About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, June 12, 2016

ஒரு பட்டாம் பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் - 03

வழமையான நேரத்தில் பின் வாசலில் கால் வைக்க ...
வார்ச்சர் கேற்றுக்கு சங்கிலி போட்டு பூட்டை கொழுவ ...

தள்ளினேன் கேற்றை .
துணைக்கு இரண்டு மூன்று பேர் கூட நின்றார்கள்.

என்ன இருந்தாலும் எவனும் தான் செய்யும் வேலையில் எந்த இடத்தில் தன் அதிகாரத்தை பிரயோகிக்க முடியுமோ அத் தருணத்திற்காக காத்திருப்பான்.

"பெஸ்ட் பெல் அடிச்சு ஐஞ்சு நிமிசமாச்சு சுத்தி முன் கேற்றால வாங்கோ எல்லோரும்"
ஆள் ஒரு நரியன்.இரண்டு மூன்டு தரம் அவனோட கொழுவி வேற இருக்கறதால எவ்ளவு கேட்டாலும் திறக்கமாட்டன் என்டு தெரியும்.தூய பட்டினத்து தமிழ் வார்த்தைகளை அவன் பால் உமிழ்ந்து விட்டு முன்னால போக,இன்னுமொரு பிரகண்டத்துக்குள்ளால தப்ப வேண்டுமே.லேட்டா வர்றவங்களை  மறிச்சு வைச்சு அறுக்க ஒரு அறுவை வாத்தி கேட்டுக்கு பொறுப்பாய் நிக்கும்..
முன் கேற்றை அடைந்து மதில் ஓட்டைக்குள்ளால் நிலமையை ஆராய்ந்த போது,
என்ன இண்டைக்கு புதன் கிழமை தானே. ஏன்? லைன் கட்டி மெயின் கோலுக்கு போறாங்கள் யோசித்தவாறு வகுப்பு நோக்கி நடக்...

"தம்பி இதில பாக்கை வைச்சுட்டு கோலுக்கு போம்."

நல்ல காலம். நல்ல மூட்ல நிக்கிறார் இண்டைக்கு,அவற்ற மனுசிக்கு மனசுக்குள்ள நன்றி தெரிவிச்சுக்கொண்டு

என்னவாயிருக்கும்?
கோலை எட்டிய போது எங்கட வகுப்பு லைனும் சரியாக வர இடைச்செருகலாகினேன்.

ஏன்டா இண்டைக்கு இங்க வாறம்?

தோரணம் சோடித்திருந்தது,கோலை சுற்றி
மேடையில் மாக்கோலம் .
வேட்டி கட்டி சிலர் .
சரஸ்வதிக்கு வழமைக்கதிகமான மாலைகள்.
ஒரு பூசாரி ஐயா
தேவாரம் பாடும் கும்பல்.

இண்டைக்கு சரஸ்வதி பூசை தொடக்கம்
இனி, பத்து நாளும் இங்க தான்டா!!!

Title:God is great

சரஸ்வதி பூஜை நான்காம் நாள்.

தின ஒழுங்கு படி இன்று ஒன்பதாம் ஆண்டின் பூஜை

போட்டீன் என்கிற அந்த ரீன் ஏஜ்.

வேட்டியை கட்டி சேட்டை கழட்ட மனமில்லாமல்,கையை கட்டிக்கொண்டு மேடையில் ஒரு கூட்டம் .
பாதி பேர் அதில் மாலை போட்ட சரஸ்வதியை பார்க்காமல் பாமாலை பாடும் லக்ஷ்மி(கா) ஐ பார்த்தது கும்பிட்ட படி

சாம்பிராணி புகை மணம் மண்டபம் முழுக்க.

தேவாரம்,சகலகலாவல்லி மாலை ஓதுங்கோ!
ஐயர் ஆணையிட
அதிபர் கீழே அமர்த்தி கையை காட்ட
எல்லாரும் அடித்து பிடித்து அமைதியாக இருப்பதற்குள்
தேவாரம் முடிந்திருந்தது.

வெண்டாமரைக்கன்றி நின்பதந்தாங்க......

