அலஸ்காவே சொல்லியியிருக்கும். சாவைப்பற்றி நிறைய இடத்தில் அலஸ்கா கதைத்திருந்தாலும் எந்த இடத்திலும் தான் ஒரு லூஸர் என்பதை ஏற்றுக்கொள்ளாததால், she is a beautiful and mystery survivor என்று சொல்லி ஒரு சந்திரமதியின் விசிறியாக நான் எழுந்துநின்று கூவடிப்பேன்.

அலஸ்காவைப்பற்றியும் ஜோன் கிறீன் பற்றியும் எழுதுவதற்கு இன்னும் நிறைய இருப்பதால் இப்போதைக்கு இந்த இடத்தில் டொட் போட்டு முடிவுரைக்கு வரலாம்.

சந்திரமதியைப்போல் நிறைய சேர்வைவர்களையும், லூஸர்ஸையும் நிஜ வாழ்க்கையில்("இருவரில்" வருகின்ற நாகம்மா மற்றும் ஆனந்தனண்ணை கூட இந்த கேட்டகரிக்குள்தான்) சந்திக்க நேரிடும்.

ஹன்னாவிற்கு எப்படி ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் கிளேயோடு கதைக்க சந்தர்ப்பம் கிடைத்ததோ அதே போல எனக்கும் சந்திரமதியோடு கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

"உனக்கு இந்த பெயர் வைக்க காரணம் என்ன?"
" அப்பா, அம்மாக்கிட்ட நிறைய பொய் சொல்லுவார்"
________________

சந்திரமதி தொலைந்து மூன்று வருடங்களுக்கு பிறகு...

இரண்டு நாட்களுக்கு முதல் Kfc ல் மெனுக்கார்ட்டை பார்த்து ஓர்டர் பண்ணும் போது செத்த கோழியெல்லாம் ஆவியாய் திரிந்தால் என்றொரு  கற்பனையோடு சமையல் பகுதிக்குள் பார்த்த போது "அவளும் நானும்" மஞ்சிமா மோகன் வெள்ளைத்தொப்பி, வெள்ளை ஏப்ரனோடு சிக்கனை பார்பிக்யூவில் புரட்டுவது தெரிந்தது.

கொழுக்,மொழுக் கன்னம் வத்திப்போயிருந்தது.
அதே ஜிமிக்கி
அதே பார்வை
அதே நெயில் பாலிஷ்
அதே இடுப்பை ஒட்டிய சட்டை
அதே சந்திரமதி...






#அற்பபிறவி#

Wednesday, June 28, 2017

தொட்டுக்க ஊறுகா - 01

இரண்டு மாதமாய் இறந்து போயிருந்த நான்+நீ யின் கல்லறையை பிளந்து பாடியை பெட்டியோடு நந்தா பர்வதத்திற்கு கொண்டு போய் லாஸரஸ் பிட்டினுள் மூன்று தரம் மொங்கி எடுத்து உயிர்தெழுப்பி இருக்கிறேன். எதிர்காலத்தில் நான் இறந்து போகாமல் பார்த்துக்கொள்வதற்கு நீ பொறுப்பு.

இதுவரை தமிழ் எழுத்துலகம் காணாத புது முயற்சி.(த்தூ)
இனி வருங்காலத்தில் ஒரு மாதத்தில் குறைந்தது இரண்டு ஊறுகாய் போஸ்டுக்களாவது வரும் என்று எதிர்பார்க்கலாம். அது பெரும்பாலும் அந்த மாதத்தில் நடந்த ஊறுகாய் சம்பவங்களை உள்ளடக்கியதாய் இருக்கும்.அதைத்தவிர  ஊறுகாய்க்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இருக்குமா? என்றால் அடுத்து வரக்கூடிய பந்தியை தவிர வேறு எதுவும் கிடையாது.

ஊறுகாய் போத்தல் காலியாகி நான்கு நாளாகியிருந்தது. ஊறுகாய் என்பதை ஒருவராலும் ஊறாமல் சொல்ல முடியாது. பழஞ்சோறோ, வெறுஞ்சோறோ  ஊறுகாயை போட்டு குழைத்து எடுத்து தின்னும் போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் தெரியும். அன்னதானங்களில் பெயருக்குத்தான் ஊறுகாய் போடுவார்கள். ஊறுகாய் என்று தூக்கிப்பார்த்தால் அது உரிக்காத பூசணிக்காய் தோலாயிருக்கும். அதனாலோ என்னவோ பலருக்கும் அன்னதான ஊறுகாய்களின் மேல் ஒரு மதிப்பு கிடையாது. சரி வீட்டு ஊறூகாய்தான் கெத்து என்றாலும் அங்கேயும்  ஒரு பிரச்சினை இளிக்கும், எவ்வளவுதான் ஊறுகாயை கொட்டிக்கொட்டி குழைத்தாலும் ஒவ்வொரு வாய்க்கும் ஊறுகாய் வராது, பெரும்பாலும் வெறும்சோறுதான் வாய்க்குள் வரும்.இல்லாவிட்டால் எங்காவது ஒன்று அல்லது இரண்டு வாய்க்குள் முழு ஊறுகாயும் சேர்ந்து வரும்.ஊறுகாய் போத்தல் காலியாகி இன்றோடு ஆறாவது நாள். நாளைக்கு தின்பதற்கு ஊறுகாய் இல்லையே என்ற கவலையில்  கதிரையில் உறங்கிப்போய் விட ஊறுகாய் தேவதை கனவில் வருகிறது. ஒரு வரம் தருவதாய் சொல்கிறது. இரண்டு ஒப்ஷனும் தருகிறது.
01.அள்ள அள்ளக்குறையாத கண்ணாடியிலான ஊறூகாய் போத்தல் - உடையாமல் பாவிக்க வேண்டும்.
02.ஊறுகாயும் கிடையாது போத்தலும் கிடையாது, ஊறுகாய் சாப்பிடுவது எப்படி! என்ற ரகசியத்தை மட்டும் காட்டித்தருவதாக சொல்கிறது.
ஒன்றா? இரண்டா? என்று மனதுக்குள் ஒரு குழப்பம். இரண்டையும் கேட்கலாமா?  பேராசைக்கார ஊறுகாய்க்கொட்டியே! என்று விட்டு குளத்துக்குள் மூழ்கி விட்டால் வேண்டாம். ஊறுகாயும் போத்தலும் எப்போதும் முதலமைச்சரும் கூட்டமைப்பும் போல கைக்குள்ளால் நழுவுவது தெரியாமல் நழுவி இதுவரைக்கும். எத்தனை வீடுகள் எத்தனை போத்தல்கள் நாசாமாகியிருக்கிறது, ஒப்ஷனே வேண்டாம் இரண்டவதையே தா! என்று தேவதை முகம் பார்க்க... சிரிக்கிறது...பேராசைப்படாமல் இருந்ததினால் உனக்கு இரண்டையும் தருகிறேன் எனக்கூறி வலது கையில் அட்சய ஊறுகாய் போத்தலையும் இடது காதில் ரகசியத்தையும் சொல்லிவிட்டு செல்கிறது. கனவு கலைகிறது. கையில் நிஜமாகவே ஒரு போத்தல். அந்த ரகசியமும் தெளிவாய் ஞாபகத்தில் இருக்கிறது.
அந்த ர...க...சி...ய...ம் தான்.
தொட்டுக்க ஊறுகாய.

