About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, April 8, 2015

இரட்டைப்பின்னல்காரி

யாரிந்த இரட்டைப்பின்னல்காரி? என்று கேட்பதற்கு முன்னர்
இது ஒரு திட்டமிடப்படாத திடீர் பதிவு.அதற்கு காரணமாய் அமைந்தது.

ஒரு வித
*துக்கமான
*துக்கடாவான
*விசேட
*செய்தி.

ஜெஸ்ஸின்ர ஹேர் ஸ்டைல் தொடங்கி மெஸ்ஸின்ர ஹேர் 
ஸ்டைல் வரை ஏன்
சமந்தா என்டா கேர்ளிங் கேர் அமைரா என்டா ஸ்ரெய்டான கேர் என்டு டெவலப் ஆக ஆக அதையெல்லாம் பார்த்து ரசிச்ச எனக்கு சொறி எங்களுக்கு எப்பவுமே எனி டைம் பேஃவரிட்டாய் ஒரு ஹேர் ஸ்டைல் இருந்தது என்டா அது இரட்டைப்பின்னல்தான்.

கேர்ளிங்கோ,ஸ்ரெய்டோ,குட்டையோ,நெட்டையோ,கறுப்போ,செம்பட்டையோ,
இரட்டைப்பின்னலை இன,மத,ஜாதி பேதமின்றி எல்லாருமே போட்ட இடம் ப்பள்ளிக்கூடம்.

நேர்சரி படிக்கேக்க ஒரு கேர் ஸ்டைல் இருந்தது.சின்ன வயசுதானே.அதால கொஞ்சமாய்தான் முடி இருக்கும் அனு என்கிற அனுச்சித்திராவுக்கு.அதை சுத்திவர வழிச்சு இழுத்து விட்டு உச்சியின் இரண்டு பக்கமும் ஒரு கைபிடியளவுக்கு முடியை திரட்டி அதுக்கு வூல்பாண்டை சிவப்போ,நீலமோ ஏதாச்சும் ஒரு கலர்ல அவள் அம்மா அடிச்சு விட்டு இருப்பாள்.முன் பக்கம் இரண்டு வண்டுக்கிளிப் குத்தியிருக்கும்.அதுக்கு பேர் கீரைப்பிடி கேர் ஸ்டைல்.



அப்டி விதம் விதமான கலர்ல போட்டுட்டு வந்து பக்கத்தில இருக்கிற அனுவோட வூல்பாண்டையும் கிளிப்பையும் பிடுங்கி கழட்டுறதுதான் நேர்சரில என்னோட முதலாவது முக்கிய தொழில் ஆயிருந்தது.அதைப்பார்த்து விட்டு அம்மாக்காரி அலிஸ்பாண்ட் போட்டு அனுப்ப தொடங்கினாள் பின்னர் வந்த நாட்களில்.அதோடு கீரைப்புடி மிஸ்ஸானது.நான் அலிஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை.

கடோசியாய் அனுவை அண்மையில் கண்ட போது நிறைய தலைமயிர் இருந்தது. ஆனால் கழட்டுவதற்கு ஒரு சின்ன கேர் கிளிப்பை கூட காணவில்லை.சுதந்திரமாய் பறக்கவிட்டிருந்தாள் காற்றில்.முப்பது செக்கண்டுக்கு ஒரு தடவையாவது நெற்றியில் விழுந்த இரண்டு முடியை இழுத்து விட்டுக்கொண்டு...

வூல்பாண்ட் போடுவதில்லையா? என்று கேட்டேன் பிடுங்குவதற்கு நீயில்லையே!!! என்றாள் சிரித்துக்கொண்டே.குறும்புக்காரி.

பிறைமறியில் ஓரிரு பேரை கீரைப்புடியில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது.ஆனால் அதையெல்லாம் அப்போது பார்த்து ரசிப்பதற்கு பக்குவம் கிடையாது.

பார்த்து ரசிக்கும் பக்குவமான வயசு(க்கு) வந்த போது எல்லாருமே இரட்டைஐடை போட்டுக்கொண்டிருக்க அதிலே இருந்த ஒருவிதமான அழகு தெரிந்தது.ஒரு சிறு பிள்ளைத்தனம் இருந்தது.நாற்பது வயது பெண் இந்த இரட்டை ஜடை போட்டால் நிச்சயமாய் பத்து வயதாவது குறைத்து காட்டும்,காட்டியது.

இரட்டைப்பின்னலை போட்டு விட்டு சிலர் ஒன்றை தூக்கி முன்பக்கம் விட்டும் சிலர் இரண்டையும் முன்னாலே தூக்கிப்போட்டும் கொண்டு வருவதிலிருந்து நிறைய விடயங்களை மறை முகமாய் ஊகிக்க முடிந்தது.அந்த வேளைகளில்.

பின்னல் தொடங்கி இரண்டாவது சுருக்கில் ஒரு நித்தியகல்யாணி இருந்தால் அது அவள்தான்.