"டேய் உண்மைலயே கடவுள் இருக்காருடா"
ஏன்டா?
பாருடா நம்ம ஆளை நமக்கு நேர கொண்டு வந்து நிப்பாட்டி இருக்காரு.

கடவுள்!
எக்ஸாம் டைமில் மட்டும் கண்ணுக்கு தெரிபவர்
சிலருக்கு அதுவும் தாண்டி ரிசல்ட் வரும் போது மட்டும் தெரிபவர்

பிச்சைக்காரனுக்கு தட்டில் காசு விழும் போதும்...
டொக்டர்ஸ்க்கு ஆப்ரேசன் முடிவிலயும்..
ஆக்ஸிடண்டல உயிர் தப்பும் போதும்....

இதெல்லாம் தாண்டி எனக்கு பக்கத்தில நிக்கிற இந்த பேமானி மாதிரியானவங்களுக்கு
தன் ஆளை காட்டும் போது மட்டும் கடவுள் கண் முன் தோன்றுவார்.

"எனக்கு உங்களை மாதிரில்ல
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு"

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்டு யார் சொன்னது"

"ஓ திடீருன்னு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்திடுச்சா?
அப்ப சொல்லுங்க யார் கடவுள்"

நீங்கதான்
Look. I don't understand ur joke.

Becz,it's not a joke.

"முன்ன பின்ன தெரியாத அந்த பொடியனுக்காக இரத்தம் கொடுத்தீங்களே
அதான் கடவுள்!"

என்ன திடீர் பணிவு.
ஏன்னா? நானும் கடவுள்.

அதானே பார்த்தேன். யார் சொன்னா நீங்க கடவுள்னு?
"மலை மேல கடை வச்சிருக்கிற ஒரு அம்மா"

"எனக்கு புரியல்ல"

"புரியக்கூடாது அதுதான் கடவுள்."

அன்பே சிவம்.
கமல் காட்டிய கடவுள்.

படம் பார்த்து முடிந்த போது தெளிவாய் இருந்த பாதிப்பேர் குழம்பியும் குழம்பிய பாதிப்பேர் தெளிந்தும் இருப்பார்கள்.
DOG ஐ திருப்பி போட்டாக்கூட GOD ன்னு வருதில்ல..
உலக நாயகனின் மாயாஜாலம்.


எதுவுமே மனசில நினைக்காம, வேண்டாம உன்னால கடவுளை கும்பிட முடியுமா?

அது எப்படிடா?

"ஒண்டுமே வேண்டாட்டி ,ஒண்டுமே நினைக்காட்டி ,அப்புறம் என்னண்டு கும்பிட்றது.,எதைக் கும்பிட்றது
கடவுள் இல்லைண்டு ஆயிடாது."

"சிவனுக்கு ஒரு ராத்திரி அது சிவராத்திரி சக்திக்கு ஒன்பது ........
...............
..............
எனவே இத் திருநாளில் வீரத்தை வேண்டி வழி படுவோமாக."
நன்றி.

அந்த வழமையான வசனம் பேசி முடித்து கரகோசம் பெற்று போகும் போது ஒன்று புரிந்தது.

வேண்டுதல்களும்.
பயங்களும்.
எதிர்பார்ப்புக்களும்தான்

நாம் படைத்த
நம்மை படைத்த
கடவுள்.

தொடர்ந்து வந்த டீச்சர்ஸ் டேக்கு மனசுக்குள் சந்தோசமாய் சிலருக்கும் வெறுப்போடு பலருக்கும் கை கொடுத்து மாலை போட்டு வாழ்த்துச்சொல்லிக் கொண்டாடி முடித்து
அன்றைய தின டயரியின் பக்கத்தில் எழுதியது இது.
"இவனும் ஒரு ஏகலைவன்தான்"
(அது தனிப்பதிவாய் போடப்பட்டுள்ளது)

அந்த கூத்துகளோட அந்த தவணை வழமையான அதே எக்சாம் சபதத்தோட முடிஞ்சு அடுத்த தவணை அவங்களே விளையாட்டோட ஆரம்பிக்க அதுக்கப்புறம் கீழே
வி