                        ××××××××××××

பலாப்பழ சீசனின் கடைசிப்பகுதியில் ஆனி மாதம் தத்தளித்துக் கொண்டிருக்க, வாடிக்கையாய் மரத்தோடு பழம் வாங்குபவன் வரவில்லை. புதிதாய் வந்தவன் காய் சின்னனாயிருக்கிறது ,உயரத்திலிருக்கிறது, பழுக்கவில்லை என்றான். சொன்னக்காரணத்திலும் குறைவாய் காசைக்காட்டினான். வியாபாரம் நடக்கவில்லை.போகும் போது மரத்தை பார்த்து திட்டினான்.

நின்ற மூன்று மரத்திலும் மொத்தமாய் 30 காய் இருந்தாலும்,  பழமாகும் போது ஒன்று  கூட வெட்டி தின்னப்போவதில்லை. இனிப்பில்லை, என்றொரு மூடநம்பிக்கை அல்லது மாயை. யாருக்கும் தானம் கொடுக்கப்படுமா? என்றால் கிடையாது. நமக்கு இனிப்பில்லை என்றால் மற்றவர்களுக்கு நாக்கில்லையா? ஆக மொத்ததில் பலாமரத்துக்கு பக்கத்தில் வைக்கோல் , வைக்கோலுக்கு பக்கத்தில் நாய்.

நேற்று, பெரிதாய் இருந்த ஒரு பழமாய் பார்த்து இரண்டு அணில்கள் கொந்தி கொண்டிருந்தது. தூரத்தில் தென்னையில் காகம், அணில் கொந்திவிட்டு போகும் வரை  காத்திருந்தது. மரத்தடியில் ஒரு அணிலாவது சமநிலை தவறி விழும்..லபக்... அமுக்கலாம் என்ற ஏம்பலிப்பில் பூனை. பூனைக்கு போட்ட பிஸ்கட்டை சுவர் வழியாய் எறும்புக்கூட்டம் கடத்திக்கொண்டிருந்தது. ஒரு அற்புதமான உணவு வலை காற்றில் தெரிந்தது. அண்ணர் கொக்கையோடு போய் அந்த பழத்தை அறுத்து வலையில் விழுத்தும்வரை. அணை கட்ட உதவிய பிற்பாடு, பலாப்பழம் பழுத்து விட்டது என்பதை காட்டித்தருகின்ற சிறந்த இன்டிக்கேட்டர்களாக எல்லா அணில்களும் தொழிற்பட்டு வருகின்றன.

வாழைப்பழத்தை தோல் உரிக்க வேண்டும் என்பதற்காகவும், பலாப்பழத்தில் பால் பிரளும் என்பதற்காகவும் இரண்டையும் உண்பதில் பெரிதாய் நாட்டம் கொள்வதில்லை. அதையும் தாண்டி தேன்கட்டி என்ற உவமையில் அயல் வீடுகளிலிருந்து பார்சல் பண்ணப்படும் பழங்களில் கைவைத்து விட்டு பசபசவென்று ஒட்டும் பலாப்பாலை பார்க்கும் போது அதை யார் முகத்திலாவது வைத்து தேய்க்க வேண்டும் போல் ஒரு வெறி வரும். நாக்கைத்தவிர மற்ற எல்லப்பாகமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிகொள்ளும். முடிந்து போன தேங்காய் எண்ணெய் போத்தலுக்குள் ஒவ்வொரு விரலாய் விட்டு  எண்ணெயை ஒத்தி எடுத்து பால் பிரண்ட  இடமெல்லாம் பிரட்டி கடைசியில் எண்ணெய் போக விம் சோப் போட்டு குளித்து விட்டு வந்திருக்கும் போது....

பக்கத்து வீட்டு சந்திரா மாமியின் "சீனிக்கட்டி" மேசையில் கிடந்து சிரிக்கும்.

