About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, April 1, 2015

காமிஸோடு ஒரு காதல்


தொடர்ச்சி....

கௌபாய் ஸ்பெசலுக்கு பின்னர் வாங்க வேண்டும் என்று பேராசைப்பட்ட மிக பெரியயய்ய காமிக்ஸ் இரத்தப்படலத்தின் கொம்பிளீட் கலக்சன்.800 பக்க இராட்சதம்-ஐம்போ ஸ்பெசல் என்று லயன் வெளியிட்டது. வில்லியம் வான்சின் துல்லியக்கைவண்ணம்.Bourne மூவி சீரிஸின் கதை இதுதான்.இன்று வரை வாசிக்கவில்லை.சாவதற்கு இடையில் வாசித்து விடுவேன்-வைராக்கியம்.



காமிக்ஸ் என்ற அந்த இரண்டாம் உலகம் என் வாழ்க்கையில் அதிகமாய் உருண்ட இடம் வீட்டை தொடர்ந்து பள்ளிக்கூடம்தான்.

இந்த இடத்திலே விபுலன் அண்ணாவுக்கு ஒரு பெரிய ஷொட்டு வைக்க வேண்டும் அடுத்த பாகத்தின் ஹைலைட்டை வேளைக்கே Fb கொமண்ட் பாரில் ரிவீல் பண்ணியதற்காக.-வெல் பிரிடிக்சன்.

லயன்,முத்து காமிக்ஸுகளில் ரசிக்க கூடிய மிக முக்கியமான விடயம் ஒரு மசாலா பட ரேஞ்சுக்கு ஹீரோக்களை கைவசம் வைத்திருந்தது.அக்சன்,த்திரில்லர்,சயன்ஸ்பிக்சன்,காமெடி என்று ஒரு மஜாவான கலவை.

அக்சன் டிரக்கிற்கு அடுத்து அதிகம் இரசித்தது காமெடி.அதில் அடித்து தூள் கிளப்பியது லக்கி லூக் வித் ஜாலிஐம்பர்-லக்கியின் செல்லக்குதிரை,பேசக்கூடியது.ஆனால் லக்கியோடு மட்டும்தான் .தடாலடியான கார்ட்டூன் கௌபாய்.லூக்கின் பிரதான எதிரிகளாய் நாலு மொள்ளமாரிகள் கதையில் ஊடுருவுவார்கள் எப்போதுமே-டால்டன் பிரதர்ஸ்.



லக்கியிற்கு அடுத்த கோமாளிக் குறூப் ஆக வருவது வுட்சிட்டியின் சிக்பில் அன்ட் கோ குறூப்.இவர்களின் பின்புலம் கொஞ்சம் பெரிசு.இதைவிட மதியில்லா மந்திரி,ஜாலி என்று ஏகப்பட்ட காமெடி ஹீரோக்கள்.

இதையெல்லாம் ரசித்து சிரித்த தலையாய இடத்தில்,இனம் இனத்தோடதான் சேரும் என்ற வாசகத்தை பொய்யாக்ககூடாது என்ற கொள்கையில் ஆறாம் ஆண்டிலே
எனக்கென்றொரு சோத்தாங்கையும் பீச்சாங்கையும் எக்ஸ்ராவாய் வந்து சேர
இந்த இரண்டு கைகளினூடக என் கைகளுக்கும் என் கைகளினூடாக அந்த கைகளுக்கும் காமிக்ஸ் பரிமாற்றம் பக்காவாய் நடைபெற்றது.

அதே அரதப்பழசான டெக்னிக்தான்.
தொண்ணூறு டிகிரியில் நடப்பு பாடத்துக்கான புத்தகத்தை மேசையில் நிறுத்தி அதனுள் காமிக்ஸை வைத்து கண்ணியமாய் படிப்பது.

இதில் ஒரு சில பாரிய பிரச்சினைகள்.அதற்கு முதல் முக்கியமான இரண்டு ஹீரோ,ஹீரோயின் பற்றி எழுத வேண்டும்.

காங்கோ ஸ்பெசலிஸ்ட் மாடஸ்தி,அன்ட கத்தி ஸ்பெசலிஸ்ட் வில்லி கார்வின்.



இரண்டு பேரும் லவ்ர்ஸ் என்ற பாணியில் ராணியின் பக்கங்களும் நண்பர்கள் என்ற ரீதியில் லயனும் கதைகளை வெளியிட்டதில் எனக்கு எது உண்மை என்பதில் இன்னும் சந்தேகம்.படிப்பில கூட இப்பூடி வந்ததில்லை.