வு
ம்

லீவு முடிஞ்சு முதல் நாள் பள்ளிக்கூடம் போகேக்க ஒரு புளுகு வரும்.
கன நாள் போகேல்ல என்டுறது ஒரு காரணம்.
எல்லாரையும் கன நாள் பாத்து என்றது இன்னோரு காரணம்.
என்னதான் வெளியிடங்களில் கண்டு தொலைத்தாலும்
அந்த வைட் அண்ட் வைட் யூனிபோர்மில்
பைப்டியிலோ இல்லை வகுப்புக்கு வெளியில் வரும் போதோ வைத்து பார்க்கும் போது...
டாமிட்
வாட் அன் ஏஞ்சல் சீ இஸ் ?

சின்ன வகுப்பென்டா, புது வருசம் என்டா,
புது வகுப்பு,புதுக்கொப்பி,
எல்லாம் புதுசு.
ஏ எல்லில் சிஸ்டம் கரப்ட் ஆகி விட்டது.
இனித்தான் போய் வகுப்புக் கபேட்டுக்குள்ள போன ரேம் வைச்ச கொப்பியளை தேடி எடுக்க வேண்டும்.

எதுக்கும் வெறுங்கையோட போகக்கூடாது என்டு கையில சுத்திக்கொண்டு போக ஒரு கொப்பியையும் எடுத்துக்கொண்டு போறது வழமை.கொப்பியை சுத்துறதும் ஒரு சீனாய் இருக்கும் ஆரெண்டாலும் கொப்பி விரல்ல சுத்துது என்டா ஒருக்கா ஆளையும் பார்த்து கொப்பியையும் பார்ப்பினம்.

அது உண்மைல "சுத்துற" கொப்பிதான். அதில எல்லாம் கிடக்கும் .
வராததுக்கு என் எழுத்தில் அம்மாவின் கடிதம்.
பென்சீன் வளையம் போட்டு மாற்றீடு.
பிஸிக்ஸில குவிவு வில்லைக்கு பிழையா குழிவு வில்லைன்ர வரிப்படம்.
மற்சில சட்டப்படல்
இது எல்லாத்துக்கும் மேலால பயோப்பொடியளும் அந்தக்கொப்பியை அப்பப்ப யூஸ் பண்றாதால கோதாரி விழுந்தது அதில அண்டைக்குத்தான் பார்த்தன் நாங்கள் அம்பு போட்டு அழகா கீறுற இதயத்தை அவங்கள் நாலு அறையா பிரிச்சு வைச்சு கீறியிருக்காங்கள்.

அதைப்பாத்து பயங்கர கடுப்பாயிட்டுது.
பின்ன என்ன நாங்கள் ஒரு இதயத்துக்குள்ள ஒரு ஆளை வைச்சிருக்கிறதுக்கே எவ்வளவு கஸ்ரப்படுறம் உவங்கள் நாலாப்பிரிச்சு என்ன என்ன விளையாட்டு உது???

அடுத்த நாள் கேட்கோனும் என்டு இருந்தாலும் விளையாட்டுப்போட்டி மீட்டிங்கில அது மறந்தே போச்சு.

சின்ன வகுப்பில வகுப்பு பிரதிநிதியா தெரிவு செய்யப்பட்டாலே பெரிசாக கெத்துக்காட்டும்
மனசு.இந்த முறை விளையாட்டுப்போட்டி தலமை பொறுப்பே எங்களுக்குத்தான் என்கிற நிலையில்
கின்னஸில் பெயர் போடும் போது K க்கு பதில் G போட வேண்டும்.யோசித்துக்கொண்டேன்.
மற்ற கவுஸுகளை கிடக்கட்டும், என் கவுஸை பத்தி முதல்ல சொல்லணும்.

சத்தியமா எப்புடி என்ர கவுஸுக்கு கன்னை பிரிச்சாங்கள் தெரியா.
நான் வந்து பள்ளிக்கூடத்தில சேர்ந்தம் பிறகு நானறிஞ்சு ஒருக்கா கூட எங்கட கவுஸ் முதல் மூண்டுக்குள்ள வரேல்ல.என்னை ஏன் இந்த கவுஸில போட்டவங்கள் என்டு தொடக்கத்தில ஒரு சந்தேகம்.இப்ப யோச்சா சரி என்டுதான் பட்டது.
இந்த தடவையும் கடைசியாய் வந்தால்,நேருவுக்கு சிறையில் இருந்தபோது கூட இப்படி ஒரு அவமானம் நேர்ந்திராது.