தடவிப்பார்த்தால், காதுக்கு கீழ்பக்கமாய் ஏதோ ஒட்டுவது போலிருந்தது.

                         ×××××××××××××××

உதாரணத்திற்கு காப்மேயரின் "எண்ணங்களை மேம்படுத்துங்களில்" - ஒரு இருபது அத்தியாயம்,ரொபின் சர்மாவின்  who will cry? when u die? - ஒரு இரண்டு அத்தியா, இதற்கு மேலால் பேஸ்புக்கில் லைவ் மோட்டிவேசனோட சம்பந்தப்பட்ட அத்தனை பேஜ்களையும் சீயிங் பெர்ஸ்டில் விட்டு காலையில் போனை  எடுத்து பார்க்கும் போது எதிர்காலம் குமட்டிக்கொண்டு வந்து குட்மோர்னிங் சொல்லும்.

அட்வைசையும்,மோட்டிவேசன்களையும் அடுத்தவர் சொல்லி கேட்பதை விட படங்களிலும்,பக்கங்களிலும் பார்க்கும் போது ஏதோ உள்ளுக்குள் இருந்து " ஏற்றுக்கொள்ளேன்" என்று சொல்லும்.ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அடுத்ததடுத்த பந்திகளைப்பொறுத்தது.
அந்த கணம்,வரி,பக்கம்,பிரேமில் பார்க்கும் போது வாழ்க்கை தான் மாறப்போவதாக நினைத்து சிரித்து கொள்ளும்.

அந்த வரிசையில் கடந்த மாதங்களுக்குள் பார்த்து முடித்தபின்  புரட்டி எடுத்த படங்களுக்குள் ஒன்று டியர் ஷின்டகி தமிழ்படுத்தினால் அன்புள்ள வாழ்க்கை.

ஆலியா பாட் கைவேயில் அறிமுகமானதிலிருந்தே இதே முகம் ஏழாவதாய் எங்கே தட்டுப்பட்டது என்று மைண்ட்பலஸினுள் தேடியபோது ஆட்ஸ் பேட்ச் பூர்ணச்சந்திராவின் முகம் மேட்ச் ஆனது. ஒரே உயரம். சின்ன முகம், அதே பல்,அதே சிரிப்பு பின்னாமல் லூஸ் கேராய் விட்டால் டாமிட்... ஆலியாபாட்டின் டொப்ளகாங்கர் பூர்ணச்சந்திராதான், அடித்து சொல்லலாம்.



அழுதால் அழுகை, சிரித்தால் சிரிப்பு என்று பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளக்கூடிய ஆலியா ஆஸ் கைரா அரைவாசிக்கு பிறகு வந்து இன்ரூ ஆகும் கிங் கான்.

அங்கே ஜெகாங்கீர் கான் பார்த்த வேலையை அண்ணருக்கு மெசென்சருக்குள்ளால் பார்ப்பதில் ஒரு இனம்புரியாத புளுகு கிடைத்து வந்தது. அண்ணருக்கு மட்டும் என்றில்லை யாருக்கென்றாலும் மோட்டிவேசன்களை வாரி வழங்குவதில் மகரராசி நேயர்கள் முதலிடம் பெறுவதாக அறிய முடிகிறது.

படம் பார்த்து முடிந்தவுடன் பைனல் எக்சாம் எழுதி சோகமே உருவாய் இருந்த அண்ணருக்கு படத்திலிருந்து உருவி

"Don't let the past,
Blackmail your present,
To ruin a beautiful furture."

அடித்து விட .....

ரிப்ளையில் Go To Hell!
என்று வந்தது.



                 ××××××××××××


அடுத்த ஊறுகாய் போஸ்டில் சந்திக்கும் வரை.....











அன்புடன்
#அற்பபிறவி#

Saturday, March 25, 2017

வீட்டு வருத்தம்

இரண்டாவது வாரத்தின் இறுதி நாளுக்கு வரும் போது வயிறு ஒரு தடவை குளிர்ந்து சிறு குடல் உள்ளுக்குள் முறுகி கொள்வது போல இருந்தது.கை கடித்தது. உள்ளங்காலில் சொறிந்தது.அறைக்குள் இருந்த பொருள் எல்லாம் அந்தரத்தில் எழுந்து ஆடுவதாய் ஒரு கருமாந்திர ஹலுசினேசன்.நாளாக ஆக அறை சுவர் எல்லாம் உள்ளுக்குள் வருவது போல தோன்றும். சாப்பாடு எதுவும் இறங்காது. வெளியில் போக மனசு வராது. நோய் நிலமை கூடும்.

அறையை பூட்டி விட்டு அடைக்கோழியாய் நேற்றிலிருந்து உள்ளுக்குள் இருக்க, இன்னும் ஒரு நாள் இப்படியே போனால், பைத்தியம் பஸ்ஸில் பிடிக்க வந்து கொண்டிருப்பதாய் சொல்லியது.

பின்புற கதவை திறந்து கொண்டு எட்டாவது மாடியின் பல்கனிக்கு காலையிலோ, மாலையிலோ வந்தால் தங்கச் சூரியன் தகதகக்கும். அறுநூறு மீட்டர் தூரத்தில் அலையடிக்கும். கடல் காற்று காதோரமாய் போகும்.

கீழே எட்டிப்பார்த்தால் தலை நகரத்தின் அவசரமான வீதி அசையாமல் இருக்க,

வலதுபக்கத்து பல்கனியில்  காலை வேளைகளில் முழுகிவிட்டு தலை ஈரம் போக துவாயை சுத்திக்கொண்டு மூன்று வயது குழந்தையின் உடைகளையும் முப்பது வயது கணவனின் உடைகளையும் சமாந்தரமாய் காயப்போட்டு தன்னுடையதை போட இடமில்லாம் தவிக்கும் ஒரு குடும்ப பெண். பெயர் - கீதாவாயோ, சீதாவாயோ இருக்கலாம்.

