About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, June 12, 2016

இவனும் ஓர் ஏகலைவன்தான்

இவனும் ஓர்
ஏகலைவன் தான்

ஒவ்வொருதனும் மற்றவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் செய்ய மாட்டான்
ஆனால் ஒரு குறித்த நபர் சொல்லும் போது மட்டும் என்ன பிடிக்காத விடயமாக இருந்தாலும் அதை செய்வோம்
அந்த நபர்
நண்பனாக,
அம்மாவாக ,
அப்பாவாக,
காதலியாக ,
என்று வேறுபடும்

அந்த வகையில்
அவனுக்கு அவர்.

அவனின் எதிர்காலத்திற்கான பயணத்தை இறந்த காலத்தில் மாற்றி எழுதியவர்.

காரில் போகும் போது பார்த்தான்
ரொம்பவே அவன் ஊர் மாறியிருந்தது
ரயில் பாதைகள் திருத்தி
ஸ்டேசன்கள் கட்டப்பட்டு
இருந்த கடைகள் இல்லாமல் போய் புதிதாய் சில தோன்றி
புதிய சாவகச்சேரியை தாண்டினான்

அவன்
சற்றே பாடசாலையில் அதிகமாக கவனிக்கப்பட்டவன்
அதிபர் அலுவலகங்களிலும் ஆசிரியர் ஓய்வறைகளிலும்

அவன் பாடசாலைக்கு போன நாட்களில் பாதி நாட்கள் அப்பாவுடன்தான் போனான்

அவன் அப்பா கூட ஒரு கட்டத்தில் அவனை அத்தனை ஆசிரியர்கள் முன் முதலாவது தரம் அறைந்து இரண்டாம் தரம் அறைய கை தூக்கிய போது அதனை தடுத்தவர் அவர்தான் அவன் பாடசாலையில் மதித்த ஒரே ஒரு நபர்
அவனை இந்த உலகத்திலே புரிந்து கொண்ட ஒரே நபர்.

எந்த பாடமும் அவரிடம் படிக்கவில்லை அவன் .
ஆனால் அவருக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் அவனுடன் கதைத்தார்
அவர் சொல்வதை மட்டும் அவன் செய்தான்.
அவர் சொல்லாமல் அவன் செய்தவற்றுக்கு அவரும் அதிபர் அலுவலகத்தில் கூட நின்றார் அவனோடு.

கடைசியாக பள்ளி நிர்வாகம் அவனை நிராகரித்தது.
அவன் அவளை பார்த்ததும்,
அவள் அவனை பார்த்ததும்,
அனைவரும் அவர்களிருவரையும் பார்த்ததும் காரணமாகியது .

பாடசாலையின் கதவை தாண்டும் போது கூட வந்த அவர் ,
அவனை தனியே கதைப்பதற்காக அப்பாவை பார்க்க ,
அப்பாவும் விலகி கொண்ட போது அவர் அவள் அவன் மூன்று பேர் பார்வையும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்ட போது ,
அவர் அவனுக்கு வழமையாக சொல்வதை சொன்னார் .
"நேசிப்பது கிடைக்கும் வரை
நீ நேசிப்பதை விட்டு விடாதே"

காரைப் பார்க் பண்ணி
நடந்து
அறையொன்றினுள்
அமர்ந்து
சிறிது நேரத்தில் ஒருவர்
வந்து மேசையில் அமர்ந்தார்.

உங்களோட பேர் ?
சொல்ல எழுதினார்

நீங்கள் கூட்டிட்டு போறதுக்கு அவர் ஓம் எண்டுட்டார்

பட் நீங்க அவருக்கு?

அவன் என்னோட பிள்ளை!

எழுந்து சென்று அவர் கால் தொட அவர் அவனை மூச்சு முட்ட கட்டி பிடித்து கொண்டார்.

காரில் அமர்ந்து
வெளியில் போகும் போது
பார்த்தான்
............ ன் அணுசரனை யுடன் முதியோர் தினம் என்ற பனர் காற்றில் பறந்து கொண்டிருந்தது

சேர் " இண்டைக்கு ஆசிரியர் தினம் உங்களுக்கு வாழ்த்துக்கள்"
அவள் கூற
நன்றிம்மா நீ எப்படி இருக்கா?
"பைன் "சேர்

வீட்டை அடைந்த போது அவர் அவனை மீண்டும் கேட்டார்
உனக்கேன்பா வீண் சிரமம் நான் அங்க சுகமாத்தான் இருக்கிறன். அவர் அவனை மூச்சு முட்ட கட்டி பிடித்து கொண்டார்.

நீங்கள் எங்களோட வந்து இருந்தா எங்களுக்கு இன்னும் சுகமா இருக்கும்

"நேசிப்பது கிடைக்கும் வரை
நீ நேசிப்பதை விட்டு விடாதே"

மூன்று பேரும் வாசலில் எழுதி இருந்த வசனத்தை வாழ்வின் இரண்டாம் தடவையாக ஒன்றாக வாசித்தனர்

இனி தினம் தினம் வாசிப்பார்கள்.

No comments:

Post a Comment