ஆறு,ஏழு,எட்டில்,படிக்கும் போதெல்லாம்,ஏய் இந்த முறை நம்ம கவுஸ்தான்டா பெர்ஸ்டா வரும் என்டு கத்தி கதறிய பெரும்பாலனவன்கள் இப்ப அவனவன் கவுசிலேயே இல்லாததுதான் உண்மை.

தெஸ்தெஸ்தரோனின் இது என்ன மாயம்.

கூட்டம் பெரும்பாலும் நிக்கிறது ஸ்ரீ சுமங்கலவுக்குள்ளதான்.கேட்டா அதெல்லோடா கவுஸ் என்டுவாங்கள்.நான் இன்னும் எந்தக்கவுசுக்குள்ள நிக்கறது என்டு கண்டுபிடிக்கேல்ல. ஐ மீன் ம்க்க்கும் எந்தக்கவுஸ் என்டே கணிடுபிடிக்கேல்ல. இனித்தான் தேடோனும்.

போட்டிகள் தொடங்கி
அந்த இடத்தில யம்பிங்
நாவலுக்கு கீழ நீளம்
அங்கால கொஞ்சம் தள்ளி குண்டு
ரான் மண்டப பக்கம் தட்டு கிரவுண்டுக்கு குறுக்க ஓட்டம்

எல்லாம் பிரிஞ்சு தங்கட உச்சபட்ச திறமையை காட்டி தெரிவு செய்யப்படோனும் என்டறதில முனைப்பா இருக்க
அப்படியே வானத்தில இருந்து கமராவை ஜூம் பண்ணிட்டு வந்தால்  ஆறாவதா ஒரு கவுஸ் ஒன்டு கிரவுண்ட்டுக்கு நடுவிலயும் இல்லாம ஆகலும் தள்ளியும் இல்லாம இரண்டுக்கும் இடைல நிக்குது அந்த கவுஸுக்குத்தான் இடைக்கிட ஸ்பெஷல் அறிவிப்பு வரும் மைக் மூலமா

"மாணவர்கள் அவர் அவர்களுக்குரிய இல்லங்களில் நிற்குமாறு வேண்டப்படுகிறார்கள்" அதைக்கேட்டுட்டு அங்கால கொஞ்சம் தள்ளி நின்டா சரி.

ஏன்டா எங்கடா கோபி?
ம், அவங்கட கவுஸில இருக்கிற ஆரோ ஒரு மோடையன் குண்டா இருக்கிறவன் எல்லாம் குண்டெறியோனும் என்டு சொன்னதால ஆள்  இப்ப நாவலுக்கு கீழ நிக்குது.

ஏன்டா அப்ப ஒல்லி....பீப்...பீப்

சென்சார் போர்டு கட் பண்ணி விட்டது அந்த வசனத்தை

என்ர கண் கட்குழிக்குள்ள நின்டு சுழன்டுது.
எங்கட கவுஸ் உயரம் பாயுது.

பொடியள் எல்லாம் காப் பனை உயரத்தில கம்பத்தை விட்டுட்டு மெத்தை இல்லாம பாஞ்சு விழுந்து கொண்டிருக்க,அங்கால மெத்தைன்ர உயரத்தில கம்பத்தை விட்டுட்டு அதை கஸ்ரப்பட்டுப்பாய்ற மாதிரி பவ்லா காட்டுறாளவையள்,பார்க்க சிரிப்பு வந்தது.

பக்கத்தில சும்மா பார்த்து கொண்டு நின்ட வாத்தியாரிட்ட கேட்டன்.
ஏன்? பொடியளுக்கு எலும்பு ச்சீ மெத்தை இல்லையோ சேர்.