இடது பக்க பல்கனியில் மாலை வேளைகளில் எதிரில் இருக்கும் கடலை பார்த்தபடி அறுபது பாகை சரிவுள்ள ஆர்ம்சேரில் கையில் புத்தகம், மூக்கில் கண்ணாடியோடு
"முதுமைக்கு நன்றி சொல்வது எப்படி?"  என்று எழுதியது தெரிய கூடிய தூரத்தில் பேரனோ,பேர்த்தியோ விளையாடிக்கொண்டிருக்கலாம். பக்கங்கள் தட்டுப்பட்டதாய் தெரியவில்லை, கிருஷ்ணபிள்ளை, தம்பிப்பிள்ளை நேம்,ஏஜ் ஜெனரேசனை சேர்ந்த ஒரு பெயர் தெரியாத முதியவர்.

கடந்த இரண்டு வாரங்களாய் இரண்டு பக்க பல்கனிகளிலும்   அவதானித்தது.மாலையானால் கடற்கரைக்கு போய் மேற்கு வெட்கத்தில் சிவந்து, இருட்டி, பார்ப்பது நான்காம் பிறையா இல்லை ஜந்தா என்று சந்தேகம் வரும் வரை வழமையான பாறையில் இருந்து விட்டு அறைக்கு திரும்பி, படுத்து காலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து விட்டு எழும்பி காலை-வேலை-மாலை திரும்பவும் அதே காட்சிகள் பிழையில்லாமல் ஓட...
Retyping and retyping and retyping and retyping.

அத்தனை காட்சிகளும் வந்ததிலிருந்து இன்றுவரை அலுப்படிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சின்ன,சின்ன மாற்றங்களோடு ஒரே காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

OBSERVING . சம்பந்தமே இல்லாத மனித அசைவுகளை பார்த்து கொண்டிருத்தல்.சிவப்புச்சட்டை பத்து ரூபா பிச்சை போடுகிறது. பிச்சைக்காரன் குருடனா,? இல்லை. அவ்வளவுதான். இனி ஒரு சந்தர்ப்பத்தில் அதே சிவப்புசட்டையையும் பிச்சைக்காரனையும் காணலாம்,காணாமல் போகலாம் யார் கண்டது.

"SOMETIMES IT IS THE QUIET OBSERVER WHO SEE THE MOST"

நேற்று மூன்று வயது பையன் தோளில் நித்திரையாயிருக்க அதே சீ/கீதா டீக்கப்போடு நின்று சிரித்ததை பார்த்த போது வயிற்றுக்குள் இருந்த குறு குறுப்பு கொஞ்சம் அடங்கியது.மாலையில் அதே மூன்று வயது பையன் அதே ஆர்ம்சேரில் முதியவரின் மடியில் இருந்து சிரிக்க இன்னும் இரண்டு நாட்களுக்கு இருக்கலாம் என்று தோன்றியது

பெரும்பாலும் தனிமையையும், நேரத்தையும் ஒன்றாய் போக்கிக்கொள்வதற்கு பயன்படுத்துகின்ற ஒரே ஆயுதமாய் ஒப்சேர்விங் இருந்தது.

"ஒன்றில் படைப்பவனாக இருக்க வேண்டும்
அல்லது பார்ப்பவனாக இருக்க வேண்டும்"

இரவாக திரும்பவும் முதலாவது பந்தி பெயர் சொல்லிக்கத்தியது. அத்தனையும் இருந்தும்,எங்கேயோ பிசிறடித்தது .வருத்தம் முத்திவிட்டது. நாளை வரை - வந்த வேலை முடியும் வரை தாக்குப்பிடிக்க வேண்டும். அதற்கிடையில்

Homesick.
வீட்டுவருத்தத்தை பற்றி சொல்ல முதல் வீட்டை பற்றி சொல்ல வேண்டும்.

மேலே சொன்ன மாடிகள், பல்கனிகள், கடற்கரைகள் எதையும் கண்ணுக்கெட்டின தூரம் வரை பார்க்காத கட்டாந்தரையில் கட்டியெழுப்பிய வீடு. முந்நூற்றி  ஐம்பது பாகையிலும் மரம் வளர்த்து போக, வர பத்தடியில் பாதை விட்ட காணி. சீதாக்களும், கீதாக்களும்  ஒரு வளவு தாண்டி இருந்தார்கள்.பக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பிள்ளை போன பஞ்சமியில் போய் சேர்ந்து விட அது பேய் வீடாகியிருந்தது.

வாசலுக்கு முன் வந்தவுடன் வாலையாட்ட ஒரு நாய். வீட்டுக்குள் பசித்தால் காலையுரஞ்ச ஒரு பூனை. ஆடு,மாடுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கதவு மூலையில் உள்ள ஆணியில் ஐனவரி இரண்டுக்கு பிறகு கிழிக்கப்படாத அஷ்டலக்மி. ஒரு சுவாமி அறை, நிறைய சுவாமிகள்.

பின்பக்கம் தேங்காய்கள், பழைய புத்தகங்கள், சகோதரத்துடனான பங்குச்சண்டையில  சேதமான பிளாஸ்ரிக் கதிரைகள்,கண்ணாடிகளை போட ஒரு டம்பிங் ரூம். அது தாண்டி  ஈரப்பலாவின் நிழலுக்குள் வாளி,கப்பியோடு கிணறு. சரிவரத் தண்ணி விடாமல் படப்போகும் நிலையில் உள்ள தேசிமரம். தண்ணியோடும் வாய்கால் முடிவில் ஒட்டுச்செவ்வரத்தை. சுத்திவர நான்கு செவ்விளநி மரம்.

