காவல் என்ற சுயநலத்தில
நாய்க்கு பிஸ்கட்டும்
பிஸ்கட் என்ற சுயநலத்தில
நாய் காவலும் இருக்க....
இடையில் 'நன்றி' எங்கே என்று நிறைய
நாளாய் தேடினேன்
தேடிக்கண்டுகொண்டேன்.
எல்லா பிஸ்கட்டுக்களிலும்
செல்பிஷ்கிறீம் அப்பியிருக்கிறது.
எல்லா வால்களிலும்
கிறட்டிறியூட் ஒட்டியிருக்கிறது.
நடந்தது இதுதான்.
இது "முன்பொரு காலத்தில்
என்று" என்று தொடங்க வேண்டிய கதை.
ஆதாம்,ஏவாள் ஐ படைத்து விட்டு
கடவுள் மிஞ்சியிருந்த தசை துண்டுகளை
சேர்த்து ஆறறிவு, உயிர் கொடுக்க வந்தது நாய்.
"நீ நன்றியோடு இருப்பாய்?"
"யாருக்கு?"
"அது உன் விருப்பம்!"
"நாய் யோசித்து தலையாட்டியது."
நன்றியுள்ள நாயை படைத்த விசயம்
நன்றி கெட்ட சாத்தானுக்கு தெரியாது.
கிச்சிலி பழத்தில் சூனியம் வைத்து
தின்று பார் கிளு கிளுப்பாய் இருக்கும் என்று
ஏவாளிடம் நீட்ட
அந்தக்கிச்சலியை எச்சில் படுத்தி
ஆதாமோடு சேர்ந்து சாப்பிடும் போது
நாய் வந்தது இடையில்.
சாத்தான் பயந்தான் திட்டம பலிக்காதோ என்று...
நாய் கெஞ்சுவது போலிருக்க
எஞ்சியதைப்போட்டான் ஆதாம்.
நிலத்தில் கிடந்த அப்பிள்
நேரே நின்ற மனிதர்கள்
மறைந்து நின்ற சாத்தான்.
மூன்றையும் பார்த்த நாய்
பழத்தை தின்றது.
தின்று முடிய கடவுள் வர
தொடர்ந்தது,
வழக்கு நடந்தது.
ஆதாமையும் ஏவாளையும் விசாரித்து
தண்டனையாய் அவர்களுக்கு ஆயுள் வழங்கப்பட்டு
நன்றி பிடுங்கப்பட்டது.
நாயிடம் வந்த கடவுள்.விசாரித்தார்.
"ஏன்?"
"நீங்கள் படைத்த மனிதர்களே அதை தின்றார்கள்.
உங்களுக்கு நன்றியாயுள்ளவர்களுக்கு நான் நன்றியாய் இருந்தேனே
நன்றிதான் என் படைப்பின் முக்கியம்"
யோசித்த கடவுள் நாயிடம்
நன்றியை விட்டுவிட்டு
ஆறாவது அறிவை மட்டும் பிடுங்கி கொண்டு
போகும் போது சொன்னார் கோபத்தில்
"நீ ஒரு நாய்"
"நீயும் செத்து விடுவாய் ஒரு கட்டத்தில்"
நாய் எண்ணிச் சிரித்துக்கொண்டது.
"நானொரு நாய்"
######
#அற்பபிறவி#
No comments:
Post a Comment