"அது கவுஸ் கப்டனிட்ட போய் கேள் தம்பி."
ஒரு மெத்தைதான் கிடந்ததாம்.
எடுத்துட்டு வரேக்க அவளவை தங்களுக்கு தரச்சொல்லி கேட்டுதுகளாம்.
குடுத்துட்டு வந்து நிக்கிறன்.

காலம் காலமா பொடியள் இப்டி எல்லாத்தையும் குடுத்து குடுத்தே நிலத்தில விழுந்து மண்டைய உடைக்கிறாங்கள்.
உவளவை மட்டும் மெத்தைல விழுந்து தப்பிட்றாளவை.

என்னடா??

ஓம்.,சேர்.
ஓமோம்.
ஐயா! எங்கையோ மெத்தை இல்லாம பாய்ஞ்சு இருக்கார் என்டு விளங்கிச்சுது.

மெல்ல நழுவும் போது தற்செயலாய் சரஸ்வதி பூசையில் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"கடவுள் இருக்காருடா"

அந்த கூட்டத்துக்குள்ள பாயுறது.
ஓவ் உச் கொண்டிக்கொண்டேன்.

ஓடிப்போய்
பாஞ்சு
மெத்தைல விழுந்து முன்னால வந்த பின்னலை பின்னால எடுத்து விட்டுட்டு,
கட்டை விரலை தூக்கி காட்டி
ஐஞ்சு போட்டு
சின்னப்பிள்ளையள் மாதிரி சிரிச்சு
ஐயோ!

உந்த வாத்திக்கு விசர்
அவளவ கீழ விழுந்து மண்டை உடைச்சா உவரே பொறுப்பு.என்ன இருந்தாலும்
அவன் செஞ்சதுதான் சரி.அதுவும்
உந்த உயரத்தில இருந்து விழுந்தா! நினைச்சுப்பார்கவே நடுங்குது.
என்ர கவுஸே எனக்குத்தான்.

விளையாட்டுப்போட்டிக்கான முகூர்த்த நேரம் எல்லாம் குறிச்சாச்சு.
3 நாளா தெரிவுப்போட்டி என்டு பந்தா காட்டி அதுவும் எல்லாம் முடிஞ்சுது.
மூண்டாம் நாள் முடிவில அனேக பேரோட எதிர்பார்ப்புக்களுக்கேற்ப எங்கட கவுஸ் 5வது இடத்தில இருந்துச்சு

ஆனா அண்டைக்கு முடிவிலயும் எங்கட கவுஸ் பொறுப்பாளர் வீரமா பேசினார்.

"பிள்ளையள்
இப்பவும் ஒண்டும் குறைஞ்சு போகல்ல நாளைக்கு விளையாட்டுப்போட்டில கொஞ்சம் கஸ்டப்பட்டம் என்டாலே நாலாவது இடத்துக்கு வந்துடலாம்".

"நாங்கள் சாம்பால்ல இருந்து எழும்புற பீனிக்ஸ்ஸா இருக்கோனும்."
மைண்ட் வாய்ஸ் அலறியது.
"நாளைக்குப்பார் அடி வாங்கி கொண்டு குப்புற கிடக்கேக்க கிடக்கிற சாம்பல் எல்லாம் காத்தில பறக்குதோ இல்லையோ என்டு."

நாளை.

கிறவுண்டுக்கு நடுவில ஒரு கம்பம் குத்தி சுத்திவர கயிறு கட்டி அதில கலர்கலரா கொடி கட்டி
வண்ணமயம்.
ஜகஜோதியாய் இருந்தது.

ஐஞ்சு கவஸும் தங்கட பேர் போட்டுக்கு கீழ அடைஞ்சு போய் இருந்தது.

அந்த அண்டையான் ஹை யம்ப் நிகழ்ச்சிக்கு பிறகு நான் வேற கவுஸுகளுக்கை போய் நிக்கிறேல்ல
என்ன இருந்தாலும் எங்கட "சொந்தக்கவுஸுக்கு" சப்போர்ட் பண்ணுற மாதிரி வராது.
இப்ப வரேக்கயும் கூப்பிட்டவங்கள் தாமோதரத்துக்குள்ள சர்பத் கொடுக்கிறாங்களாம் என்டு,நாக்கு போகச்சொல்லிச்சு ஆனா நான் போகேல்ல.
"கவுஸ்தான்" முக்கியம் என்றதில ஒரு வைராக்கியமிருந்தது.