மழை பெய்தால் கூரையின் பீலி நீளத்துக்கு  நான்கு இடங்களில்  ஒழுகும். அப்போது வெளியில் வந்து நின்று பார்த்தால் குட்டிக்கேரளா கண்ணுக்கு தெரியும்.

இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் எடுத்து வாசிக்க நிறையப்புத்தகங்கள். சின்ன தொ.கா மற்றும் ஒரு வானொலி.

வெயில் எல்லை மீறும் போது ஒதுங்குவதற்கு ஒரு மாமரம் அதைச்சுற்றி பந்தலில்லாத ஒரு அலரி.அதை தொடர்ந்து,மரம், சுற்றி வர பல மரம், பலாமரம்.  அதன் கீழ் அடிக்கடி அரட்டை.
குப்பையாய் இருந்தாலும்  அழகாய் தெரியும் எக்ஸோரா,குறோட்டன்கள்.

இது எல்லாமாக சேர்ந்து வீட்டுவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. வீட்டை விட்டு எந்த இடத்துக்கு போனாலும் மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பதில்லை. இரண்டு கிழமை - பெரிய ஆச்சரியம். நான்கு வயதுக்கு வந்த போது இந்த வருத்தம் இருப்பது தெரிய வந்தது. கோகிலாதேவி டீச்சரும்- நேர்சரியும் நோய்க்காரணங்களாகி இருந்தன." அம்மா!... வீட்டை போவம்" என்பது நோயறிகுறி.

வயது ஏற ஏற நோய் தாக்க எடுக்கும் கால அளவு கூடியதே ஒழிய முற்றாய் ஒழிந்ததாய் தெரியவில்லை. நாக்கு புளிப்பது போல் இருக்க மினரல் வாட்டரில் ஒரு மிடறு உள்ளுக்குள் போனது. அம்மன் கோவில் தண்ணீரை அள்ளிக் குடிக்க வேண்டும் போல இருந்தது. இரவு எதுவும் சாப்பிடவில்லை.நித்திரையை தேடிப்பிடிப்பதற்குள் விடிந்து விட்டது. நரகம்.

டிப்பிரசன் தாங்காமல் ஸ்பெசலாய் ஒரு Dr க்கு காசு கொடுத்து ஆலோசனை கேட்டாயிற்று....

"HOME SICK" IS NOT A DISEASE
"IT IS A STATE  OF MANNER "

"இனி எல்லாம் ஆண்டவன் கையில்தான் இருக்கு" என்று அவரும் முடித்து விட காகம் எங்கிருந்தோ கரைந்தது. நாய் ஊளையிட்டது.

வந்த வேலை முடியவில்லை, முதல் நாளே புறப்பட தயராகி செக்கன் செக்கனாய் குப்பைக்குள் அனுப்பி, இரவு ரயிலேறி ஊருக்கு வந்து  ஸ்டேசனில் இறங்கிய பிறகு மூச்சு வந்தது.அதே தங்கச்சூரியன் தகதகத்தது. குறுகுறுப்பு அடங்கிவிட்டது

பரீட்சயமான ரோட்டின் தலைப்பில் ரமணியின் கடை இன்னும் திறக்கவில்லை.கொப்பியில் இரண்டாயிரம் கடன் நிற்கிறது. ராசன் மாமா முற்றம் கூட்டியவாறே தலையாட்ட, அடையாளம் தெரியாமல் ஜிம்மி குரைத்தது.ரத்தினம் மாமி லட்சுமிக்கு வைக்கோல் போடுவது தெரிந்தது. கையோடு பாலை வாங்கி கொண்டு போகலாமா?.வேண்டாம்.

ஒழுங்கைக்குக்குள் இறங்கும் போது முருகன் கோயில் மணி ஆறடித்தது. வேம்பு இலையுதிர்த்தது.

கேட்டுக்குள் நாய் பாய்ந்து சந்தோச சத்தம் போட்டது
கதவடியில் பூனை.மியாவ்.
வீடு சிரித்தது.

வேலிக்குள்ளால்  சீதா அக்கா எட்டிப்பார்த்து,..

"போன காரியம் என்னாச்சுடா? விசா கிடைச்சுதா?!"

"இல்லைக்கா!!"




#########








#அற்பபிறவி#

Thursday, January 12, 2017

பொங்காத பொங்கல்கள்

பஸ் கிறீச்ச்டித்து நின்றபோது யார் இறங்கபோகிறார்கள்!? சீட் கிடைக்குமா? என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க டிரைவர் சீட்டை விட்டு இறங்கி பஸ்ஸிற்கு கீழே போய் மேலே வந்து..
"பஸ் பிரேக் டவுன் இதுக்கு மேல போகாது"
என்றவுடன்
"களா, புளா, களா, புளா" சர்வம் சட்டி பானைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டது.

ஒவ்வொருதராய் இறங்க தம்பா,கிச்சா,அம்மாக்கள்,அப்பாக்கள்,விச்சுவா,விசித்திரா,ராகீ கடைசியாய்  குண்டுமணி இறங்கும் போது டிரைவரும்,கொன்டக்டரும பார்த்த பார்வை குண்டுமணிக்கு பிடிக்கவில்லை என்று அப்பட்டமாய் தெரிந்தது.காட்டிக்கொள்ளவில்லை,புழுக்கொடியலை இரண்டாய் உடைத்து வாய்க்குள் போட்டுக்கொண்டான்.

இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து கிலோமீட்டர் தாண்ட வேண்டியிருந்தது.
விடிவதற்கு  எட்டு மணித்தியலங்கள இருக்க
அதில் இரண்டு நிமிடத்தை வட்டியில்லாமல் கடன்வாங்கி ஐந்து வசனத்தில் ஒரு அரைகுறை பிளாஷ்பேக்.

01.கண்ணன் கோயில்
02.தைபொங்கல்
03.சட்டிகள்,பானைகள்
04.பிளஸ் ஏனைய மேலே குறிப்பிட்ட , குறிப்பிடாத உயிருள்ள மூட்டைகள்.
05.சூர்யோதயம் - தி பேர்பக்ட் பொங்கல் அட் தி பேர்பக்ட் டைம்

தோராயமாய் ஒரு இருபது பேர்.சரியாய் எண்ணவில்லை.புறப்படும் போது செருப்பு போடாததை நினைத்து கால் த(லை)ரையில் அடித்துகொண்டது.
நிலா வெளிச்சத்தில் ஒருவர் முகம் ஒருவருக்கு துல்லியமாய் தெரிந்தது.குண்டுமணி ஒரு கார்டியன் ஏஞ்சலனாய் கடைசியில் வந்து கொண்டிருக்க முன்னால்,அதற்கு முன்னால் தம்பா,கிச்சா தோள் உரசியபடி நடக்க அதற்கு முன்னால் ராகீ,விச்சுவாவின் கையிலிருந்த கடலையை எடுத்து கொறித்தபடி விசித்திராவுக்கு பின்னால்,

பின்னால் -காதில் ஜிமிக்கி,ஈரங்காயாத பின்னலில் நித்தியகல்யாணிச்சரம்,காதோரத்திற்கு கீழ் இரண்டு கேர்கிளிப்

விச்சுவா விசித்திராவை தன் மச்சாள் இல்லை என்று வேம்படி பிள்ளையாருக்கு முன் சத்தியம் செய்து நான்கு மாதம் ஆகிறது.அன்றிலிருந்து,ராகீ கடலை வாங்கியதில் 800 ரூபா மட்டில் கச்சான்காரியிடம் கடன் இருந்தது.

புதையலை அடைய இன்னும் மூன்று ஆபத்துகளை கடக்கவேண்டும்  ,இது இரண்டாவது "மக்கி ரோட்டில் நெருஞ்சி முள்ளு".தம்பா கிசுகிசுத்தது வெளியில் தெளிவாய் கேட்டது.

செருப்பில்லாதவர்கள் எல்லாம் நுனிக்காலால் நடக்க வேண்டியிருந்தது.
விசித்திரா ஒவ்வொரு தடவை இ...ஷ்... என்று உறிஞ்சி தைத்த முள்ளை பிடுங்கி எறியும் போதும், ராகீக்கு தன் இதயத்திற்கு செருப்பு போட வேண்டும் என்ற யோசனை எழுந்தது.(வருடத்தின் மிகக்கேவலமான காதல் வசனம்,தவிர்த்திருக்கலாம்)

நான்கு கி.மீ பாதயாத்திரையின் பின் முச்சந்தி ஒன்றில் வைத்து ஆபத்பாந்தவர்கள் குறுக்கிட்டார்கள் .
நாயன்மார்களுக்கு உதவும் பொருட்டு கடவுள் மாறுவேசத்தில் வந்தது,நான்காம் வகுப்பு சமயப்புத்தகம்,சமயடீச்சர்,திருச்சிற்றம்பலம்,தேவாரம்,இத்யாதி,இத்யாதி எல்லாம் மின்னிவிட்டுப்போனது.

இப்போதெல்லாம் அப்படி அற்புதங்களை நிகழ்த்த வருவதில்லை.
காரணம், கடவுள் மனுஷநம்பிக்கை இழந்து நாஸ்திகனாகி விட்டிருந்தார்.

இது தெரியாமல்....சிரிப்பு வந்தது.இருந்தாலும் அவநம்பிக்கையில் ஆபத்பாந்தவர்களை ஒரு தடவை உற்றுபார்த்துக்கொள்ள

"கன தூரமோ"
"கண்ணன் கோயில்,பஸ் பிரேக் டவுனாயிட்டு" ராகீயின் மாமா முறுவலித்து கொண்டார்.
"இன்னும் பன்னன்டு மைலுக்கு மேல போகனுமே? குரலுக்கு அறுபதுக்கு மேல் வயது காட்டியது.
விரும்பினா எங்களோட வரலாம்,கோயில் தாண்டித்தான் வயல் வரும்"

மூன்று வண்டியும் நிறைந்து விட்டது.
ஆறு மாடுகளும் அழுது கொண்டன.

இருபதை தாண்டாத அனைவரும்,இருந்த பலகையை தடவிப்பார்த்துக்கொண்டார்கள்.
மாட்டுவண்டி என்பதையும் தாண்டி அதில் எதிர்பாராத பயணம், ஜீரணிக்க முடியாமல் இருந்தது.
இடது,வலது என்று ஏறி இறங்கி ஒரு ரிதத்தில் வண்டி ஊர்ந்தது.குண்டுமணி பீட்டாவின் முன்னோடி, மாட்டுக்கு நோகக்கூடாது என்று வண்டிக்கு பின்னால் நடந்தே வருகிறேன் என்று விட்டான். எப்படியும் பாதி வழியில் ஏறி விடுவான்.தூரத்தில் பட்சி ஏதோ கத்தியது.