"வாசிக்காதே வயலென்ஸ் என்று வாத்தியார் சொன்னாலும் வைரம் கடத்துறத விட காமிக்ஸ் கடத்துறத மிக துல்லியமாக செய்தம் வகுப்பில"

அருமையாக சொன்னீர் அண்ணரே.!!
வாத்தியாருக்கு அதில வயலன்ஸ் இருந்தது மட்டும்தான் தெரியும் சயன்டிபிஃக் ஹீரோ மார்டினையெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமே இல்லை.(ம்க்கும்)

அதால நாங்களும் வாங்குகளுக்கு கீழாலும் பாடப்புத்தகங்களுக்குள்ளாயும் சிமக்ளிங்கில் பெரிய ஜீனியஸ் ஆனாலும் அவ்வப்போது கஸ்டொம் ஆபிசில் சில புத்தகங்கள் மாட்டிக்கொண்டது என்னவோ துரதிஷ்டம்தான்.

வந்த ஒரு சில பிரச்சினைகளுள்
*முதலாவது புத்தகத்துக்குள் வைத்து வாசிக்கும் போது வெளியில் இருக்கும் புத்தகம் சமநிலை குழம்பி விழுந்துபோகும்.அதுவும் தெரியாமல் வாத்தியார் வந்ததும் தெரியாமல் ஒரு ஆழ்மயக்க நிலையில் வாசித்துக்கொண்டிருக்க

"பளார்" என்று அறையும் போது நிஜவுலகம் தெரியும்.குறைந்தது இரண்டு தடவையாவது இப்படி மாட்டுப்பட்டு அறைவாங்கியிருப்பேன்.

ஓ.எல்லுக்கு கீழ இங்கிலிஸ் படிப்பிக்றதுக்கு ஒரு சேர் இருந்தார் (ஏன் இப்படி எழுத்திலே ஒரு பய+பக்தி என்பது போக போக தெரியும்.)
அந்தாள் பார்த்தாலே பின்பக்கம் இரண்டும் நோகும்.அப்புடி ஒரு நோக்குவர்மம் தெரிஞ்ச ஆள். வகுப்பு கொரிடோரால் நடந்து போகும் போது மயான அமைதி குடி கொள்ளும்.மொனிட்டரின்ர காச்சட்டைதான் கூட நடுங்கும்.ஏதாவது குழப்படி என்டா முதல்ல சிங்கன்ர கன்னம்தான் வீங்கும்.

விதி வலியது.எட்டாம் ஆண்டில பாடம் எடுக்க வந்தா பரவாயில்ல.வகுப்பு  வாத்தியாரயும் அந்தாளுக்கு புரமோசன் கொடுத்து விட.

கொஞ்சநாள் அமுங்கி இருந்து விட்டு ஒரு கிழமை போக புத்தகத்துக்குள்ள புத்தகம் வைக்க தொடங்க
அடுத்த நாளே டெக்ஸின் "பயங்கர பயணிகள்" மாட்டிக்கொண்டது.அடிவாங்க முதலே அழலாமா? என்று திட்டம் போட.
பாடம் முடிந்து பெல் அடிக்க
அடி விழவில்லை.புத்தகம் போய்விட்டது.இதற்கு அடித்துவிட்டு புத்தகத்தை தந்திருக்கலாம்.

அடுத்த நாள்.கூப்பிட்டார்.
எதையும் தாங்கும் இதயத்தோடு போனேன்.

முதலாவது ஆச்சர்யம்.
புத்தகத்தை தந்தார்!

"டோன்ட் ரீட் இற் வென் ரீச்சர் இஸ் இன் த கிளாஸ்.டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?"

இதுக்கு புத்தகத்தை தராமலே விட்டிருக்கலாமே.ஐயோ இப்ப என்ன சொல்றது.யெஸ் ஆ நோவா? நோகுதே.அப்ப நோவா?

தலையை இடதும் வலதுமாய் அசைத்து மேலும் கீழுமாய் ஆட்டி ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க .

கிட்ட கூப்பிட்டு மெல்லமாய் தமிழ்லயே கேட்டார்.

""இது முதலாம் பாகமடா!
இதின்ர இரண்டாம் பாகம் வைச்சிருக்கிறியோ?"

     !!!!!!!!!













அற்பபிறவி.
*பி.கு - இந்த காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதலுக்கு முற்றும் போட எனக்கு விருப்பமில்லை.இது என்றுமே தொடரும்...


No comments:

Post a Comment