எங்களின லெப்ட் ரைட் ரீம் ரெடியாய் வெளிக்கிட்டு நிண்டுது.
கோழிக்கு கொண்டை வைச்சது மாதிரி தலையிலயும் ஏதோ வைச்சு மேக்கப்போடு வெளிக்கிடுத்தி கிடந்துது.

சின்னப்பிள்ளைல உது அடிக்கிறதுக்கு பயந்தோடி ஒளிஞ்ச காலம் ஒன்டு இருந்தது.
இப்ப அதைப்பற்றி கவலை இல்லை.
என்ன விட சின்னப்பொடியள் கன பேர் இருக்கிறதால.நான் கேர்ள்ஸ் ரீம்ல ஏதாவது உதவி தேவையா என்டு பார்கறதில முனைப்பா இருந்தன்.

நேரம் தடதடத்து கொஞ்சம் கடந்து எல்லாம் தொடங்க நாசமா போனவங்கள் இரண்டு பேர் பொத்து, பொத்து என்டு மயங்கி விழுந்து போனாங்கள்.
உடனடியான ஆள் பற்றாக்குறை.அந்த நேரம் பார்த்து மற்றவங்களும் எல்லாம் ஒளிய பொறுப்பு எனக்கு முன்னால வந்து நின்டார்.

நீர் உம்மட கவுஸுக்கு ஒரு பொயிண்ட் எடுத்து தாரதுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு

பெக்கோ விட்டு கிண்டினது போல ஒரு பள்ளம்.

கண்டு கொள்ளாம நானும் தலையில கொண்டையை குத்திக்கொண்டு இறங்கி நிண்டன்.

இரண்டாவது ஆளுக்குகாக ஒருதனை கொண்டு வந்து விட்டாங்கள்.அவன் வலது பக்க மூலைல கடைசி ஆள். ஜஸ் ரைட் சொல்லோணும்,நாசமா போனது அடிக்கடி என்னை நோண்டி என்ன அண்ணா சொல்லோணும் நீங்க இதில வாங்களன், என்டு கொண்டிருந்தான்.அவனுக்கு வாயில் ஐஸ் வரவே இல்லை.
நான் எங்கட இங்கிலிஸ் சேரை மானசீகமா நினைச்சுக்கொண்டு
அவன் ஞாபகம் வைச்சுக்கொள்ளுக்கூடின மாரி சொல்லிக்கொடுக்க அது சிக்கலாப்போச்சு.

சரியா விசிட்டர்ஸ்க்கு முன்னால போகேக்க நான் மெல்லமா சைகை காட்ட கத்தினான் பெரிய குரல்ல

ஐ...ஸ்...வ...ர்யா
கேட்ட எல்லாம் திகைச்சுப்போச்சுதுகள்.

நான் ஐஸ்வர்யா ராயில வர்யாவை எடுத்துட்டு ஐஸ் ராய் என்டு மெல்லமா சொல்லுடா அது எல்லாம் சரியா கேட்குமென்ட சொல்ல எல்லாத்தையும் மாத்திப்போட்டு கத்திப்போட்டான்.
அதுக்குள்ள சொல்லிட்டு என்னை திரும்பி பார்த்து எப்படி?? என்டு ஒரு வெற்றிச் சிரிப்பு வேற.
அந்த கடுப்போட கை வீசிக்கொண்டு போகேக்கதான் பார்த்தன் என்ர "கவுஸ்" என்ர "கவுஸ்" என்டு நான் உருகின கவுஸே வேற கவுஸுக்குள்ள நிண்டு கை தட்டிச்சுது.
எல்லாக்கடுப்பையும் கொண்டுபோய் அவன்ல காட்டி கும்மினது மட்டும்தான் அந்த முறை புதுசா நடந்தது,
மற்றதெல்லாம் வழமை போல கிழக்கில உதிச்சு மேற்கில மறைஞ்சது.

லாஸ்ட் எபியில் சந்திக்கலாம்.....

No comments:

Post a Comment