ஒவ்வொரு வண்டியின் அடிப்பகுதியிலும் பாதி கரிப்பிடித்த சிமினியோடு ஒரு லாம்பு அசைந்தது. எந்த அலட்டலோ,உறுத்தலோ இல்லததால்  ஆறு ஜீவனும் அமைதியாய் மிதவேகத்தில் அசைந்தது.இருந்தநிலையிலேயே நித்திரை தூங்கி பாதி குறட்டை வேறு விட இரண்டாவது வண்டியில் இருவர் மட்டும் இருவருக்கும் மட்டும் கேட்கும் குரலில் பேசிக்கொண்டது - மேலே சொன்ன அற்புதங்களில் ஒன்று.

"இதுக்கு முதல் போயிருக்கிறியா"
"ம்..என்ன" ராகீக்கு சட்டென்று குரல் வர மறுத்தது.
"இந்தமாதிரி... மாட்டுவண்டில இதுக்குமுதல்.." அடித்த மெல்லிய காற்றில் ஒரிரு முடி காதோராமாய் அசைந்தது.
"நினைவு தெரிஞ்சு இல்ல... அம்மாவோட போயிருக்கலாம்... வயித்துக்குள்ள இருக்கும் போது.. இப்ப கேட்கமுடியாது"
வெளியே தொங்கப்போட்ட கால் இரண்டையும் தூக்கி ராகீக்கு பக்கத்தில்  நீட்டிக்கொண்டாள்.
நுனி விரல் பட்டது. வெள்ளிக்கொலுசுகள் இரண்டும் சிலிர்த்துக்கொண்டது.

"நல்லா இருக்குதில்ல இப்படி போறது" கதைக்க வேண்டும்.நிறைய...நிறைய
"ம்ம்...ஒரு கதை போல...,காத்து,நிலா,மாட்டுவண்டி,அம்மா,அப்பா,ப்ரெண்ட்ஸ்,அந்த அசையிற லாம்பு இனியொரு தடவை கிடைக்காத  கலவை.
வழமையாய் இதெல்லாம் ரசிக்கிற ஜாதி கிடையாது.நெற்றிப்பொட்டு கொஞ்சம் அரங்கியிருந்தது.சொல்லலாமா? விடலாமா?..பாரதி கண்ட புதுமைப்பெண் எல்லாம் வீட்டில் கறையான் தின்று,படிக்க முடியாமல் போய்விட்டது.சிரித்துக்கொண்டாள். இன்னொரு தடவை சிரிக்கக்கூடாது.தொடர்ந்து கதைக்க முடியாது"

இருந்தாலும் இப்ப பார்க்க ரசிக்கத்தோணுது."
"இரசனையும்,காதலும் நனோமீட்டர் தூர சொந்தங்கள்.எதிர்பார்க்கமால்தான் வரும்"
"ஓ..நல்லாருக்கே...நிறைய வாசிப்பியா"
"இதுவரைக்கும் வாச்சதும் இன்டைக்கு உன்னோட கதைச்சதும் ஏறத்தாழ சமன்தான்"
"பச்...அதால..."
"உன்னோட நிறைய கதைக்கனும்னு யோசிக்றன்"

கோயில் கோபுரம்  தூரத்தில் தெரிந்தது.நான்கரைக்கே கொலுப்பலகைக்கு பக்கத்தில் ராகீ டிரைவரோடு ஒட்டிக்கொண்டு விட்டான்.கதைத்ததிலிருந்து நிச்சயமாய் கடவுள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.வயலுக்குள் பொங்கி படைக்க போய்கொண்டிருக்கின்ற ஒரு சாதரண விவசாயி, பஸ்ஸிலோ,வானிலோ இதுவரை ஏறியது கிடையாது.நுகத்தடியின் வலப்பக்க மாட்டுக்கு பெயர் 'நட்டி' மற்றயது வாங்கி ஒருவாரம்தானாகிறது.பெயர் யோசிக்கவில்லை.

தைப்பொங்கலின் கொள்கைகளில் ஏதோ பிழையிருப்பதாக கூறிக்கொண்டார். இதுவரை செய்த உதவிக்கெல்லாம் நன்றிகளை பெற்றுக்கொள்ள இழுத்துக்கொண்டு போகிறதே நட்டி சுயநலக்காரன்தானே என்று சொல்லி சிரித்து கொண்டார்.

இந்த நூற்றாண்டின் இறுதி சொச்ச ஆச்சரியங்களோடு கோயில் வாசலில் குதித்த போது ஜந்து அரைக்கு அடித்துக்கொண்டது.

அடித்த பனியில் கேணித்தண்ணீர் தலையில் சில்லிட்டது.கோயிலுக்கு எதிரே  இடம் பிடித்து,பாய் விரித்து மூன்று,ஆறு,ஒன்பது கற்களில் மூன்று பானைகள் வரிசையாய் ஏறிக்குந்திக்கொண்டன.
முதல்பானையை சுத்தி தம்பா,கிச்சாவும் இரண்டாவது விசித்திரா பிளஸ் அப்பாவும் மூன்றாவது குண்டுமணியின் மேற்பார்வையிலும் இருந்தது.இரண்டு மாதங்களாய் குண்டுமணிக்கும் தம்பாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை கிடையாது.ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருந்தது விளைவு இருவருக்கும் நடுவில் ஒரு பானை வைக்ககூடியளவு ஹப். அந்த இடைவெளியில்தான் அடுப்பு சொல்லாமலேயே மூண்டுகொண்டது.