கனகாம்பரம் இருந்தால்?
அது உவள் !!

அப்போ ரோசா இருந்தால்?
இரட்டைப்பின்னலுக்கு ரோசா வைப்பதில்லையாம்.யாரோ சொன்னார்கள் என் தேடலின் போது.

இப்படி அதிலேயும் ஒரு தனித்துவம்.

ரீசன்டாய் கோயில் திருவிழா மூட்டம் ராகீ  அடி வாங்க காரணமும் இந்த இரட்டைப்பின்னல்தான்.சிங்கன் இடப்பக்க பின்னல்ல பூ செருவியிருந்தது பார்த்துட்டு விஷீ! என்டு பின்னால போய் கூப்பிட அவள் திரும்பேல்ல .
காதுக்கு பக்கத்தில போய் எடியே? விசித்திரா என்டு பெரிசா கத்தியிருக்கிறார்.
மூக்கால ரத்தம் வரேக்கான் சிங்கனுக்கு தெரிஞ்சிருக்கு அது குண்டுமணின்ர தங்கச்சியார் என்டு.உவருக்கு நல்லா வேணும்.பின்ன என்ன இரட்டைப்பின்னல்ல இடப்பக்கம் பூவைச்சிருந்தா அது உவற்ற ஆளே.மிச்சத்துக்கு விசயத்தை கேள்விப்பட்டு விசித்திராவும் பேந்து மொங்கியிருப்பள் எப்பிடியும்.

இப்படி ஒவ்வோரு இரட்டைப்பின்னலுக்கு பின்னாடியும் ஒருத்தனின் இரத்தக்கதை இருக்கும்.

ஆனால் பெரும்பாலான பொண்ணுங்களுக்கு நாங்கள் இந்த இரட்டைப்பின்னலை ரசிக்கின்ற அல்லது ரசித்த விடயம் தெரியாது என்று நினைக்கின்றேன்.ஸ்கூல் முடிந்து ரியூசன் வரும் போது பத்தில் எட்டாச்சும் பின்னலை ஒற்றையாக்கியோ அல்லது விரித்து விட்டோ நேர் வகிடை கன்னப்பக்கம் சாய்த்தோ அல்லது கோணலாக்கியோ கொண்டுவர முகத்தில் இருந்த மொத்த தேஜஸ்ஸும் மாயமாகி இரவு பார்த்த இங்கிலிஸ் கொரர் மூவி ஞாபகம் வருவது அதுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.

பெண்கள் இரட்டைப்பின்னல் போட்டால் குடும்பம் இரண்டு படும் என்று ஒரு சுப்பரிஸஸ் தியரியை அந்த டைம்ல யாரோ ஒரு ரிஷி அடிச்சு விட்டுட்டு வேற போயிருக்கிறார்.இந்த இரட்டை ஜடை மறைய அதுவும் ஒரு மகத்தான காரணமாய் அமைந்தது

இந்த இடத்திலே எனக்கொரு டவுட் கனம் கோர்ட்டார் அவர்களே?!!
இரண்டா பிரிச்சா இரண்டுபடும் என்கிறீர்களே!?
அப்போ  Full ஆ விரிச்சு விட்டால் OMG,.mind blowing.

மண்டுவமே!!! இரட்டை பின்னலை பற்றி இவ்ளோ கதைக்கிறியே உனக்கெங்க தெரியப்போகுது அத பின்றதில இருக்கிற கஸ்டம் என்று ஒரு சைட் கேட்கும்.உனக்கு பின்ன தெரியுமான்னு இன்னொரு சைட் கேட்கும்.எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்
ஆமாதான்.இதெல்லாம் அம்மா முடியை பிடிச்சு - போட்ட பின்னலை அவிழ்கிறது தொடங்கி திரும்பி பின்றது வரைக்கும் எப்பவோ பழகிட்டனாக்கும்.

இப்போது இந்த பதிவுக்கு காரணம் "இருந்த ஒரு வடையும் போச்சே" என்கிறது மாதிரியான ஒரு நியூஸ்.

அண்மையில் எங்கள் பள்ளிக்கூடத்தில் கொண்டு  வரப்பட்ட பல புதிய சட்ட கம திட்டங்களுள் இந்த இரட்டைப்பின்னலை பிரித்து ஒற்றையாக்க வேண்டும் என்பதும் ஒன்றென்று தெரியவந்தது.அப்படி செய்யக்கூடாது என்று இனி என்ன எதிர்பைக்கிளப்பி போராட்டமா நடத்த முடியும்.?.அதுக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது நாட்டில்.

We'll miss it. என்று அடித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்.

இனி பொண்ணுங்களுக்கு ஒற்றைப்பின்னலை தூக்கி முன்னால விடுறதும் கஸ்டம்
பசங்களுக்கு பின்னா(ல்)ல இருந்தே யாருன்னு கண்டு பிடிக்றதும் கஸ்டம்.

"We all will miss that இரட்டைப்பின்னல்காரி"










By:அற்பபிறவி.


No comments:

Post a Comment