விசித்திரா தொங்கிய தாவணியை இடுப்பில் செருகிவிட்டு சாணியால் மெழுகிய(து -ராகீ) இடத்தில் எதிர்பாராத மூலையில் எல்லாம் புள்ளிவைத்து கோலம்போட்டுக்கொண்டிருந்தாள்,சாட்சாத் சகலகலாவல்லி.

வடக்குப்பக்கமாயிருந்த தலைவாழையிலை கிழக்குப்பக்கமாய் திரும்பிக்கொண்டது.பூரண கலசம் - நிறைகுடம். ஒற்றைப்படையாய் ஒன்பது வாழைப்பழங்களில் நடுவிலிருந்த பழத்தின் வயிற்றில் ஐந்து ஓட்டைகள் போடப்பட்டு புகை வடிவில் சாம்பிராணி அழுது கொண்டிருந்தது. பழத்தை காகம் தூக்காமல் ஒரு காவல் போடப்பட்டிருந்தது.

சூர்யோதயம் - தி பேர்பக்ட் பொங்கல் அட் தி பேர்பக்ட் டைம். மூன்று பானைகளில் எது கோபரத்தின் கிழக்கு பகுதியால் சூரியன் எட்டிபார்க்கும் போது  பொங்கி வழிகிறதோ அந்த பானைக்கு வெற்றி.(ரசிக்க கூடிய ஒரு மூடநம்பிக்கை)

பானையை ஒரு பக்கமாய் சரித்து வைப்பது,ஒரு பக்கம் அதிகமாய் விறகு வைத்து எரிப்பதெல்லாம் போங்காட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்படும்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பன்னிரு குதிரையும் ரதத்துடன் வந்து விடும் என்று வெளிச்சம் தகவல் சொல்லியது.

4.30 - நிமிடம்
விசித்திரா கையிலிருந்த ஐம்பொன் மோதிரத்தை காணவில்லை என்று கோலம் போட்ட இடம் முழுக்க தேடிக்கொண்டிருக்க,
"கிரகத்துக்கு போட்டது, இப்ப கிரகம் சரியில்லை,மோதிரம் போய்விட்டது"
அடுப்பை ஊதி ஊதி சிவந்த கண்களுடன் விசித்திராவின் தகப்பன் சொல்லிக்கொண்டிருக்க

3.30 - நிமிடம்
பால் விட்டது போதாதென்று ராகீ தேங்காய் திருவ,
குண்டுமணி களவாய் ஒரு பிடி சர்க்கரையை அள்ளி பானைக்குள் போட்டுக்கொண்டிருக்க
தம்பா அடுப்பைச்சுற்றி ஒரு குட்டி புயலே வருமளவுக்கு ஊதிக்கொண்டிருந்தான்.

2.30 - நிமிடம் - டிக்,டிக்

1.30 - நிமிடம்
மோதிரம் கிடைக்கவில்லை,புறங்கையால் நெற்றியில் அரும்பிய வேர்வையை துடைத்துகொண்டாள்.எரிந்து வெளியில் வந்த பாளையை தள்ளி விட்டாள்.

இறுதி வினாடிகள்....கோபுரம் ஒளிப்பிளம்பாகிகொண்டிருந்தது.

56.....57...58...

யார் பானை பொங்கப்போகிறது, ஜெயிக்கப்போகிறது என்பதில் பதட்டம் நிலவியது.குண்டுமணி வெற்றி நிச்சயம் என்பது போல அனாயசமாய் இருக்க மொத்த பார்வையாளர்களும் மூன்று பானை மூடிகளையும் விழி மூடாமல் பார்த்த படி இருக்க

59...60....00


குண்டுமணியின் பானை மூடி மெதுவாய் தூக்கியது.வெளியே பொ....ங்...கி......வருவதற்கிடையில் தம்பாவின் அடுப்பு பொங்கிய பாலால் அணைந்து உஷ்..ஷ் ...என்று புகை வந்தது. தம்பாவும் கிச்சாவும் வெற்றிப்பெருமிதமாய் ஒரு ஹை பைவ் போட்டுக்கொண்டார்கள். சீனாவெடி இரண்டு கொழுத்தி எறிந்தார்கள்...இரண்டவதாய் விசித்திராவினுடையதும் மூன்றாவதாய் குண்டுமணியின் அடுப்பும் சத்தம் போட்டுக்கொண்டது.

குண்டுமணி அலட்டிக்கொள்ளவில்லை, தோல்வியின் விரக்தியில் சிரிப்பதாய் பட்டது.

மூன்று பானைப்பொங்கல்களும் தனித்தனி இலைகளில் போட்டு, கரும்பு,பழம் சகிதமாய் படையலிட்டு, முதலில் கலைத்த காக்காய்களையே திருப்பி கூப்பிட்டு கொஞ்சம் எல்லாவற்றிலும் கிள்ளி வைத்து,  தண்ணி தெளித்து கைதட்டி நன்றிக்கடன் நிறைவேற்றப்பட்டது.

அவரவர்கள் தங்கள் தங்கள் பானை பொங்கல்களை இலைக்குள் ஏந்திக்கொண்டு மரத்துக்கு கீழ் இருந்து சாப்பிடத்தொடங்கிய போது.தம்பா,ராகீ,குண்டுமணியின் வாய்களுக்குள் ஏதோ கடிபட்டது.கஜுவா?? இருக்காது.. போடவில்லையே!? என்ற சந்தேகத்துடன்....

மூவரும்  கையில் எடுத்து பார்த்த போது மூன்றும் வெவ்வேறு பொருட்கள், முறையே
01.புழுக்கொடியலின் அடிக்கட்டை     02.ஐம்பொன் மோதிரம்     03.கரையாத சர்க்கரை கட்டி.


##########
















#அற்பபிறவி#